மேலும் அறிய

அய்யா இந்தாண்டாவது முழுமையா தூர்வாருங்யா....மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வளத்துறை தூர்வாரும் திட்டப்பணிகள்  2023-24 திட்டத்தின்கீழ் தூர்வாரும் பணியை  மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்துள்ளார்.

மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி தண்ணீர் விவசாய பயன்பாட்டிற்காக தங்கு தடை இன்றி செல்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள வாய்க்கால்களை தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் தூர்வாரி வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வளத்துறை தூர்வாரும் திட்டப்பணிகள்  2023-24 ன் கீழ் காவிரி ஆறு, மகிமலையாறு, மஞ்சளாறு, வீரசோழனாறு, மண்ணியாறு, அய்யாவையனாறு, விக்ரமனாறு,  மற்றும்  தெற்குராஜன் ஆறுகளில் பிரியும் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. 


அய்யா இந்தாண்டாவது முழுமையா தூர்வாருங்யா....மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

தரங்கம்பாடி தாலுக்கா மேமாத்தூர் கிராமத்தில் வாழ்க்கை வாய்க்கால்  தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 8.06 கோடி மதிப்பீட்டில் 749.74 கி.மீட்டர் தூரம் 51 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:


அய்யா இந்தாண்டாவது முழுமையா தூர்வாருங்யா....மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

ஆட்சியர் பேட்டி:

பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூர்வாரும் பணி முறையாக நடைபெற விவசாயிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 5 முன்னோடி விவசாயிகள் மற்றும் உதவி செயற்பொறியாளர்,  வேளாண் அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் கொண்ட குழுக்கள் 51 பணிகளுக்கும் தனித்தனியே அமைக்கப்பட்டு, பணியை மேற்பார்வை செய்ய உள்ளதாகவும், மேலும், தமிழக அரசு இந்தாண்டு தூர்வாரும் பணியை கண்காணிக்க புதிய ஆப் அறிமுகப்படுத்தி தினந்தோறும் நடைபெறும் பணிகளை பதிவு செய்வதன் முலம் அரசு இந்த பணிகளை நேரடியாக கண்காணிக்க முடியும். இதனால், விரைவாக பணிகள் முடிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும், தூர்வாரும் பணியில் குறைகள் இருந்தால் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Govt Schools: அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தும் திட்டம்; கைவிடாது முழுவீச்சில் செயல்படுத்துக- அன்புமணி


அய்யா இந்தாண்டாவது முழுமையா தூர்வாருங்யா....மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகளின் கருத்து:

இந்நிலையில் இதுகுறித்து இம் மாவட்ட விவசாயிகள் சிலர் கூறுகையில், ஆண்டுதோறும் தமிழக அரசு தூர்வாரும் பணியினை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தூர்வாரும் பணி என்பது பெயரளவில் மட்டுமே பல கோடி ரூபாய் செலவில் செய்யப்படுவதாகவும் அதனால் விவசாயிகளுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்றும், ஒவ்வொரு முறையும் பிரதான வாய்க்கால்களான ஏ மற்றும் பி வாய்க்கால்கள் மட்டும் தூர் வாருவதாகவும், அதன் காரணமாக கிளை வாய்க்கால்களான சி மற்றும் டி வாய்க்கால்கள் பெரும்மளவு தூர்வாரமால் விட்டு விடுகின்றனர்.


அய்யா இந்தாண்டாவது முழுமையா தூர்வாருங்யா....மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு காவிரி நீர் கிடைக்காமல் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. அதுமட்டுமின்றி மழை காலத்தில் சி மற்றும் டி வாய்க்கால்கள் தூர்வாரமால் விட்டு விடுவதால் வடிகால் வசதியும் இன்றி மழை நீர் வடிய வழியின்றி பயிர்கள் ஆண்டு தோறும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சாலையோர உள்ள பிரதான வாய்க்கால்களை மட்டும் தூர்வாரி மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றாமல், அனைத்து வாய்க்கால்களையும் முறையாக தூர்வாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS : அருண் IPS-ஐ கூப்பிடுங்க..யோசிக்காமல் அழைத்த ஸ்டாலின்!Mumtaz crying : ”நிறைய பாவம் பண்ணிட்டேன்” கண்ணீர் விட்ட மும்தாஜ்! காரணம் என்ன?Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
Embed widget