மேலும் அறிய

தனக்கு கிடைப்பதை பகிர்ந்து இயலாதவர்களுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி

மயிலாடுதுறையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தினசரி உணவு வழங்கி வரும் விவசாய கூலித் தொழிலாளியின் செயல் அனைவது பாராட்டையும் பெற்றுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்ததாண்டவபுரத்தை அடுத்த சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளி தீபன்ராஜ். இவர் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தால் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள், மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தினசரி உணவு வழங்கி பலதரப்பு மக்களின் பாராட்டை பெற்று வருகிறார். பட்டயப் படிப்பு முடித்துவிட்டு சென்னை தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வந்த தீபன்ராஜ், கடந்த ஆண்டு ஊரடங்கால் வேலையை விட்டு விட்டு சொந்த ஊரான சேத்தூருக்கு வந்துள்ளார். 


தனக்கு கிடைப்பதை பகிர்ந்து இயலாதவர்களுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி

சென்ற ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் போது சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை பார்த்து வந்த பலரும் தங்கள் வேலையை விட்டும், வேலையை இழந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி மீண்டும் அவர்கள் வேலையின்றி அல்லல்பட்டு வருகின்றனர். ஆனால் வேலை இல்லையே என்று கவலை கொண்டு சோர்ந்துவிடாத தீபன்ராஜ் தனது தந்தைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து, தங்கள் வயலின் வேலை போக மீதமுள்ள நேரங்களில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் இயல்பாகவே துன்பத்தில் இருக்கும் மனிதர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட தீபன்ராஜ் கூலி வேலையில் தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள உணவிற்கு கஷ்டப்படும் ஏழை, ஏளிய மக்களுக்கு உணவு, முகக்கவசம், குடிநீர், பிஸ்கட்  உள்ளிட்டவற்றை சேவை மனப்பான்மையோடு வழங்கி வருகிறார். 


தனக்கு கிடைப்பதை பகிர்ந்து இயலாதவர்களுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி

இது குறித்து தீபன் ராஜ் கூறுகையில், கேரளாவில் கூடை முடையும் தொழில் செய்து வந்த தன் தந்தை புயலில் சிக்கிகொண்டு தவித்தபோது கேரள மக்கள் உதவி செய்து காப்பாற்றியதால், ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும், சென்னையில் வேலை பார்த்தபோது கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டி உதவி செய்துள்ளதாகவும், கூலி வேலை செய்து ஓர் ஆண்டாக தான் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு தற்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு தானாக உணவு தயாரித்து வழங்கி வருவதாக தெரிவித்தார். 


தனக்கு கிடைப்பதை பகிர்ந்து இயலாதவர்களுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி

பணம் இருக்கும் பலரும் இந்த பேரிடர் காலத்தில் உதவ மனம் இன்றி தான், தன் குடும்பம் என செயல்படுவதும், அவ்வாறு உதவி செய்தாலும் அதனை விளம்பரத்திற்காக என்ற நிலையில் செய்யும் உலகில் தான் வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என நினைக்கும் தீபன்ராஜ் போன்ற மனிதர்களும் வாழ்கின்றனர். தீபன்ராஜின் இந்த சேவை மனப்பான்மை பார்க்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் என்றால் அது மிகையாகாது.


தனக்கு கிடைப்பதை பகிர்ந்து இயலாதவர்களுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget