மேலும் அறிய

திருவாரூர்: நகை, பயிர் கடன் வழங்காமல் அலைக்கழிப்பு - கூட்டுறவு கடன் சங்கம் மீது விவசாயிகள் புகார்

கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்த 222 விவசாயிகளுக்கு நகை கடன் மற்றும் பயிர் கடன் வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு நகை மற்றும் பயிர் கடன் வழங்காமல் அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு 2 லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணியிலும், ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி நெல் சாகுபடி பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நெல் சாகுபடி பணி தொடங்கிய பொழுது தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இரண்டு முறை நெல் பயிர்கள் கனமழையின் காரணமாக முழுவதுமாக பாதிக்கப்பட்டு மீண்டும் நடவு மற்றும் தெளிப்பு பணிகள் மூலமாக நெல் சாகுபடி பணிகளில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாய நிலத்தில் தேங்கி இருந்த மழை நீரை வடிய வைத்து நெல் பயிர்களுக்கு யூரியா டிஏபி உள்ளிட்ட இடுபொருட்களை விவசாயிகள் அடித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்த 222 விவசாயிகளுக்கு நகை கடன் மற்றும் பயிர் கடன் வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.


திருவாரூர்: நகை, பயிர் கடன் வழங்காமல் அலைக்கழிப்பு - கூட்டுறவு கடன் சங்கம் மீது விவசாயிகள் புகார்

கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூத்தனூர் அகர திருமாளம், கோவில் திருமாளம், கொத்தவாசல், ரெட்டைக்குடி, செம்பியமங்கலம் உட்பட 12 கிராம விவசாயிகள் தங்களுக்கு தேவையான பயிர் கடன் உள்ளிட்ட வரவு செலவுகளை வைத்துள்ளனர். இந்த ஆண்டு இந்த வங்கிக்கு ரூ நான்கு கோடியே 80 லட்சத்தை மத்திய கூட்டுறவு வங்கி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் முதல் கட்டமாக ரூ.4 கோடி நிதி வரப்பட்டது. அதனைக் கொண்டு 831 விவசாயிகள் பயிர் கடன் மற்றும் நகை கடன் கேட்டு விண்ணப்பித்த நிலையில் 609 விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் நகை கடன் வழங்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 222 விவசாயிகள் பயிர் கடன் மற்றும் நகை கடன் இதுவரை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு கடன் வழங்காமல் கூட்டுறவு கடன் சங்கம் இழுத்தடிப்பு செய்து வருகிறது.


திருவாரூர்: நகை, பயிர் கடன் வழங்காமல் அலைக்கழிப்பு - கூட்டுறவு கடன் சங்கம் மீது விவசாயிகள் புகார்

உதாரணமாக முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற விவசாயி கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி அன்று தனது 5 சவரன் தங்க நகையை கூத்தனூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கொடுத்து கடன் கேட்டு விண்ணப்பித்தார் அவருக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக தனியாரிடம் ஐந்து பைசா வட்டிக்கு பணம் வாங்கி தனது விவசாயப் பணியை மேற்கொண்டு வருகிறார். இது போல் மற்ற விவசாயிகளும் பரிதவித்து வருகின்றனர். தற்போது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் வாங்குவதற்காக கடன் கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில் காலதாமதம் ஆவதால் பயிர்கள் வளர்ந்து வயிறுக்கான இடுபொருட்கள் வைக்க காலதாமதமாகி வருகிறது. அவ்வாறு தாமதம் செய்து உரம் தெளித்தால் எந்த பயனும் இருக்காது என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், தனியாரிடம் கூடுதல் வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கூட்டுறவு வங்கி செயலாளர் மணிகண்டன் கூறும்போது முதல் கட்டமாக நான்கு கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நகை கடன் மற்றும் விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது மேலும் 80 லட்சம் கேட்டு விண்ணப்பித்து தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணம் வந்தவுடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Thanjavur District power cut 7.7.26: சார்ஜர் தேடுறவங்க இப்பவே தேடுங்க, தண்ணீர் டேங்கையும் நிரப்பிடுங்க: மிக்ஸி, டிவி நாளை ஒரு நாள் 'ஹாலிடே மோடு'!
Thanjavur District power cut 7.7.26: சார்ஜர் தேடுறவங்க இப்பவே தேடுங்க, தண்ணீர் டேங்கையும் நிரப்பிடுங்க: மிக்ஸி, டிவி நாளை ஒரு நாள் 'ஹாலிடே மோடு'!
ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தீ! நரகமாக மாறிய குடியிருப்பு பகுதிகள்
ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தீ! நரகமாக மாறிய குடியிருப்பு பகுதிகள்
கும்பகோணத்தில் 44 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்: அமைச்சர் வினோத்ரவி பெருமிதம்
கும்பகோணத்தில் 44 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்: அமைச்சர் வினோத்ரவி பெருமிதம்
கருகும் குறுவை கனவுகள்! சான்றிதழ் தர மறுக்கும் விஏஓக்கள்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய விவசாயிகள்
கருகும் குறுவை கனவுகள்! சான்றிதழ் தர மறுக்கும் விஏஓக்கள்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய விவசாயிகள்

வீடியோ

TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!
Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Best Mileage Cars: ஒரு கிலோமீட்டருக்கு வெறும் ரூ.2.68 தான்; உங்கள் செலவை குறைக்கும் சூப்பரான மைலேஜ் கார்களின் லிஸ்ட்
ஒரு கிலோமீட்டருக்கு வெறும் ரூ.2.68 தான்; உங்கள் செலவை குறைக்கும் சூப்பரான மைலேஜ் கார்களின் லிஸ்ட்
Embed widget