மேலும் அறிய

தஞ்சாவூர்: 15 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்த தொழிலாளி உயிருடன் மீட்பு - தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு

தகவல் அறிந்து விரைந்து வந்து செயல்பட்டு சித்திரை வேலை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்களுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே கழிவுநீர் தொட்டிக்காக பள்ளம் தோன்றிய போது மண் சரிந்து 15 அடி ஆழத்தில் சிக்கிய தொழிலாளியை பத்திரமாக தீயணைப்பு வீரர்கள் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விரைந்து செயல்பட்டு தொழிலாளியை மீட்டதற்காக தீயணைப்பு படை வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே 15 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்த தொழிலாளி ஒன்றரை மணி நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது வீட்டில் கழிவு நீர் தொட்டிக்காக சிமெண்ட் உறைகளை இறக்க முடிவு செய்யப்பட்டது.
 
இதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை 15 அடி ஆழத்திற்காக மண் தோண்டப்பட்டது. மண் தோண்டும் பணியில் பேராவூரணி பூக்கொல்லையைச் சேர்ந்த சித்திரவேல் (45) மற்றும் நான்கு பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது 15 அடி ஆழம் மண் தோண்டியபோது, சித்திரவேல் குழிக்குள் இருந்து மண்ணை வெளியே எடுத்து கூடை மூலம் மேலே அனுப்பிக் கொண்டிருந்தார். பள்ளம் வெட்டிய மண் அருகிலேயே மேற்புறத்தில் கொட்டப்பட்டு இருந்தது. திடீரென மேலே இருந்த மண் சரிந்து குழிக்குள் விழுந்தது. இதில் சித்திரவேல் மண்ணுக்குள் புதைந்தார்.
 


தஞ்சாவூர்: 15 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்த தொழிலாளி உயிருடன் மீட்பு - தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு
 
 
உடனடியாக அங்கு வேலை பார்த்த மற்ற தொழிலாளர்கள் சித்திரவேல் மீது இருந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் பேராவூரணி தீயணைப்பு படைவீரர்களுக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் வீரர்கள் ஏ.சுப்பையன், கே.நீலகண்டன், எம்.ரஜினி, ஆர்.ராஜூவ்காந்தி, அ.மகேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
 
தகவல் அறிந்து தற்போதைய சேர்ந்த பொதுமக்களும் திரண்டு வந்து பதட்டமான மனநிலையுடன் தொழிலாளியை மீட்க வேண்டும் என வேண்டிக் கொண்டே நின்றிருந்தனர். மண்ணுக்குள் சிக்கிக் கொண்ட சித்திரைவேலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பின் சித்திரவேல் உயிருடன் மீட்கப்பட்டார். உடன் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரை பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 

தஞ்சாவூர்: 15 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்த தொழிலாளி உயிருடன் மீட்பு - தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு
 
மீட்கப்பட்ட சித்திரவேலுக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். சித்திரவேலை பெரும் போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பலரும் பாராட்டினர். இந்த சம்பவம் தஞ்சை மாவட்டம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து விரைந்து வந்து செயல்பட்டு சித்திரை வேலை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்களுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
Budget SUV Cars: 20 லட்சம்தான் பட்ஜெட்! மஹிந்திரா, டாடா, மாருதியின் சொகுசான SUV கார்கள் இதுதான் மக்களே!
Budget SUV Cars: 20 லட்சம்தான் பட்ஜெட்! மஹிந்திரா, டாடா, மாருதியின் சொகுசான SUV கார்கள் இதுதான் மக்களே!
Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 28 திங்கட்கிழமை எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.?
சென்னையில ஜூலை 28 திங்கட்கிழமை எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.?
SSLC Pass Mark: பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! இனி SSLC-ல 30 மார்க் எடுத்தா பாஸ்; எங்க தெரியுமா.?
Embed widget