மேலும் அறிய

தஞ்சாவூரில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம் - வணிகர்கள் கலெக்டரிடம் மனு

தஞ்சாவூரில் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள், வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினர்.

தஞ்சாவூரில் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள், வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் தெற்குலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மது அருந்துவோரால் அப்பகுதியில் உள்ள வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து இடையூறு ஏற்படுவதாக கூறி வணிகர்கள் கடையடைப்பு நடத்தினர்.

பின்னர் டாஸ்மாக் கடை அருகே கண்டன ஆர்ப்பாட்டம், கடையை மூட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, கோரிக்கை மனுவினை அதிகாரிகளிடம் வழங்கினர். இதே போல் தஞ்சாவூர் அருகே விளார் ஊராட்சிக்குட்பட்ட பாப்பாநகரில் உள்ள டாஸ்மாக் கடையினால் அப்பகுதி குடியிருப்பில் வசிப்போர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அப்பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரி, பள்ளி மாணவர்கள் இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்தும் மதுப்பிரியர்களின் தொல்லையினாலும், வாகனங்களின் அதிவேகத்தாலும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி, டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பாப்பா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த அதிகாரிகளிடம் வழங்கினர்.

தீக்குளிக்க முயன்ற பெண்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தீக்குளிப்பதற்காக தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்ட பெண்ணை காவல் துறையினர் மீட்டனர்.

 


தஞ்சாவூரில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம் - வணிகர்கள் கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட பருத்தியப்பர் கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி சசிகலா. இவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு சிலருடன் திங்கள்கிழமை வந்தார். இவர், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் விரைந்து சென்று சசிகலாவை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, காவல் துறையினரிடம் சசிகலா கூறுகையில், எனது கணவர் சக்திவேல் 2017 ஆம் ஆண்டில் விவசாயிகளிடம் நெல்லை வாங்கி செங்கிப்பட்டியைச் சேர்ந்தவருடன் சேர்ந்து வியாபாரம் செய்து வந்தார். செங்கிப்பட்டியைச் சேர்ந்த நபரிடமிருந்து வர வேண்டிய ரூ. 18 லட்சம் இதுவரை கிடைக்கவில்லை. பல வழிகளில் முயற்சி செய்தும் பணம் கிடைக்காததால், பாதிக்கப்பட்ட எனது கணவர் கடந்த மாதம் உயிரிழந்தார்.

கடன் தொல்லையால் அவதிப்படும் நிலையில் முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம், காவல் துறையினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது குடும்பம் கடன் தொல்லையால் அவதிப்படுவதாலும், எனக்கு உதவி செய்ய யாரும் முன் வராததாலும் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன் என்றார் அவர். இதையடுத்து, சசிகலாவுக்கு காவல் துறையினர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
Minister Keerthana : வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
DMK ADMK ED: லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
DMK Cong: ”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
Watch Video: பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
Tamilnadu Round Up: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி, காங்.சை சாடும் திமுக, அதிமுக தலைவர் விலகல் - தமிழ்நாட்டில் இதுவரை
டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி, காங்.சை சாடும் திமுக, அதிமுக தலைவர் விலகல் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget