மேலும் அறிய

திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

அலிவலம் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க  தெருவிளக்கு சரி செய்யும் பணியில் ஞானப்பிரகாஷ் ஈடுபட்டு வந்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் சாதனங்களை மழை நேரங்களில் எவ்வாறு பாதுகாப்பாக கையாள்வது மின் இணைப்புகள் போன்றவற்றில் எவ்வாறு எச்சரிக்கையாக செயல்படுவது மழை நேரங்களில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிடம் எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது போன்றவற்றை குறித்து  பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மின்சார வாரியத்தின் சார்பாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் மின்சார வாரிய அலுவலகங்களிலும் மழை புயல் போன்ற இயற்கை சீற்ற நேரங்களில்  பொதுமக்கள் மின்சாதனங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மின் சாதனங்களை அலட்சியமாக பயன்படுத்துவோர் மற்றும் மின்சார வேலைகளில் ஈடுபடுவோர் கவனக்குறைவாக செயல்படுவதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதில் குறிப்பாக திருவாரூர் அலிவலத்தைச் சேர்ந்த மின்சார வாரியத்தில் லைன் மேனாக பணிபுரியக்கூடியவர் கவனக்குறைவாக இருந்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் அலிவலம் புது தெருவை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகன் 28 வயதான ஞானபிரகாஷ். இவர் அம்மாபேட்டை மின்சார வாரியத்தில் லைன்மேனாக கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 28 வயதான இவருக்கு திருமணத்திற்காக பெற்றோர்கள் வரன் பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில்  சனி, ஞாயிறு விடுப்பு எடுத்து  சொந்த ஊரான அலிவலத்திற்கு ஞானப்பிரகாஷ் வந்துள்ளார். 


திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

அவர் சொந்த ஊருக்கு வரும்போது  உறவினர் மற்றும் நண்பர் வீடுகளில் மின்சாதனம் மற்றும் மின் இணைப்புகளில் ஏதேனும் பணிகள் இருந்தால் பார்த்து கொடுப்பது வழக்கம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனை அவர் நட்பின் அடிப்படையிலும் அதே சமயம் வருமானத்திற்காகவும் இது போன்ற சிறிய பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அலிவலம் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க  தெருவிளக்கு சரி செய்யும் பணியில் ஞானப்பிரகாஷ் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவர் சற்று கவனக்குறைவாக இருந்ததால் அவர் மீது மின்சாரம் தாக்கி உள்ளது இதில் ஞானபிரகாஷ்  மின்சாரம் தாக்கி வீசப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த  அருகில் இருந்த பொதுமக்கள் அவரை ஆம்புலன்ஸிற்காக காத்திருக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்து விரைவாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 


திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

இது குறித்து உடனடியாக திருவாரூர் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் தாலுகா காவல்துறையினர் ஞானபிரகாஷின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவருக்கு உடற்குறைவுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஞானபிரகாஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணையினையும் தாலுகா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  திருமணத்திற்கு வரன் பார்த்து வந்த நிலையில் 28 வயதான ஞானபிரகாஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உறவினர்கள் நண்பர்கள் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும்  பெருந்திரளாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு குவிந்ததுடன் கண்ணீர் விட்டு அழுதது காண்போரின் நெஞ்சை கணமாக்கியது. மின்சார வாரியத்தில் ஊழியராக பணிபுரியக்கூடிய ஞானப்பிரகாஷ் கவனக்குறைவாக செயல்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகாத 28 வயதான மின்சார வாரிய ஊழியர் ஞானப்பிரகாஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!
ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் கவனஈர்ப்பு போராட்டம்
ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் கவனஈர்ப்பு போராட்டம்
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
K Bhagyaraj: நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
TVK Vijay: திமுக MP, சாராய ஆலை உரிமையாளர் மகனுக்கு தவெகவில் பதவி பார்சல்? CM விஜயின் மாற்றம் இதுவா?
திமுக MP, சாராய ஆலை உரிமையாளர் மகனுக்கு தவெகவில் பதவி பார்சல்? CM விஜயின் மாற்றம் இதுவா?
Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!
Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!
K.Bhagyaraj: திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
Bhagyaraj Movies: காலத்தால் அழிக்கவே முடியாத பாக்யராஜின் 10 படங்கள்! என்னென்ன?
காலத்தால் அழிக்கவே முடியாத பாக்யராஜின் 10 படங்கள்! என்னென்ன?
Embed widget