வெட்டுப்பட்ட கால் எலும்புகளை சிறப்பாக அறுவை சிகிச்சை செய்து சாதித்த காமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள்
குறுகிய நாட்களிலே இயல்பாக நடக்க தொடங்கிய அவர் தனக்கான வேலைகளை எப்பொழுதும் போல இயல்பாக செய்தார்

தஞ்சாவூர்: மலேசியாவில் பணியாற்றிய போது விபத்தில் சிக்கிய 43 வயதுடையவரின் வெட்டுப்பட்ட கால் எலும்புகளை சிறப்பாக அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு கொடுத்து ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த சிகிச்சை முறை டெல்டா மாவட்டத்தில் இங்குதான் முதன்முறையாக நடத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலேசியா நாட்டை சேர்ந்த 43 வயதான நபர் இயந்திரத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் போது எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு அவரது வலது காலில் மோசமான எலும்பு முறிந்து சதைகள் சிதைந்த நிலையில் அந்த நாட்டில் சிகிச்சை மேற்கொண்டார். அங்கு பல மருத்துவ சிகிச்சைகள் செய்தும் அவருக்கு அதற்கான தீர்வு கிடைக்காதலால் அவரது குடும்பத்தாரால் தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த காலில் சீல் வைத்துள்ளதாகவும், கால் எலும்புகளை இணைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர்.
முதலுதவியாக சிதைந்த கால்களை சரி செய்து ஒரு பகுதியாக வலது கால் சிறியதாகவும் நடப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்து வந்த நிலையில் அவரின் உறவினர்களின் ஒப்புதலோடு ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை மூத்த மருத்துவரும் துறை தலைவருமான டாக்டர் V செந்தில்குமார் & எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் M கிஷோர் குமார், மற்றும் தோல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ப பிரசன்ன வெங்கடேசன் ஆகியோர்களது திறமை வாய்ந்த மருத்துவ குழுவை கொண்டு மிக துல்லியமாக அவரது உடலின் மற்றொரு பகுதியில் உள்ள சிறு சிறு எலும்புகளை எடுத்து அவரின் வலது கால் சிதைந்த இடத்தில் சீராக வைத்து சிறிய எலும்பை பெரிதாக்கி எலும்புகளை இணைத்து அறுவை சிகிச்சை செய்தனர்.
சிகிச்சைக்கு பின்னர் தொடர்ந்து அவருக்கு மருத்துவரின் பரிந்துரையில் பிஸியோதெரபி மற்றும் வலது கால் சீராக இதர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வீடு திரும்பினார் டிஸ்சார்ஜ் செய்த குறுகிய நாட்களிலே இயல்பாக நடக்க தொடங்கிய அவர் தனக்கான வேலைகளை எப்பொழுதும் போல இயல்பாக செய்தார். தனக்கு வாழ்வளித்த மருத்துவர்களுக்கும், மருத்துவ குழுவினருக்கும். மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கை கூப்பி மகிழ்வோடு நன்றி கூறினார்.























