மேலும் அறிய

ரூ.1,121 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை ரெடி... ஒப்புதல் கிடைச்சா வேற லெவல்தான் போங்க!!!

மின்மயமாக்கப்பட்ட ஒற்றைப் பாதை வழித்தடத்தில், திருச்சி ரயில்வே கோட்டத்திலிருந்து தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது.

தஞ்சாவூர்: ரூ1,121.50 கோடி என மதிப்பீட்டில் ஒரு திட்ட அறிக்கை ரெடியாகி இருக்கு. ஒப்புதல் கிடைச்சா செமங்க... திருச்சி மக்கள் எதிர்பார்க்கிறதும் இதைதாங்க. எப்போ ஒப்புதல் கிடைக்கும் என்பதுதான் இப்போது பெரிய விஷயமாக உள்ளது. அப்படி என்ன விஷயம் தெரியுங்களா?

திருச்சி-கரூர் இரட்டை ரயில் பாதை குறித்த விரிவான திட்ட அறிக்கை ரெடியாகிடுச்சாம். இப்போ ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பு என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி மற்றும் கரூர் இடையேயான இரட்டை ரயில் பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் திட்டச் செலவு போன்ற முக்கிய விவரங்களை உள்ளடக்கியுள்ளது. தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.

தற்போது, இந்த 70 கிலோமீட்டருக்கும் அதிகமான மின்மயமாக்கப்பட்ட ஒற்றைப் பாதை வழித்தடத்தில், திருச்சி ரயில்வே கோட்டத்திலிருந்து மேற்கு தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்குச் செல்லும் விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சரக்கு ரயில்களும் இரு திசைகளிலும் செல்கின்றன. இந்த வழித்தடத்தின் பெரும்பகுதி சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் வருகிறது. இந்த திட்டத்திற்கான இறுதி இருப்பிட ஆய்வு முன்பே முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒற்றைப் பாதையாக இருந்தாலும், இந்த வழித்தடம் மிகவும் பரபரப்பாக உள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்திலிருந்து கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம் போன்ற நகரங்களுக்குச் செல்லும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை - மங்களூரு (திருச்சி வழியாக), காரைக்கால் - எர்ணாகுளம், திருச்சி - பாலக்காடு போன்ற மாநிலங்களுக்கு இடையேயான விரைவு ரயில்களும் தினமும் செல்கின்றன. டெல்டா பகுதி ரயில் பயணிகளிடமிருந்து, குறிப்பாக பொள்ளாச்சி போன்ற மேற்கு மாவட்டங்களுக்கு அதிக ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது.

ஆனால், ஒற்றைப் பாதை என்பதால் இதைச் செயல்படுத்துவதில் சிரமம் உள்ளது. ரயில் பாதையை இரட்டிப்பாக்குவதன் மூலம், இந்த வழித்தடத்தில் அதிக ரயில்களை இயக்கவும், மேலும் பல இடங்களுக்குப் பயணிக்கவும் வழிவகுக்கும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "திருச்சி - கரூர் இரட்டை அகல ரயில் பாதை விரிவான திட்ட அறிக்கை கட்டுமானப் பிரிவால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது புதுடெல்லியில் உள்ள ரயில்வே வாரியத்தின் ஆய்வில் உள்ளது.

இந்த இரட்டிப்பு திட்டத்திற்கான மொத்த செலவு சுமார் ரூ1,121.50 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்காக சுமார் ஆறு ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும். ரயில்வே வாரியத்திடம் இருந்து ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு கிடைத்த பின்னரே இந்த திட்டம் தொடங்கும்.

இந்த விரிவான திட்ட அறிக்கை, ரயில்வே துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். திருச்சி - கரூர் வழித்தடத்தை இரட்டிப்பாக்குவது, பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சரக்கு போக்குவரத்தையும் அதிகரிக்கும். இதன் மூலம், தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது பெரிதும் உதவும். இந்த திட்டத்திற்கு ரயில்வே வாரியம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புதான் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Toyota 7 Seater: நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Embed widget