மேலும் அறிய

தஞ்சாவூர் : கொட்டும் மழை, கொளுத்தும் வெயில்.. கம்பீரமாக நிற்கும் தஞ்சை ராஜகோபால பீரங்கி.. வரலாறு என்ன?

400 ஆண்டுகளாக வெட்டவெளியில் கொட்டும் மழை, கொளுத்தும் வெயிலில் கம்பீரமாக உள்ள தஞ்சை ராஜகோபால பீரங்கி.

தஞ்சைக்கு சுற்றுலா வருகிறீர்களா? அப்போ நீங்கள் பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடம் ஒன்று உள்ளது. அதுதான் பீரங்கி மேடு. அங்க அப்படி என்னதான் இருக்கு என்கிறீர்களா? இன்று உலகில் உள்ள, பழைய பீரங்கிகளில் ஐந்தாம் இடம் பிடித்துள்ள பீரங்கி உள்ள இடம்தான் இது.

தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை கி.பி. 1532-இல் ஆட்சி தொடங்கினர். இரகுநாத நாயக்கர் (கி.பி.1600 – 1645) இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த தஞ்சாவூர் நாயக்கவம்சத்தின் மூன்றாவது மன்னர். தஞ்சையை ஆண்ட நாயக்கர்களில் தனிச்சிறப்புடையவராக விளங்கியவர்தான் இந்த இரகுநாத நாயக்கர்.

இவர் தம்முடைய தந்தையின் மறைவிற்குப் பின்பு கி.பி.1617இல் முறைப்படி தஞ்சை நாயக்கர் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். இன்றைய தஞ்சையில் உள்ள மானோஜிப்பட்டி பகுதி அன்றைய கொல்லர்களின் இருப்பிடம் மற்றும் பணியிடம் என்பதையும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். எவ்வித வசதிகளும் இல்லாத காலத்தில் தஞ்சைக் கொல்லர்களின் தொழிற் திறமையால் இரகுநாத நாயக்கரின் ஆணைக்கிணங்க உருவானது இராஜகோபால பீரங்கி என்று அழைக்கப்படும் இந்த பழமையான பீரங்கி. இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது.


தஞ்சாவூர் : கொட்டும் மழை, கொளுத்தும் வெயில்.. கம்பீரமாக நிற்கும் தஞ்சை ராஜகோபால பீரங்கி.. வரலாறு என்ன?

தான் வணங்கும் தெய்வமான, மன்னார்குடி, இராஜகோபால சுவாமியின் பெயரையே இந்தப் பெரும் பீரங்கிக்கு பெயராக வைத்தார் இரகுநாத நாயக்கர் என்பதையும் தெரிந்து கொள்வோம். தஞ்சாவூர் பெரிய கோட்டையின் உட்புறம் கிழக்கு வாசலையொட்டி வெள்ளை பிள்ளையார் கோவில் அருகில் ஒரு பெரிய மேடை (சுமார் 60 அடி உயரத்திற்கு குன்று) போல் அமைக்கப்பெற்று அதன்மேல் இந்த பெரிய பீரங்கியானது வைக்கப்பட்டுள்ளது. கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை கம்பீரமாக இந்த பீரங்கி மேடை உள்ளது. காலப்போக்கில் இது பீரங்கி மேடு என்றே அழைக்கலாயிற்று.

பொதுவாகப் பீரங்கிகள் வார்ப்பிரும்பால் வார்க்கப்படும். ஆனால் தஞ்சை பீரங்கியோ தேனிரும்புப் பட்டைகளால் இணைப்பு முறையில் உருவாக்கப் பெற்றுள்ளது என்பதை தெரிந்து கொள்வோம். 26 அடி நீளம் 300 எம்எம் உருட்டுருளையும் 150 எம்எம் உட்சுவர் கனமும் கொண்டது. தேனிரும்பால் செய்யப் பெற்ற இந்த பீரங்கியின் எடை 27 டன். இந்தியாவிலுள்ள மிகப் பெரிய பீரங்கிகளில் இதுவும் ஒன்றாகும்.

தஞ்சை நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பீரங்கி செய்யும் தொழில்நுட்பமானது அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.

மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளில் இருக்கும் பீரங்கிகள் வண்ணம் பூசப்பட்டு பாதுகாப்பான முறையில் பூட்டப்பட்டிருக்கும். ஆனால் தஞ்சாவூரில் உள்ள இந்த பீரங்கி 400 ஆண்டுகளாக வெட்டவெளியில் கொட்டும் மழை, கொளுத்தும் வெயிலில் இருந்தும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கன கம்பீரமாக கட்டுக்குலையாமல் உள்ளது.

 


தஞ்சாவூர் : கொட்டும் மழை, கொளுத்தும் வெயில்.. கம்பீரமாக நிற்கும் தஞ்சை ராஜகோபால பீரங்கி.. வரலாறு என்ன?
 
2004-ஆம் ஆண்டு கான்பூர் ஐஐடி-யை சேர்ந்தவர்கள் தஞ்சாவூரில் இருக்கும் இந்த ராஜகோபால பீரங்கியை ஆய்வு மேற்கொள்ளும் போது இந்த பீரங்கியை பற்றி கணிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். அதற்கு முன்னதாகவே ரோஸ்லர் எனும் ஆய்வாளர் அல்ட்ராசோனிக் எனப்படும் மீயொலி அலைகளை வைத்து இந்த பீரங்கியின் வடிவமைப்பை மிக தெளிவாக குறிப்பிட்டிருந்தார். பிறகு இந்த குறிப்பை எடுத்துக்கொண்டு ஐஐடி சேர்ந்தவர்கள் இந்த பீரங்கியின் அடிப்படை அமைப்புகளை தெரிந்துள்ளார்கள்.

இந்த பீரங்கியை உருவாக்க இரண்டு முக்கியமான தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு தொழில்நுட்பம் மற்றும் வரலாறு கொண்ட இந்த பீரங்கிமேடானது முழுக்க முழுக்க தமிழர்களின் தொழில்நுட்பங்களாலும் சிந்தனைகளாலும் உருவாக்கப்பட்டது. தஞ்சைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இதை ஒருமுறை பார்த்து நம் முன்னோர்களின் தொழில் திறமையை கண்டு மகிழ வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரூ.26 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி! தஞ்சை விவசாயிகள் மகிழ்ச்சி, இன்னும் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
ரூ.26 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி! தஞ்சை விவசாயிகள் மகிழ்ச்சி, இன்னும் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
தஞ்சாவூர் பசுபதிகோவிலில் ஒரே பிரசவத்தில் இரட்டை கன்றுகள்: விவசாயி வீட்டில் ஆச்சரியம்!
தஞ்சாவூர் பசுபதிகோவிலில் ஒரே பிரசவத்தில் இரட்டை கன்றுகள்: விவசாயி வீட்டில் ஆச்சரியம்!
ராஜகோபுரமும் கொடிமரமும் இல்லையா? மாங்கல்ய பலன் தரும் ரகசியம்! திருசக்கராப்பள்ளி தரிசனம்!
ராஜகோபுரமும் கொடிமரமும் இல்லையா? மாங்கல்ய பலன் தரும் ரகசியம்! திருசக்கராப்பள்ளி தரிசனம்!
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உபரி பட்ஜெட்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பெருமிதம்
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உபரி பட்ஜெட்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பெருமிதம்
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
BYD Blade Battery: என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
Embed widget