மேலும் அறிய

திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

அலிவலம் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க  தெருவிளக்கு சரி செய்யும் பணியில் ஞானப்பிரகாஷ் ஈடுபட்டு வந்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் சாதனங்களை மழை நேரங்களில் எவ்வாறு பாதுகாப்பாக கையாள்வது மின் இணைப்புகள் போன்றவற்றில் எவ்வாறு எச்சரிக்கையாக செயல்படுவது மழை நேரங்களில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிடம் எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது போன்றவற்றை குறித்து  பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மின்சார வாரியத்தின் சார்பாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் மின்சார வாரிய அலுவலகங்களிலும் மழை புயல் போன்ற இயற்கை சீற்ற நேரங்களில்  பொதுமக்கள் மின்சாதனங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மின் சாதனங்களை அலட்சியமாக பயன்படுத்துவோர் மற்றும் மின்சார வேலைகளில் ஈடுபடுவோர் கவனக்குறைவாக செயல்படுவதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதில் குறிப்பாக திருவாரூர் அலிவலத்தைச் சேர்ந்த மின்சார வாரியத்தில் லைன் மேனாக பணிபுரியக்கூடியவர் கவனக்குறைவாக இருந்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் அலிவலம் புது தெருவை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகன் 28 வயதான ஞானபிரகாஷ். இவர் அம்மாபேட்டை மின்சார வாரியத்தில் லைன்மேனாக கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 28 வயதான இவருக்கு திருமணத்திற்காக பெற்றோர்கள் வரன் பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில்  சனி, ஞாயிறு விடுப்பு எடுத்து  சொந்த ஊரான அலிவலத்திற்கு ஞானப்பிரகாஷ் வந்துள்ளார். 


திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

அவர் சொந்த ஊருக்கு வரும்போது  உறவினர் மற்றும் நண்பர் வீடுகளில் மின்சாதனம் மற்றும் மின் இணைப்புகளில் ஏதேனும் பணிகள் இருந்தால் பார்த்து கொடுப்பது வழக்கம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனை அவர் நட்பின் அடிப்படையிலும் அதே சமயம் வருமானத்திற்காகவும் இது போன்ற சிறிய பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அலிவலம் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க  தெருவிளக்கு சரி செய்யும் பணியில் ஞானப்பிரகாஷ் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவர் சற்று கவனக்குறைவாக இருந்ததால் அவர் மீது மின்சாரம் தாக்கி உள்ளது இதில் ஞானபிரகாஷ்  மின்சாரம் தாக்கி வீசப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த  அருகில் இருந்த பொதுமக்கள் அவரை ஆம்புலன்ஸிற்காக காத்திருக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்து விரைவாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 


திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

இது குறித்து உடனடியாக திருவாரூர் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் தாலுகா காவல்துறையினர் ஞானபிரகாஷின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவருக்கு உடற்குறைவுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஞானபிரகாஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணையினையும் தாலுகா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  திருமணத்திற்கு வரன் பார்த்து வந்த நிலையில் 28 வயதான ஞானபிரகாஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உறவினர்கள் நண்பர்கள் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும்  பெருந்திரளாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு குவிந்ததுடன் கண்ணீர் விட்டு அழுதது காண்போரின் நெஞ்சை கணமாக்கியது. மின்சார வாரியத்தில் ஊழியராக பணிபுரியக்கூடிய ஞானப்பிரகாஷ் கவனக்குறைவாக செயல்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகாத 28 வயதான மின்சார வாரிய ஊழியர் ஞானப்பிரகாஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
International Yoga Day 2025: உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
International Yoga Day 2025: உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
India Vs Pakistan: “நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
“நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்
"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை" உறுதியாக சொன்ன பிரதமர் மோடி
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
Embed widget