மேலும் அறிய

மைத்துனர் மனைவிக்கு பேரூராட்சி தலைவர் பதவி - பூம்புகார் திமுக எம்.எல்.ஏவை கண்டித்து பதவியை ராஜினாமா செய்த நிர்வாகி

தம்பதியினர் இருவரும் கூட்டாக தங்கள் பதவியை ராஜினாமா செய்தது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் பதவி தனது மனைவிக்கு கிடைக்காததால் தரங்கம்பாடி பேரூராட்சி திமுக செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக வெற்றிவேல் என்பவர் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 


மைத்துனர் மனைவிக்கு பேரூராட்சி தலைவர் பதவி - பூம்புகார் திமுக எம்.எல்.ஏவை கண்டித்து பதவியை ராஜினாமா செய்த நிர்வாகி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் செயலாளராக கட்சி பதவி வகித்து வருபவர் வெற்றிவேல். இவரது மனைவி சரஸ்வதி, 2001 ஆம் ஆண்டு முதல் 2006 வரை தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர். இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த தரங்கம்பாடி பேரூராட்சி தேர்தலில் 13 ஆவது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.

 

மைத்துனர் மனைவிக்கு பேரூராட்சி தலைவர் பதவி - பூம்புகார் திமுக எம்.எல்.ஏவை கண்டித்து பதவியை ராஜினாமா செய்த நிர்வாகி
நிவேதா.முருகன், திமுக எம்.எல்.ஏ

 

மேலும் தரங்கம்பாடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக கூட்டணி 16 வார்டுகளை கைப்பற்றினர். இந்த சூழலில் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா.முருகனின் உறவினர் சுகுணசங்கரி வெற்றி பெற்றார். இதனையடுத்து பாரம்பரியமிக்க திமுக குடும்பத்தை சேர்ந்த தரங்கம்பாடி பேரூர் கழக செயலாளர் வெற்றிவேலும் 13 ஆவது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற அவரது மனைவி சரஸ்வதியும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.


மைத்துனர் மனைவிக்கு பேரூராட்சி தலைவர் பதவி - பூம்புகார் திமுக எம்.எல்.ஏவை கண்டித்து பதவியை ராஜினாமா செய்த நிர்வாகி

இது குறித்து தரங்கம்பாடி பேரூர் திமுக செயலாளர் வெற்றிவேல் கூறுகையில், தரங்கம்பாடி பேரூராட்சி திமுக. செயலாளராக கடந்த 10 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வந்த எனக்கு கடந்த 2001, 2006 பேரூராட்சி தலைவர் பதவிக்கு எனது மனைவி சரஸ்வதிக்கு நேரடியாக போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுத்து மக்கள் பணியாற்றினார். இந்நிலையில் தற்போது திமுக ஆட்சி அமைந்து உள்ள இந்த நேரத்தில் எனது மனைவி சரஸ்வதிக்கு மீண்டும் தலைவர் பதவிக்காக வாய்ப்பு கேட்ட போது திமுக. மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.முருகன் தலைவர் பதவிக்கு வாய்ப்பளிக்காமல், அவரது மைத்துனர் மனைவி சுகுண சங்கரி என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். 


மைத்துனர் மனைவிக்கு பேரூராட்சி தலைவர் பதவி - பூம்புகார் திமுக எம்.எல்.ஏவை கண்டித்து பதவியை ராஜினாமா செய்த நிர்வாகி

இதுகுறித்து தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் மெய்யநாதனை தொடர்பு கொண்டு கேட்டபோது துணை தலைவர் பதவியை மாவட்ட பொறுப்பாளர் வழங்குவார் என்று தெரிவித்தார். ஆனால் துணை தலைவர் பதவியும் வழங்கவில்லை என்றும், இதுகுறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொண்டும் எந்த பலனும்  கிடைக்காததால் தனது பேரூராட்சி செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தரங்கம்பாடி பேரூராட்சி 13 வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற சரஸ்வதி தனக்கு பேரூராட்சி தலைவர் ஆகும் வாய்ப்பை மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.முருகன் வழங்காததை கண்டித்து தானும் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் பேரூராட்சி தலைவராக இருந்தபோது புதிய பேருந்து நிலையம் கொண்டு வந்தது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்தது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.  தம்பதியினர் இருவரும் கூட்டாக தங்கள் பதவியை ராஜினாமா செய்தது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi Visit

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
aniket verma: அடிச்சா சிக்ஸரு.. யார் இந்த அனிகெத் வர்மா? ஐதரபாத்தின் புதிய ஆபத்பாந்தவன்!
aniket verma: அடிச்சா சிக்ஸரு.. யார் இந்த அனிகெத் வர்மா? ஐதரபாத்தின் புதிய ஆபத்பாந்தவன்!
Board Exam Dates: விளாசும் வெயில்; பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்- கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Board Exam Dates: விளாசும் வெயில்; பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்- கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
மனைவி இல்லாத ஆண் அரசு ஊழியர்களுக்கு 730 நாள்களுக்கு விடுமுறை.. இது என்ன புதுசா இருக்கே?
குழந்தைகளை பார்த்து கொள்ள விடுமுறை.. இனி, ஆண் அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கும்!
Embed widget