மேலும் அறிய

மயிலாடுதுறை: நாளுக்கு நாள் துர்நாற்றம் எடுக்கும் சீர்காழி (நகரம்) நகராட்சி

சீர்காழி நகராட்சி கிடங்கில் குப்பையை கொட்ட விடாமல் வீதிகளில் எங்காவது கொட்டிவர செல்லும் அதிகாரிகளை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி உட்பட்ட பகுதிகளில் 24 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் நகராட்சி ஆணையர் 24 வார்டுகளையும் கவனித்து வந்தார். இதனால் அந்தந்த பகுதிகளில் மின்விளக்கு, சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறுவதில் சிரமம் நீடித்தது. இந்நிலையில், மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று ஒவ்வொரு வார்டுகளுக்கும் தனி வார்டு உறுப்பினர்,  நகர மன்ற தலைவர்  மக்களால் தேர்ந்தெடுக்கபட்டனர். இதன் மூலம் சீர்காழி நகரம் சீர் பெற்று விடும் என்ற நம்பிக்கையில் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.


மயிலாடுதுறை: நாளுக்கு நாள் துர்நாற்றம் எடுக்கும் சீர்காழி (நகரம்) நகராட்சி

ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு தற்போது உள்ள நகர மன்ற தலைவர் நகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்களின் செயல்பாட்டால், ஏமாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றன. இதற்கு உதாரணமாக சீர்காழி நகர் முழுவதும் குப்பைகள் சரிவர அல்ல படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. மின்விளக்குகள் சரியான முறையில் எறியப்படாமலும், கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாடப்படாமல் கழிவு நீர்கள் சாலையில் வழிந்து ஓடும் அவல நிலையும் காணமுடிகிறது. சீர்மிகு சீர்காழி என்ற பெயர் பெற்ற இவ்வூர், தற்போது சுகாதார சீர்கேட்டால் சீரழிந்து காணப்படுகிறது என்றால் அது மிகையாகாது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் .


மயிலாடுதுறை: நாளுக்கு நாள் துர்நாற்றம் எடுக்கும் சீர்காழி (நகரம்) நகராட்சி

எல்லாவற்றுக்கும் மேலாக சீர்காழி நகராட்சி உட்பட்ட வார்டுகளில் உள்ள குப்பைகளை காலை, மாலை என இருவேளையும் துப்புரவு பணியாளர்கள் தூய்மை செய்து வருகின்றனர். அவ்வாறு வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டுவதும், அவற்றை அங்கு தரம் பிரித்து விற்பனை செய்வதும் வழக்கம். ஆனால, தற்போது புதிதாக சீர்காழி நகராட்சியில் பொறுப்பேற்றுள்ள ஆணையர், தூய்மை பணியாளர்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி குப்பை கிடங்கில் கொட்ட விடாமல், குப்பைகளை வீதிகளில் போட்டு தரம் பிரித்து, மட்கா குப்பைகள் மட்டும் எடுத்து வர சொல்லி, அவற்றை மறு சுழற்சி செய்து விற்பனை செய்வதாகவும்,


மயிலாடுதுறை: நாளுக்கு நாள் துர்நாற்றம் எடுக்கும் சீர்காழி (நகரம்) நகராட்சி

மட்கும் குப்பைகளை தெருகளை கொட்டி விட்டு வர சொல்வதாகவும், இதனால் குப்பைகளை தெருவில் போட்டுவிட்டு வருவதால் துருநாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்பட்டு, தெருவில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்றும், குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது என கூறி  தூய்மை பணியாளர்களிடம் பொதுமக்கள்  வாக்குவாதம் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தூய்மை பணியாளர்கள் ஆத்திரமடைந்து, சீர்காழி  நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 


மயிலாடுதுறை: நாளுக்கு நாள் துர்நாற்றம் எடுக்கும் சீர்காழி (நகரம்) நகராட்சி

இதுகுறித்து தகவலறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஆணையர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீண்டும் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கில் அனுமதி அளிப்பதாக தெரிவித்ததின் பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் பொதுமக்கள் கூறுகையில், சீர்காழி நகராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்வதில் மட்டுமே குறிக்கோளாக செயல்படுகிறது என்றும், மக்கள் வரிப்பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு செய்ய வேண்டிய எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்வதில்லை என குற்றச்சாட்டை தெரிவிக்கின்றன.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget