மேலும் அறிய

அடிப்படை வசதிகள் இன்றி அலங்கோலமாய் காட்சியளிக்கும் திருவாரூர் புதிய பேருந்து நிலையம்

குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தருவதுடன் வெளியூரிலிருந்து வரும்  பயனிகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும்

பேருந்து நிலையம் திறந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அடிப்படை வசதிகள் இன்றி அலங்கோலமாய் காட்சியளிக்கும் திருவாரூர் புதிய பேருந்து நிலையம். 

திருவாரூரில் இயங்கி வந்த பழைய பேருந்து நிலையம் போதிய  இடவசதி இன்றியும் நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் நிலையில் இருந்த காரணத்தினால் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு திருவாரூர் விளமல் அருகே தியாகபெருமாநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடந்ததால்  8 ஆண்டுகள் கழித்து இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ரூ 13 கோடியே 36 லட்சம் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.இந்த புதிய பேருந்து நிலையத்தின் முகப்பு நுழைவாயில் பேருந்துகள் உள்ளே வருவதற்கும் வெளியே சென்று முக்கிய சாலையை அடைவதற்குமுள்ள வழியானது கடந்த 2020 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்தது. இதனையடுத்து சேதமடைந்த சாலைகளை ஜல்லி சிமெண்ட் கலவையை கொட்டி அப்போது தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெய்த பருவ மழையின் காரணமாக மீண்டும் சாலைகளில் பல இடங்களில் குண்டு, குழியுமானது. இதனால் பேருந்துகள் பேருந்து நிலைத்திற்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே இடறி விழும் அளவிற்கு பள்ளங்கள் இருந்து வருகிறது.


அடிப்படை வசதிகள் இன்றி அலங்கோலமாய் காட்சியளிக்கும் திருவாரூர் புதிய பேருந்து நிலையம்

இந்த புதிய பேருந்து நிலையத்தில் திருவாரூர் நகராட்சி சார்பில் இலவச கழிவறை கட்டித் தரப்பட்டது. ஆனால் இந்த கழிவறை நகராட்சியால் உரிய பராமரிப்பு செய்யப்படாத காரணத்தினால் யாரும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்த இலவச கழிவறை என்பது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது அதில் மது அருந்துவது கஞ்சா புகைப்பது போன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இலவச கழிவறை அசுத்தமாக இருக்கும் காரணத்தினால் தனியார் கழிவறைக்கு பயணிகள் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது அதன் காரணமாக ஒப்பந்தம் எடுத்துள்ள நபர்கள் கழிவறைக்கான கட்டணத்தை கூடுதலாக வசூலிப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதேபோன்று புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி இருசக்கர வாகன பாதுகாப்பாகத்தை ஒப்பந்தம் எடுத்துள்ளவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.


அடிப்படை வசதிகள் இன்றி அலங்கோலமாய் காட்சியளிக்கும் திருவாரூர் புதிய பேருந்து நிலையம்

மேலும் புதியபேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று எழுதி மட்டுமே இருக்கிறது அதில் இருக்கிற இரண்டு பைப்பிலும் தண்ணீர் வருவதில்லை எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வேளாங்கண்ணி நாகூர் கோடியக்கரை போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பேருந்துகள் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் வந்துதான் செல்ல வேண்டும். இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கான எவ்வித வசதியும் இல்லாததால் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் நிலவுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த பேருந்து நிலையம் மது பிரியர்களின் கூடாரமாகவும் தனிமையை விரும்பும் காதலர்களின் புகலிடமாகவும் இருப்பதாகவும் மேலும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பேருந்து நிலையம் இருப்பதாகவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் இது போன்ற நிலை உள்ளது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது என பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பலமுறை நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தருவதுடன் வெளியூரிலிருந்து வரும்  பயனிகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்பதே திருவாரூர் நகர பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
Senyar storm: அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
Senyar storm: அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
Internet: இந்தியாவில் இணைய வசதி அறிமுகமானது எப்போது? இன்டர்நெட் இன்றி இஸ்ரோ இயங்கியது எப்படி?
Internet: இந்தியாவில் இணைய வசதி அறிமுகமானது எப்போது? இன்டர்நெட் இன்றி இஸ்ரோ இயங்கியது எப்படி?
Flight Ticket: இனி மொத்த காசும் போகாது..! விமான டிக்கெட் கேன்சல் செய்வதில் மாற்றம் - எவ்வளவு திரும்ப கிடைக்கும்?
Flight Ticket: இனி மொத்த காசும் போகாது..! விமான டிக்கெட் கேன்சல் செய்வதில் மாற்றம் - எவ்வளவு திரும்ப கிடைக்கும்?
Tomato Price: ஒரு கிலோ இவ்வளவா.!! தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை- அலறும் இல்லத்தரசிகள்
ஒரு கிலோ இவ்வளவா.!! தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை- அலறும் இல்லத்தரசிகள்
Embed widget