மேலும் அறிய

திருவாரூர்: இறந்தவரின் உடலை கொட்டும் மழையில் விவசாய நிலத்தில் தூக்கிச் சென்ற அவலம்

கோட்டூரில் இறந்தவரின் உடலை கொட்டும் மழையில் விவசாய நிலத்தில் தூக்கிச் சென்ற அவலம். பல ஆண்டுகளாக சாலை மற்றும் பாலம் வசதி கேட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் புகா

திருவாரூர் மாவட்டம் நான்கு நகராட்சி, ஏழு பேரூராட்சி, 10 ஊராட்சி ஒன்றியங்கள், 534 ஊராட்சிகள் என பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டது. மேலும் மாவட்டம் முழுவதும் 10,000 மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த நிலையில் இன்றளவும் பல்வேறு கிராமங்களில் சுடுகாட்டிற்கு செல்லக்கூடிய சாலை வசதி இல்லாத காரணத்தினால் விவசாய நிலத்தில் இறங்கியும் ஆற்றில் இறங்கியும் சடலத்தை தூக்கிச் செல்லும் அவல நிலை இன்றளவும் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக பல கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு தரப்பு மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோட்டூர் அருகே மேலப்பனையூர் தெற்கு தெரு கிராமத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய சாலை மற்றும் பாலம் வசதி இல்லாததால் கொட்டும் மழையில் விவசாய நிலத்தில் இறங்கி தூக்கிச் சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.


திருவாரூர்: இறந்தவரின் உடலை கொட்டும் மழையில் விவசாய நிலத்தில் தூக்கிச் சென்ற அவலம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மேலபனையூர் தெற்கு தெரு கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இவர்கள் அனைவருமே பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மூன்று பாசனவாய்க்கால் செல்கிறது. இந்த மூன்று வாய்க்காலிலும்  பாலம் இல்லை வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. இதனால் தெற்கு தெருவில் இறந்தவரின் உடலை  சேறு- சகதியும் நிறைந்த வயல் வழியாக சுடுகாட்டிற்கு தகனம் செய்ய எடுத்து செல்கின்றனர்.

மேலப்பனையூர் தெற்கு தெரு சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் வாட்டார் தார்சாலையிலிருந்து சுடுகாடு வரை உள்ள பாசன வாய்க்கால்களில் பாலம் அமைத்து  தார் சாலையாக சீரமைக்க வேண்டும் என்றும், சுடுகாட்டில் தெருவிளக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறுகின்றனர். மழை வெள்ளம் காலங்களில் எங்க ஊரில் இறந்தவர்கள் உடலை தகனம் செய்வதற்கு அவதிப்பட்டு வருகிறோம் ஆகவே  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இப்பகுதி மக்கள் ஆட்சியருக்கு  கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.


திருவாரூர்: இறந்தவரின் உடலை கொட்டும் மழையில் விவசாய நிலத்தில் தூக்கிச் சென்ற அவலம்

இதேபோன்று நன்னிலம் அருகே பாடசாலை கிராமத்தில் 6க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு சுடுகாட்டிற்கு தனியாக சாலை வசதி இல்லாத காரணத்தினால் ஆற்றை கடந்து தான் சுடுகாட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. கோடைகாலங்களில் ஆற்றில் தண்ணீர் இல்லாத நேரங்களில் இவர்கள் ஆற்றில் இறங்கி சடலத்தை கொண்டு சென்று அடக்கம் செய்வது வழக்கம். ஆனால் தற்பொழுது ஆறு முழுவதும் தண்ணீர் செல்வதால் ஆற்றில் இறங்கிதான் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் சடலத்தை தூக்கி செல்லும் நபர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் மாவட்டம் முழுவதும் இதேபோன்று சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாமல் இருக்கக்கூடிய கிராமங்களுக்கு உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வெயில் வாட்டினாலும் விளைச்சலை காக்க சாலையில் நெல்லை காய வைக்கும் விவசாயிகள்
வெயில் வாட்டினாலும் விளைச்சலை காக்க சாலையில் நெல்லை காய வைக்கும் விவசாயிகள்
சென்னையில் நடந்த கான்க்ளேவ் 26 நிகழ்விற்கான சிறப்பான முன்னோட்ட விழா
சென்னையில் நடந்த கான்க்ளேவ் 26 நிகழ்விற்கான சிறப்பான முன்னோட்ட விழா
அதிநவீன என்டோஸ்கோப்பிக்  அறுவை சிகிச்சை... ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை
அதிநவீன என்டோஸ்கோப்பிக்  அறுவை சிகிச்சை... ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
Congress Vs TVK: திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
Embed widget