மேலும் அறிய

ரூ.1,121 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை ரெடி... ஒப்புதல் கிடைச்சா வேற லெவல்தான் போங்க!!!

மின்மயமாக்கப்பட்ட ஒற்றைப் பாதை வழித்தடத்தில், திருச்சி ரயில்வே கோட்டத்திலிருந்து தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது.

தஞ்சாவூர்: ரூ1,121.50 கோடி என மதிப்பீட்டில் ஒரு திட்ட அறிக்கை ரெடியாகி இருக்கு. ஒப்புதல் கிடைச்சா செமங்க... திருச்சி மக்கள் எதிர்பார்க்கிறதும் இதைதாங்க. எப்போ ஒப்புதல் கிடைக்கும் என்பதுதான் இப்போது பெரிய விஷயமாக உள்ளது. அப்படி என்ன விஷயம் தெரியுங்களா?

திருச்சி-கரூர் இரட்டை ரயில் பாதை குறித்த விரிவான திட்ட அறிக்கை ரெடியாகிடுச்சாம். இப்போ ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பு என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி மற்றும் கரூர் இடையேயான இரட்டை ரயில் பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் திட்டச் செலவு போன்ற முக்கிய விவரங்களை உள்ளடக்கியுள்ளது. தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.

தற்போது, இந்த 70 கிலோமீட்டருக்கும் அதிகமான மின்மயமாக்கப்பட்ட ஒற்றைப் பாதை வழித்தடத்தில், திருச்சி ரயில்வே கோட்டத்திலிருந்து மேற்கு தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்குச் செல்லும் விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சரக்கு ரயில்களும் இரு திசைகளிலும் செல்கின்றன. இந்த வழித்தடத்தின் பெரும்பகுதி சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் வருகிறது. இந்த திட்டத்திற்கான இறுதி இருப்பிட ஆய்வு முன்பே முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒற்றைப் பாதையாக இருந்தாலும், இந்த வழித்தடம் மிகவும் பரபரப்பாக உள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்திலிருந்து கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம் போன்ற நகரங்களுக்குச் செல்லும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை - மங்களூரு (திருச்சி வழியாக), காரைக்கால் - எர்ணாகுளம், திருச்சி - பாலக்காடு போன்ற மாநிலங்களுக்கு இடையேயான விரைவு ரயில்களும் தினமும் செல்கின்றன. டெல்டா பகுதி ரயில் பயணிகளிடமிருந்து, குறிப்பாக பொள்ளாச்சி போன்ற மேற்கு மாவட்டங்களுக்கு அதிக ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது.

ஆனால், ஒற்றைப் பாதை என்பதால் இதைச் செயல்படுத்துவதில் சிரமம் உள்ளது. ரயில் பாதையை இரட்டிப்பாக்குவதன் மூலம், இந்த வழித்தடத்தில் அதிக ரயில்களை இயக்கவும், மேலும் பல இடங்களுக்குப் பயணிக்கவும் வழிவகுக்கும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "திருச்சி - கரூர் இரட்டை அகல ரயில் பாதை விரிவான திட்ட அறிக்கை கட்டுமானப் பிரிவால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது புதுடெல்லியில் உள்ள ரயில்வே வாரியத்தின் ஆய்வில் உள்ளது.

இந்த இரட்டிப்பு திட்டத்திற்கான மொத்த செலவு சுமார் ரூ1,121.50 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்காக சுமார் ஆறு ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும். ரயில்வே வாரியத்திடம் இருந்து ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு கிடைத்த பின்னரே இந்த திட்டம் தொடங்கும்.

இந்த விரிவான திட்ட அறிக்கை, ரயில்வே துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். திருச்சி - கரூர் வழித்தடத்தை இரட்டிப்பாக்குவது, பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சரக்கு போக்குவரத்தையும் அதிகரிக்கும். இதன் மூலம், தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது பெரிதும் உதவும். இந்த திட்டத்திற்கு ரயில்வே வாரியம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புதான் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget