மேலும் அறிய

கொரோனா அச்சம்: கபசுர குடிநீர் அருந்தும் கோயில் யானை!

மூலிகை சாம்பிராணி புகை போட்டு யானைக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் யானைப் பாகன்.

கடந்த ஆண்டு, நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் விலங்குகள் பூங்காவில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக ஊடகங்கள் தெரிவித்தது. பிராங்க்ஸ் விலங்குகள் பூங்காவில் ஒரு புலிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு மேலும், அங்கே 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அது மட்டுமில்லாமல், அங்கே மேலும் 6 புலிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா அச்சம்: கபசுர குடிநீர் அருந்தும் கோயில் யானை!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பராமரிப்பாளரிடமிருந்து விலங்குகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். பாதிக்கப்பட்ட விலங்குகள் அனைத்தும் சிறப்பாக செயல்படுவதாகவும், நல்ல பசியும், குறைவாக இருமலும் இருப்பதாக  பூங்கா நிர்வாகம் தெரிவித்திருந்தது.

கொரோனா அச்சம்: கபசுர குடிநீர் அருந்தும் கோயில் யானை!

அதேபோல், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. மனிதர்களிடையே மட்டுமே பரவி வந்த கொரோனா வைரஸ், தற்போது விலங்குகளுக்கும் பரவும் என்கிற தகவல், இந்தியாவின் பூங்காக்களில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மூலம் உறுதி செய்யப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் (NZP) எட்டு ஆசிய சிங்கங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா அச்சம்: கபசுர குடிநீர் அருந்தும் கோயில் யானை!

இந்த சிங்கங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளில் பாசிட்டிவ் வந்தது என்று ஏப்ரல் 29-ம் தேதி தகவல் வெளியானது. இருப்பினும், NZP இன் கண்காணிப்பாளரும் இயக்குநருமான டாக்டர் சித்தானந்த் குக்ரெட்டி இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கவும் இல்லை, அதேசமயம் சிங்கங்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதியாக அறிவிக்கவும் இல்லை.

கொரோனா அச்சம்: கபசுர குடிநீர் அருந்தும் கோயில் யானை!

இதன் மூலம் விலங்குகளையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாளுக்கு வழங்கினார் கோயில் பாகன் வினோத். மேலும், யானைக்கு மூலிகை சாம்பிராணி புகை போட்டு யானைக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பாகன்.

கொரோனா அச்சம்: கபசுர குடிநீர் அருந்தும் கோயில் யானை!

கொரோனா வைரஸ் தொற்று, விலங்குகளுக்கும் பரவுமா? தொற்றிலிருந்து விலங்குகள் மீண்டு வர சரியான வழிமுறைகள் என்ன என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் , ஆராய்ச்சியாளர்கள், அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வழங்காத பட்சத்தில் மயிலாடுதுறையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

கொரோனா அச்சம்: கபசுர குடிநீர் அருந்தும் கோயில் யானை!

சில விலங்குகள் மக்களிடமிருந்து வைரஸ் தொற்று பெறலாம் என்றும், அந்த விலங்குகள் அதை மனிதர்களுக்கு கடத்துவதற்கான அறிகுறி இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வழிகாட்டு முறைகள் இல்லை என்றாலும், பாகன்கள் விருப்பப்பட்டு, தங்களின் வளர்ப்பான யானைகளை பாதுகாக்க கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு துவங்கியிருக்கிறது. இது இன்னும் பிற கோவில்களிலும் தொடர வாய்ப்பு இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு... நெல்லை - சென்னை சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
பயணிகள் கவனத்திற்கு... நெல்லை - சென்னை சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
சேதமான பாசன வாய்க்கால் படித்துறையால் சோகம்: உடன் சீரமைக்க ஆலக்குடி பொதுமக்கள் வலியுறுத்தல்
சேதமான பாசன வாய்க்கால் படித்துறையால் சோகம்: உடன் சீரமைக்க ஆலக்குடி பொதுமக்கள் வலியுறுத்தல்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
பம்பர் ஆஃபர்! 'உத்யமி மித்ரா' திட்டத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்... யாரெல்லாம் பெறலாம்?
பம்பர் ஆஃபர்! 'உத்யமி மித்ரா' திட்டத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்... யாரெல்லாம் பெறலாம்?

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
Embed widget