மேலும் அறிய

மயிலாடுதுறையில் திருவள்ளுவர் வேடமணிந்து வள்ளுவரின் பெருமையை பறைசாற்றிய தமிழ் ஆர்வலர்கள்

மயிலாடுதுறையில் திருவள்ளுவர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு  திருவள்ளுவர் வேடம் அணிந்து திருவள்ளுவர் சிலை திருத்தேர் நகர்வலம்  நடைபெற்றது. 

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் வாழும் தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1 -ம் தேதி பொங்கல் பண்டிகை விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் 1333 திருக்குறள்கள் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர் திருவள்ளுவருக்கு திருவள்ளுவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


மயிலாடுதுறையில் திருவள்ளுவர் வேடமணிந்து வள்ளுவரின் பெருமையை பறைசாற்றிய தமிழ் ஆர்வலர்கள்

பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பெரும் தலைவர்கள் பலரும் தங்களுடைய உரைகளின்போது திருக்குறளை மேற்கொள் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மறைமலை அடிகள் தலைமையில் 500 -க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் 1921 -ஆம் ஆண்டு சென்னை - பச்சையப்பன் கல்லூரியில் கூடி தமிழர்களுக்கென ஒரு தனி ஆண்டு' தேவை என்று கருதி, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும், அதையே "தமிழ் ஆண்டு' எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார். 


மயிலாடுதுறையில் திருவள்ளுவர் வேடமணிந்து வள்ளுவரின் பெருமையை பறைசாற்றிய தமிழ் ஆர்வலர்கள்

அதனைக் கணக்கிட்டு திருவள்ளுவர் ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. எனினும் திருவள்ளுவர் பிறந்த ஆண்டிற்கான சான்றுகள் இன்றளவும் எதுவும் கிடைக்கவில்லை. அவரை சமணர் என்றும் சைவர் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். திருவள்ளுவர் பிறந்த மாதம் வைகாசி என கூறி அவருக்கு விழா எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 1971 - ம் ஆண்டு முதல் தை 2 -ம் நாள் திருவள்ளுவர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து திருவள்ளுவர் தினத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.


மயிலாடுதுறையில் திருவள்ளுவர் வேடமணிந்து வள்ளுவரின் பெருமையை பறைசாற்றிய தமிழ் ஆர்வலர்கள்

அதன் ஒன்றாக மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை சார்பாக திருவள்ளுவர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு திருவள்ளுவர் திருத்தேர் நகர்வல பேரணி இன்று நடைபெற்றது. திருத்தேரில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டு விசித்ராயர் வீதியில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இருந்து திருவள்ளுவர் திருத்தேர் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து, தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.  

Jallikattu: 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் காளை முட்டியதில் உயிரிழப்பு - பாலமேடு ஜல்லிக்கட்டில் சோகம்


மயிலாடுதுறையில் திருவள்ளுவர் வேடமணிந்து வள்ளுவரின் பெருமையை பறைசாற்றிய தமிழ் ஆர்வலர்கள்

திருக்குறள் பேரவை தலைவர் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்ற திருத்தேர் பேரணியில் மாணவர்கள் மற்றும் நாடக கலைஞர் திருவள்ளுவர் வேடமணிந்து திருவள்ளுவரின் பெருமையை பறைசாற்றும் வகையில்  திருவள்ளுவரின் திருமறைகளை பாடி தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் திருக்குறளை உலகிற்கு தந்த திருவள்ளுவரின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் பேரணியாக சென்றனர். தொடர்ந்து திருவள்ளுவர் திருநாள் விழா மற்றும் பாராட்டு விழா விருது வழங்கும் விழா நடைபெற்றது.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

1.64 லட்சம் குழந்தைகள் பயன்... தஞ்சை மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்
1.64 லட்சம் குழந்தைகள் பயன்... தஞ்சை மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்
தஞ்சை மக்களை டைம் மிஷினில் அழைத்துச் சென்ற தருணம்: இணையத்தைக் கலக்கும் அரிய நீராவி என்ஜின் புகைப்படம்!
தஞ்சை மக்களை டைம் மிஷினில் அழைத்துச் சென்ற தருணம்: இணையத்தைக் கலக்கும் அரிய நீராவி என்ஜின் புகைப்படம்!
என்.எல்.சி பங்குகளை விற்க முடிவு: நெய்வேலியில் ஜூலையில் இடதுசாரிகள் போராட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு
என்.எல்.சி பங்குகளை விற்க முடிவு: நெய்வேலியில் ஜூலையில் இடதுசாரிகள் போராட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு
"அண்ணாமலை சென்றாலும் பா.ஜ.க-வில் வெற்றிடம் இல்லை!" - தஞ்சை கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடி பேச்சு!

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
Trump on Iran: அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Upcoming Affordable EV Cars: ஒரே சார்ஜில் 400 கிமீ ரேஞ்ச்; மலிவு விலை; அதிரடியாக களமிறங்கும் ஹூண்டாய், கியா; EV அறிமுகம் எப்போ.?
ஒரே சார்ஜில் 400 கிமீ ரேஞ்ச்; மலிவு விலை; அதிரடியாக களமிறங்கும் ஹூண்டாய், கியா; EV அறிமுகம் எப்போ.?
Tata Sierra EV: டாடா சியரா இவி வாங்க பிளான் பண்றீங்களா.? உட்புற அம்சங்கள், பவர், சிறப்பம்சங்கள்; ஃபுல் டீட்டெய்ல்ஸ் இதோ
டாடா சியரா இவி வாங்க பிளான் பண்றீங்களா.? உட்புற அம்சங்கள், பவர், சிறப்பம்சங்கள்; ஃபுல் டீட்டெய்ல்ஸ் இதோ
Embed widget