மேலும் அறிய

திருவாரூர்: நகை, பயிர் கடன் வழங்காமல் அலைக்கழிப்பு - கூட்டுறவு கடன் சங்கம் மீது விவசாயிகள் புகார்

கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்த 222 விவசாயிகளுக்கு நகை கடன் மற்றும் பயிர் கடன் வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு நகை மற்றும் பயிர் கடன் வழங்காமல் அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு 2 லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணியிலும், ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி நெல் சாகுபடி பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நெல் சாகுபடி பணி தொடங்கிய பொழுது தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இரண்டு முறை நெல் பயிர்கள் கனமழையின் காரணமாக முழுவதுமாக பாதிக்கப்பட்டு மீண்டும் நடவு மற்றும் தெளிப்பு பணிகள் மூலமாக நெல் சாகுபடி பணிகளில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாய நிலத்தில் தேங்கி இருந்த மழை நீரை வடிய வைத்து நெல் பயிர்களுக்கு யூரியா டிஏபி உள்ளிட்ட இடுபொருட்களை விவசாயிகள் அடித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்த 222 விவசாயிகளுக்கு நகை கடன் மற்றும் பயிர் கடன் வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.


திருவாரூர்: நகை, பயிர் கடன் வழங்காமல் அலைக்கழிப்பு - கூட்டுறவு கடன் சங்கம் மீது விவசாயிகள் புகார்

கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூத்தனூர் அகர திருமாளம், கோவில் திருமாளம், கொத்தவாசல், ரெட்டைக்குடி, செம்பியமங்கலம் உட்பட 12 கிராம விவசாயிகள் தங்களுக்கு தேவையான பயிர் கடன் உள்ளிட்ட வரவு செலவுகளை வைத்துள்ளனர். இந்த ஆண்டு இந்த வங்கிக்கு ரூ நான்கு கோடியே 80 லட்சத்தை மத்திய கூட்டுறவு வங்கி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் முதல் கட்டமாக ரூ.4 கோடி நிதி வரப்பட்டது. அதனைக் கொண்டு 831 விவசாயிகள் பயிர் கடன் மற்றும் நகை கடன் கேட்டு விண்ணப்பித்த நிலையில் 609 விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் நகை கடன் வழங்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 222 விவசாயிகள் பயிர் கடன் மற்றும் நகை கடன் இதுவரை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு கடன் வழங்காமல் கூட்டுறவு கடன் சங்கம் இழுத்தடிப்பு செய்து வருகிறது.


திருவாரூர்: நகை, பயிர் கடன் வழங்காமல் அலைக்கழிப்பு - கூட்டுறவு கடன் சங்கம் மீது விவசாயிகள் புகார்

உதாரணமாக முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற விவசாயி கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி அன்று தனது 5 சவரன் தங்க நகையை கூத்தனூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கொடுத்து கடன் கேட்டு விண்ணப்பித்தார் அவருக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக தனியாரிடம் ஐந்து பைசா வட்டிக்கு பணம் வாங்கி தனது விவசாயப் பணியை மேற்கொண்டு வருகிறார். இது போல் மற்ற விவசாயிகளும் பரிதவித்து வருகின்றனர். தற்போது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் வாங்குவதற்காக கடன் கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில் காலதாமதம் ஆவதால் பயிர்கள் வளர்ந்து வயிறுக்கான இடுபொருட்கள் வைக்க காலதாமதமாகி வருகிறது. அவ்வாறு தாமதம் செய்து உரம் தெளித்தால் எந்த பயனும் இருக்காது என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், தனியாரிடம் கூடுதல் வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கூட்டுறவு வங்கி செயலாளர் மணிகண்டன் கூறும்போது முதல் கட்டமாக நான்கு கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நகை கடன் மற்றும் விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது மேலும் 80 லட்சம் கேட்டு விண்ணப்பித்து தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணம் வந்தவுடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget