மேலும் அறிய

மைத்துனர் மனைவிக்கு பேரூராட்சி தலைவர் பதவி - பூம்புகார் திமுக எம்.எல்.ஏவை கண்டித்து பதவியை ராஜினாமா செய்த நிர்வாகி

தம்பதியினர் இருவரும் கூட்டாக தங்கள் பதவியை ராஜினாமா செய்தது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் பதவி தனது மனைவிக்கு கிடைக்காததால் தரங்கம்பாடி பேரூராட்சி திமுக செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக வெற்றிவேல் என்பவர் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 


மைத்துனர் மனைவிக்கு பேரூராட்சி தலைவர் பதவி - பூம்புகார் திமுக எம்.எல்.ஏவை கண்டித்து பதவியை ராஜினாமா செய்த நிர்வாகி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் செயலாளராக கட்சி பதவி வகித்து வருபவர் வெற்றிவேல். இவரது மனைவி சரஸ்வதி, 2001 ஆம் ஆண்டு முதல் 2006 வரை தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர். இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த தரங்கம்பாடி பேரூராட்சி தேர்தலில் 13 ஆவது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.

 

மைத்துனர் மனைவிக்கு பேரூராட்சி தலைவர் பதவி - பூம்புகார் திமுக எம்.எல்.ஏவை கண்டித்து பதவியை ராஜினாமா செய்த நிர்வாகி
நிவேதா.முருகன், திமுக எம்.எல்.ஏ

 

மேலும் தரங்கம்பாடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக கூட்டணி 16 வார்டுகளை கைப்பற்றினர். இந்த சூழலில் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா.முருகனின் உறவினர் சுகுணசங்கரி வெற்றி பெற்றார். இதனையடுத்து பாரம்பரியமிக்க திமுக குடும்பத்தை சேர்ந்த தரங்கம்பாடி பேரூர் கழக செயலாளர் வெற்றிவேலும் 13 ஆவது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற அவரது மனைவி சரஸ்வதியும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.


மைத்துனர் மனைவிக்கு பேரூராட்சி தலைவர் பதவி - பூம்புகார் திமுக எம்.எல்.ஏவை கண்டித்து பதவியை ராஜினாமா செய்த நிர்வாகி

இது குறித்து தரங்கம்பாடி பேரூர் திமுக செயலாளர் வெற்றிவேல் கூறுகையில், தரங்கம்பாடி பேரூராட்சி திமுக. செயலாளராக கடந்த 10 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வந்த எனக்கு கடந்த 2001, 2006 பேரூராட்சி தலைவர் பதவிக்கு எனது மனைவி சரஸ்வதிக்கு நேரடியாக போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுத்து மக்கள் பணியாற்றினார். இந்நிலையில் தற்போது திமுக ஆட்சி அமைந்து உள்ள இந்த நேரத்தில் எனது மனைவி சரஸ்வதிக்கு மீண்டும் தலைவர் பதவிக்காக வாய்ப்பு கேட்ட போது திமுக. மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.முருகன் தலைவர் பதவிக்கு வாய்ப்பளிக்காமல், அவரது மைத்துனர் மனைவி சுகுண சங்கரி என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். 


மைத்துனர் மனைவிக்கு பேரூராட்சி தலைவர் பதவி - பூம்புகார் திமுக எம்.எல்.ஏவை கண்டித்து பதவியை ராஜினாமா செய்த நிர்வாகி

இதுகுறித்து தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் மெய்யநாதனை தொடர்பு கொண்டு கேட்டபோது துணை தலைவர் பதவியை மாவட்ட பொறுப்பாளர் வழங்குவார் என்று தெரிவித்தார். ஆனால் துணை தலைவர் பதவியும் வழங்கவில்லை என்றும், இதுகுறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொண்டும் எந்த பலனும்  கிடைக்காததால் தனது பேரூராட்சி செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தரங்கம்பாடி பேரூராட்சி 13 வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற சரஸ்வதி தனக்கு பேரூராட்சி தலைவர் ஆகும் வாய்ப்பை மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.முருகன் வழங்காததை கண்டித்து தானும் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் பேரூராட்சி தலைவராக இருந்தபோது புதிய பேருந்து நிலையம் கொண்டு வந்தது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்தது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.  தம்பதியினர் இருவரும் கூட்டாக தங்கள் பதவியை ராஜினாமா செய்தது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
Embed widget