மேலும் அறிய

தனக்கு கிடைப்பதை பகிர்ந்து இயலாதவர்களுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி

மயிலாடுதுறையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தினசரி உணவு வழங்கி வரும் விவசாய கூலித் தொழிலாளியின் செயல் அனைவது பாராட்டையும் பெற்றுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்ததாண்டவபுரத்தை அடுத்த சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளி தீபன்ராஜ். இவர் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தால் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள், மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தினசரி உணவு வழங்கி பலதரப்பு மக்களின் பாராட்டை பெற்று வருகிறார். பட்டயப் படிப்பு முடித்துவிட்டு சென்னை தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வந்த தீபன்ராஜ், கடந்த ஆண்டு ஊரடங்கால் வேலையை விட்டு விட்டு சொந்த ஊரான சேத்தூருக்கு வந்துள்ளார். 


தனக்கு கிடைப்பதை பகிர்ந்து இயலாதவர்களுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி

சென்ற ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் போது சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை பார்த்து வந்த பலரும் தங்கள் வேலையை விட்டும், வேலையை இழந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி மீண்டும் அவர்கள் வேலையின்றி அல்லல்பட்டு வருகின்றனர். ஆனால் வேலை இல்லையே என்று கவலை கொண்டு சோர்ந்துவிடாத தீபன்ராஜ் தனது தந்தைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து, தங்கள் வயலின் வேலை போக மீதமுள்ள நேரங்களில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் இயல்பாகவே துன்பத்தில் இருக்கும் மனிதர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட தீபன்ராஜ் கூலி வேலையில் தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள உணவிற்கு கஷ்டப்படும் ஏழை, ஏளிய மக்களுக்கு உணவு, முகக்கவசம், குடிநீர், பிஸ்கட்  உள்ளிட்டவற்றை சேவை மனப்பான்மையோடு வழங்கி வருகிறார். 


தனக்கு கிடைப்பதை பகிர்ந்து இயலாதவர்களுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி

இது குறித்து தீபன் ராஜ் கூறுகையில், கேரளாவில் கூடை முடையும் தொழில் செய்து வந்த தன் தந்தை புயலில் சிக்கிகொண்டு தவித்தபோது கேரள மக்கள் உதவி செய்து காப்பாற்றியதால், ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும், சென்னையில் வேலை பார்த்தபோது கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டி உதவி செய்துள்ளதாகவும், கூலி வேலை செய்து ஓர் ஆண்டாக தான் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு தற்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு தானாக உணவு தயாரித்து வழங்கி வருவதாக தெரிவித்தார். 


தனக்கு கிடைப்பதை பகிர்ந்து இயலாதவர்களுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி

பணம் இருக்கும் பலரும் இந்த பேரிடர் காலத்தில் உதவ மனம் இன்றி தான், தன் குடும்பம் என செயல்படுவதும், அவ்வாறு உதவி செய்தாலும் அதனை விளம்பரத்திற்காக என்ற நிலையில் செய்யும் உலகில் தான் வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என நினைக்கும் தீபன்ராஜ் போன்ற மனிதர்களும் வாழ்கின்றனர். தீபன்ராஜின் இந்த சேவை மனப்பான்மை பார்க்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் என்றால் அது மிகையாகாது.


தனக்கு கிடைப்பதை பகிர்ந்து இயலாதவர்களுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி

தலைப்பு செய்திகள்

மின்கம்பங்களின் தேவை ஒருபுறம்... மண்ணில் புதைந்து வீணாகும் அவலம் மறுபுறம்
மின்கம்பங்களின் தேவை ஒருபுறம்... மண்ணில் புதைந்து வீணாகும் அவலம் மறுபுறம்
இசை மேதையின் இல்லம்... தஞ்சைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் முதல் விருப்பம்!
இசை மேதையின் இல்லம்... தஞ்சைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் முதல் விருப்பம்!
ரூ.1200 கோடி பேரிடர் நிதி வழங்கிய மத்திய அரசு… தஞ்சாவூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ரூ.1200 கோடி பேரிடர் நிதி வழங்கிய மத்திய அரசு… தஞ்சாவூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
தஞ்சை நில வழிகாட்டி மதிப்பில் முரண்பாடா? வரைவுப் பட்டியல் வெளியீடு – 15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க ஆட்சியர் ரேவதி அழைப்பு!
தஞ்சை நில வழிகாட்டி மதிப்பில் முரண்பாடா? வரைவுப் பட்டியல் வெளியீடு – 15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க ஆட்சியர் ரேவதி அழைப்பு!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
Tamil Nadu By Election : விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் .! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
A Raja DMK : “வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
“வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
Pension : ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல வரும் செவ்வாய்க்கிழமை (15.09.2026) எங்கெங் பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல வரும் செவ்வாய்க்கிழமை (15.09.2026) எங்கெங் பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Rameswaram New Road : ராமேஸ்வரத்திற்குள் செல்ல 100 அடி அகலத்தில் புதிய மாற்று சாலை.! 36 கோடியில்- எந்த வழியில் செல்லுது தெரியுமா.?
ராமேஸ்வரம் செல்ல இனி புதிய வழி.! 100 அடி அகலத்தில் மாற்றுச்சாலை- பிரம்மாண்ட திட்டம்- எந்த வழியில்.?
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
Embed widget