மேலும் அறிய

திருவாரூர்: நகை, பயிர் கடன் வழங்காமல் அலைக்கழிப்பு - கூட்டுறவு கடன் சங்கம் மீது விவசாயிகள் புகார்

கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்த 222 விவசாயிகளுக்கு நகை கடன் மற்றும் பயிர் கடன் வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு நகை மற்றும் பயிர் கடன் வழங்காமல் அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு 2 லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணியிலும், ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி நெல் சாகுபடி பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நெல் சாகுபடி பணி தொடங்கிய பொழுது தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இரண்டு முறை நெல் பயிர்கள் கனமழையின் காரணமாக முழுவதுமாக பாதிக்கப்பட்டு மீண்டும் நடவு மற்றும் தெளிப்பு பணிகள் மூலமாக நெல் சாகுபடி பணிகளில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாய நிலத்தில் தேங்கி இருந்த மழை நீரை வடிய வைத்து நெல் பயிர்களுக்கு யூரியா டிஏபி உள்ளிட்ட இடுபொருட்களை விவசாயிகள் அடித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்த 222 விவசாயிகளுக்கு நகை கடன் மற்றும் பயிர் கடன் வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.


திருவாரூர்: நகை, பயிர் கடன் வழங்காமல் அலைக்கழிப்பு - கூட்டுறவு கடன் சங்கம் மீது விவசாயிகள் புகார்

கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூத்தனூர் அகர திருமாளம், கோவில் திருமாளம், கொத்தவாசல், ரெட்டைக்குடி, செம்பியமங்கலம் உட்பட 12 கிராம விவசாயிகள் தங்களுக்கு தேவையான பயிர் கடன் உள்ளிட்ட வரவு செலவுகளை வைத்துள்ளனர். இந்த ஆண்டு இந்த வங்கிக்கு ரூ நான்கு கோடியே 80 லட்சத்தை மத்திய கூட்டுறவு வங்கி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் முதல் கட்டமாக ரூ.4 கோடி நிதி வரப்பட்டது. அதனைக் கொண்டு 831 விவசாயிகள் பயிர் கடன் மற்றும் நகை கடன் கேட்டு விண்ணப்பித்த நிலையில் 609 விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் நகை கடன் வழங்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 222 விவசாயிகள் பயிர் கடன் மற்றும் நகை கடன் இதுவரை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு கடன் வழங்காமல் கூட்டுறவு கடன் சங்கம் இழுத்தடிப்பு செய்து வருகிறது.


திருவாரூர்: நகை, பயிர் கடன் வழங்காமல் அலைக்கழிப்பு - கூட்டுறவு கடன் சங்கம் மீது விவசாயிகள் புகார்

உதாரணமாக முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற விவசாயி கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி அன்று தனது 5 சவரன் தங்க நகையை கூத்தனூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கொடுத்து கடன் கேட்டு விண்ணப்பித்தார் அவருக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக தனியாரிடம் ஐந்து பைசா வட்டிக்கு பணம் வாங்கி தனது விவசாயப் பணியை மேற்கொண்டு வருகிறார். இது போல் மற்ற விவசாயிகளும் பரிதவித்து வருகின்றனர். தற்போது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் வாங்குவதற்காக கடன் கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில் காலதாமதம் ஆவதால் பயிர்கள் வளர்ந்து வயிறுக்கான இடுபொருட்கள் வைக்க காலதாமதமாகி வருகிறது. அவ்வாறு தாமதம் செய்து உரம் தெளித்தால் எந்த பயனும் இருக்காது என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், தனியாரிடம் கூடுதல் வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கூட்டுறவு வங்கி செயலாளர் மணிகண்டன் கூறும்போது முதல் கட்டமாக நான்கு கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நகை கடன் மற்றும் விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது மேலும் 80 லட்சம் கேட்டு விண்ணப்பித்து தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணம் வந்தவுடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் 21 வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம்! காரணம் என்ன?
தஞ்சாவூரில் 21 வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம்! காரணம் என்ன?
திருச்சி திமுக மாநாடு: 2026 தேர்தலில் திருப்புமுனையாகுமா? ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவாரா?
திருச்சி திமுக மாநாடு: 2026 தேர்தலில் திருப்புமுனையாகுமா? ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவாரா?
தஞ்சாவூரில் நடந்த மகளிர் தினவிழாவில் பெண்கள் உண்மையான சமூக விடுதலை பெற உறுதிமொழியேற்பு
தஞ்சாவூரில் நடந்த மகளிர் தினவிழாவில் பெண்கள் உண்மையான சமூக விடுதலை பெற உறுதிமொழியேற்பு
இப்போ அந்த காரை யார் வச்சிருக்கா... தஞ்சையில் விமல் செம கலகல
இப்போ அந்த காரை யார் வச்சிருக்கா... தஞ்சையில் விமல் செம கலகல
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
MS Dhoni: ”சிரிப்பு நல்லா இருக்குயா” நான் கம்பீர் மாதிரி இல்லை - 2 வருடங்களுக்கு பிறகு தோனி போட்ட பதிவு
MS Dhoni: ”சிரிப்பு நல்லா இருக்குயா” நான் கம்பீர் மாதிரி இல்லை - 2 வருடங்களுக்கு பிறகு தோனி போட்ட பதிவு
Top 10 News Headlines: பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
TN Roundup: திருச்சியில் திமுக மாநாடு, சென்னையில் இரட்டைக் கொலை, தங்கம் விலை சரிவு -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: திருச்சியில் திமுக மாநாடு, சென்னையில் இரட்டைக் கொலை, தங்கம் விலை சரிவு -தமிழகத்தில் இதுவரை
Jewelery Loan waiver : நகைக்கடன் தள்ளுபடி..? எத்தனை சவரன்..? யாருக்கெல்லாம்.? போட்டி போட்டு ரெடியாகும் லிஸ்ட்
நகைக்கடன் தள்ளுபடி..? எத்தனை சவரன்..? யாருக்கெல்லாம்.? போட்டி போட்டு ரெடியாகும் லிஸ்ட்
T20 Worldcup Final: சல்லி சல்லியா நொறுங்கிய சாதனைகள்..! முதல் அணியாக இந்தியா சரித்திரம் - முழு பரிசு விவரங்கள்
T20 Worldcup Final: சல்லி சல்லியா நொறுங்கிய சாதனைகள்..! முதல் அணியாக இந்தியா சரித்திரம் - முழு பரிசு விவரங்கள்
Suryakumar Yadav: ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா? கோலியால முடியல, லெஜண்ட் பட்டம் இருக்கா?
Suryakumar Yadav: ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா? கோலியால முடியல, லெஜண்ட் பட்டம் இருக்கா?
Embed widget