மேலும் அறிய

தனக்கு கிடைப்பதை பகிர்ந்து இயலாதவர்களுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி

மயிலாடுதுறையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தினசரி உணவு வழங்கி வரும் விவசாய கூலித் தொழிலாளியின் செயல் அனைவது பாராட்டையும் பெற்றுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்ததாண்டவபுரத்தை அடுத்த சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளி தீபன்ராஜ். இவர் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தால் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள், மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தினசரி உணவு வழங்கி பலதரப்பு மக்களின் பாராட்டை பெற்று வருகிறார். பட்டயப் படிப்பு முடித்துவிட்டு சென்னை தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வந்த தீபன்ராஜ், கடந்த ஆண்டு ஊரடங்கால் வேலையை விட்டு விட்டு சொந்த ஊரான சேத்தூருக்கு வந்துள்ளார். 


தனக்கு கிடைப்பதை பகிர்ந்து இயலாதவர்களுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி

சென்ற ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் போது சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை பார்த்து வந்த பலரும் தங்கள் வேலையை விட்டும், வேலையை இழந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி மீண்டும் அவர்கள் வேலையின்றி அல்லல்பட்டு வருகின்றனர். ஆனால் வேலை இல்லையே என்று கவலை கொண்டு சோர்ந்துவிடாத தீபன்ராஜ் தனது தந்தைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து, தங்கள் வயலின் வேலை போக மீதமுள்ள நேரங்களில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் இயல்பாகவே துன்பத்தில் இருக்கும் மனிதர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட தீபன்ராஜ் கூலி வேலையில் தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள உணவிற்கு கஷ்டப்படும் ஏழை, ஏளிய மக்களுக்கு உணவு, முகக்கவசம், குடிநீர், பிஸ்கட்  உள்ளிட்டவற்றை சேவை மனப்பான்மையோடு வழங்கி வருகிறார். 


தனக்கு கிடைப்பதை பகிர்ந்து இயலாதவர்களுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி

இது குறித்து தீபன் ராஜ் கூறுகையில், கேரளாவில் கூடை முடையும் தொழில் செய்து வந்த தன் தந்தை புயலில் சிக்கிகொண்டு தவித்தபோது கேரள மக்கள் உதவி செய்து காப்பாற்றியதால், ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும், சென்னையில் வேலை பார்த்தபோது கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டி உதவி செய்துள்ளதாகவும், கூலி வேலை செய்து ஓர் ஆண்டாக தான் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு தற்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு தானாக உணவு தயாரித்து வழங்கி வருவதாக தெரிவித்தார். 


தனக்கு கிடைப்பதை பகிர்ந்து இயலாதவர்களுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி

பணம் இருக்கும் பலரும் இந்த பேரிடர் காலத்தில் உதவ மனம் இன்றி தான், தன் குடும்பம் என செயல்படுவதும், அவ்வாறு உதவி செய்தாலும் அதனை விளம்பரத்திற்காக என்ற நிலையில் செய்யும் உலகில் தான் வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என நினைக்கும் தீபன்ராஜ் போன்ற மனிதர்களும் வாழ்கின்றனர். தீபன்ராஜின் இந்த சேவை மனப்பான்மை பார்க்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் என்றால் அது மிகையாகாது.


தனக்கு கிடைப்பதை பகிர்ந்து இயலாதவர்களுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget