மேலும் அறிய

சிறுமிகளுக்கு அதிகரிக்கும் பாலியல் தொல்லை: தஞ்சை, கும்பகோணத்தில் 2 பேர் கைது

சிறுமியை ஆசை வார்த்தை காட்டி பிரதீப் கண்ணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி இதுகுறித்து தனது குடும்பத்தினரும் தகவல் தெரிவித்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர், கும்பகோணத்தில் இருவேறு சம்பவங்களில் சிறுமிகளுக்கு நடந்த பாலியல் பிரச்னையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த உறவுக்கார சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் பி.பிரதீப்கண்ணன் (24). கூலித் தொழிலாளி. இவர் தஞ்சை அருகே நடந்த ஒரு கோயில் விழாவிற்காக தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அதேபோல் தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். சிறுமியும், பிரதீப் கண்ணனும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த சிறுமியை ஆசை வார்த்தை காட்டி பிரதீப் கண்ணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் வல்லம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் பிரதீப்கண்ணனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த சிறுமியை பிரதீப்கண்ணன் பாலியல் வன்கொடுமை செய்தது உண்மை என்று தெரிய வந்தது.  இதையடுத்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதீப் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

கும்பகோணத்தில் சிறுமிக்கு நேர்ந்த அதிர்ச்சி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் 36 வயது கூலி தொழிலாளி. இவரது மனைவியை பிரசவத்திற்காக, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்.

இந்நிலையில் இந்த தம்பதிக்கு நேற்றுமுன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. இதனால், மனைவிக்கு துணையாக தனது தம்பி மனைவியையும், அவரது ஆறு வயது மகளையும் அழைத்து வந்துள்ளார். ஆனால், பிரசவ வார்டில், ஒருவர் மட்டுமே தங்க முடியும் என்பதால், அந்த கூலித் தொழிலாளி தம்பி மனைவியை, அந்த வார்டில் தங்க வைத்துள்ளார். 

தொழிலாளியும், அவரது தம்பியின் ஆறு வயது மகளும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பு கூடத்தில் இரவு துாங்கியுள்ளனர். அப்போது, இரவில் சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி அழுதுக்கொண்டே, தனது பெரியப்பாவை எழுப்பி நடந்ததை கூறியுள்ளார்.

பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த இளைஞரை பிடித்து கிழக்கு போலீசில் அந்த கூலி தொழிலாளி ஒப்படைத்துள்ளார். பிறகு, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடத்திய விசாரணையில், பாலியல் தொல்லை கொடுத்தவர் திருவாரூர் மாவட்டம் புங்கன்சேரி பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை செய்யும் தினேஷ் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து  தினேசை கைது செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Embed widget