மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத மழை, அதிகபட்சமாக சீர்காழியில் 43 சென்டிமீட்டர் மழை பதிவு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய பெய்த அதீத கனமழையால் சீர்காழியில் 43  சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, இதனால் மாவட்ட முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

தமிழகத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்ததை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்திலும்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய மழையானது தற்போது வரை தொடர்ந்து நீடித்து வருவதாலும், மேலும் நாளை மழை தொடரும் என்பதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் இன்று நவம்பர்  12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களுக்கு வடகிழக்கு பருவ மழை மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும், யாரும் நீர்நிலைகளுக்கு குளிக்க செல்லக் கூடாது.  மின் கம்பங்களை தொடக்கூடாது.  கொதிக்க வைத்த குடிநீர் அருந்த வேண்டும்.  என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத மழை, அதிகபட்சமாக சீர்காழியில் 43 சென்டிமீட்டர் மழை பதிவு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பதிவான மழை அளவுகள் கடந்த அக்டோபர் 01 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 172 மி.மீ மழையளவும், மணல்மேடு 65 மி.மீ மழையளவும், சீர்காழியில் 128.7 மி.மீ மழையளவும், கொள்ளிடத்தில் 98.6 மி.மீ மழையளவும், தரங்கம்பாடியில் 61.2 மி.மீ மழையளவும் பதிவாகியுள்ளது.  தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 43 சென்டிமீட்டர் ( 436.2 மில்லிமீட்டர்) மழையும் குறைந்த பட்சமாக மணல்மேடில் 160 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது  மயிலாடுதுறையில் 161.60 மி.மீ மழையளவும், கொள்ளிடத்தில் 316.8 மி.மீ மழையளவும், தரங்கம்பாடியில் 184 மி.மீ மழையளவும் பதிவாகியுள்ளது. 


மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத மழை, அதிகபட்சமாக சீர்காழியில் 43 சென்டிமீட்டர் மழை பதிவு!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து இன்றும் மற்றும் நாளை மறுநாளும் மிக மற்றும்  கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.  அதனால் மிகவும் கவனத்துடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் எனவும்,  மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளாது எனவும்,  பொதுமக்கள் தங்கள் குறைகளை 04364-222588 – 9487544588 என்ற எண்ணிலும் 8148917588 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத மழை, அதிகபட்சமாக சீர்காழியில் 43 சென்டிமீட்டர் மழை பதிவு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த வரலாறு  காணாத மழை பதிவு மற்றும் தொடரும் மழையால் மிகுந்த அச்சத்திற்கு பொதுமக்கள் ஆளாகியுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தும், சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதால் விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர். பல இடங்களில் மரங்கள் முறிந்தும், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைபட்டுள்ளது. 

மேலும் மழை தொடர்பான பல செய்திகளை காண  :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
Egg Yolk: ஆத்தி..! முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Egg Yolk: ஆத்தி..! முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Brain Intelligence: IQ, EQ, SQ மற்றும் AQ என்றால் என்ன? மூளையின் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா?
Brain Intelligence: IQ, EQ, SQ மற்றும் AQ என்றால் என்ன? மூளையின் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா?
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Embed widget