மேலும் அறிய

ஆக.31க்குள் தடுப்பூசி போடாவிட்டால் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை பாயும்- மயிலாடுதுறை ஆட்சியர்

மயிலாடுதுறையில் வர்த்தகர்கள் ஆக.31-க்குள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களும் இந்த மாத இறுதிக்குள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.


ஆக.31க்குள் தடுப்பூசி போடாவிட்டால் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை பாயும்- மயிலாடுதுறை ஆட்சியர்

இதுகுறித்து, அவர் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 31 தேதிக்குள் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிக்கு உள்பட்ட அனைத்து வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வின்போது வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான உரிய ஆவணத்தை காண்பிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ளாமல் வர்த்தக நிறுவனங்களில் ஊழியர்கள் பணிபுரிவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.


ஆக.31க்குள் தடுப்பூசி போடாவிட்டால் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை பாயும்- மயிலாடுதுறை ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடத்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், மூன்று அலை ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட கூடாது என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வரை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 677 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு அதில் 21 ஆயிரத்து 156 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 244 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று வரை 5 லட்சத்து 15 ஆயிரத்து 703 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், முதல் தவணை தடுப்பூசியை 4 லட்சத்து 43 ஆயிரத்து 887 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 71 ஆயிரத்து 816 பேரும், கோவாக்சின் தடுப்பூசியை 52 ஆயிரத்து 577 பேரும், கோவிஷீல்ட் தடுப்பூசியை 4 லட்சத்து 63 ஆயிரத்து 126 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக தற்போது வர்த்தக நிறுவனங்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்பதை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆனால் இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில் தடுப்பூசி குறித்து இன்னும் முழுமையான ஒரு அறிக்கை இல்லாத நிலையில் பொதுமக்களுக்கு கட்டாயத்தின் பேரில் தடுப்பூசி வழங்குவது என்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் 19.51 லட்சம் வாக்காளர்கள்... இறுதிப்பட்டியல் வெளியீடு
தஞ்சை மாவட்டத்தில் 19.51 லட்சம் வாக்காளர்கள்... இறுதிப்பட்டியல் வெளியீடு
எச்சரிக்கை விடுக்கும் கையும்... மிரள வைக்கும் போஸ்டரும்: அதிர்கிறது தஞ்சாவூர் அரசியல் களம்: என்ன விஷயம் தெரியுங்களா?
எச்சரிக்கை விடுக்கும் கையும்... மிரள வைக்கும் போஸ்டரும்: அதிர்கிறது தஞ்சாவூர் அரசியல் களம்: என்ன விஷயம் தெரியுங்களா?
புதுச்சேரி – கொல்லத்திற்கு தஞ்சை வழியாக ரயில் இயக்க சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தல்
புதுச்சேரி – கொல்லத்திற்கு தஞ்சை வழியாக ரயில் இயக்க சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தல்
ஸ்பீட் ரீல்ஸ் செய்து கிராண்ட்மாஸ்டர் சாதனை படைத்த தஞ்சை அஸ்வினி ஆனந்த்
ஸ்பீட் ரீல்ஸ் செய்து கிராண்ட்மாஸ்டர் சாதனை படைத்த தஞ்சை அஸ்வினி ஆனந்த்
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
T20 World Cup 2026: இது தொடக்கம் இல்ல.. முடிவு..! ஓப்பனிங்கிலே குளோஸ் பண்ணும் அபிஷேக் - இஷான் ஜோடி!
T20 World Cup 2026: இது தொடக்கம் இல்ல.. முடிவு..! ஓப்பனிங்கிலே குளோஸ் பண்ணும் அபிஷேக் - இஷான் ஜோடி!
AIADMK Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணை தொகை.. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 2,000- இபிஎஸ் அதிரடி
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணை தொகை.. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 2,000- இபிஎஸ் அதிரடி
Embed widget