மேலும் அறிய

டைனோசர் முட்டையை பார்க்கணுமா... வாங்க வாரணவாசி அரசு அருங்காட்சியகத்திற்கு!!!

அரியலூர் கனிம சுரங்கங்களில் சுமார் 6.5 முதல் 7.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் அதிகமாக கிடைத்து வருகிறது.

தஞ்சாவூர்: ஆச்சரியங்களும், மர்மங்களும் நிறைந்ததுதான் பூமி. இப்படித்தான் பூமி இருந்தது என்று வரையறுத்து கூறிவிட முடியாது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய உயிரினங்கள் வாழ்ந்துள்ளன என்பதற்கு அவ்வப்போது சாட்சியாக பல்வேறு படிவங்கள் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆப்பிரிக்காவின் பழமையான டைனோசரின் எச்சங்களை ஜிம்பாப்வேயில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எம்பிரேசரஸ் ராத்தி என்று அழைக்கப்படும் இந்த டைனோசர், ஒரு மீட்டர் உயரம் கொண்டதாகவும், இரண்டு கால்களில் ஓடியதாகவும், நீண்ட கழுத்து மற்றும் கூர்மையான ஒழுங்கற்ற பற்கள் கொண்டதாகவும் இருந்தன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இப்படி பல்வேறு பகுதிகளில் டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


டைனோசர் முட்டையை பார்க்கணுமா... வாங்க வாரணவாசி அரசு அருங்காட்சியகத்திற்கு!!!

அந்த வகையில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் பகுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பகுதிகளில் பல்வேறு விவசாயப் பணிக்காக அவ்வப்போது பூமியைத் தோண்டும் பொழுது வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு போன்ற முட்டை வடிவிலான பாறைகள் கிடைக்கப் பெற்று வருகிறது. பல நேரங்களில் அவை டைனோசர் முட்டை என்று கூறப்பட்டாலும் அது உண்மையில்லை என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரியலூர் கனிம சுரங்கங்களில் சுமார் 6.5 முதல் 7.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் அதிகமாக கிடைத்து வருகிறது. 1980-85 காலக்கட்டங்களில் தமிழ்நாடு சிமெண்டு நிறுவன திறந்தவெளி சுரங்கத்தில் ஒரு முட்டை வடிவிலான கன்கர் எனும் பாறை கிடைத்தது. இது பாறை என்று நினைத்திருந்த நிலையில் கடந்த 1996-ல் இதை ஜெர்மனி மற்றும் நம் நாட்டை சேர்ந்த சில தொல்லுயிர் ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். அப்போது ஒரு பெரிய உண்மை தெரிய வந்தது. ஆம் அது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை. அட ஆமாங்க. அது பாறையல்லை... டைட்டனோசரஸ் என்ற ஒருவகை தாவர உண்ணி டைனோசரின் முட்டை என தெரியவந்தது. எவ்வளவு பெரிய ஆச்சரியம். இதுதான் பூமியில் நிறைந்துள்ள ஆச்சரியங்களும், மர்மங்களும் என்பதுதான் எவ்வளவு பெரிய உண்மை.

சுமார் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைட்டனோசரஸ் வகை டைனோசர் ஒரு ஆற்றின் ஓரமாக அதன் கூட்டில் இட்ட முட்டை காலப்போக்கில் தண்ணீரில் அடித்துக் கொண்டு கடல் அடியில் போய் சேர்ந்துள்ளது. அங்கு உள்ள படிமணலில் புதைந்து காலப்போக்கில் படிவமாகி இன்று நமக்கு சிதையாமல் கிடைத்திருக்கிறது.

இந்தியாவிலேயே கடலடியில் உருவான பாறைகளில் கிடைத்த ஒரே டைனோசர் முட்டை இதுவே என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்நிலையில் அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குனர் பாசில் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்காக இந்த பழமையான டைனோசர் முட்டையை வழங்கினார்.

இந்த பழமையான டைனோசர் முட்டை தற்போது வாரணவாசி அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த டைனோசர் முட்டையை அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் பார்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வாரணவாசி அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள டைனோசர் முட்டையை அரியலூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, மாணவ, மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி, டைனோசர் முட்டை போன்றவை குறித்து மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அறிந்து கொள்ள முடிகிறது. இப்ப சொல்லுங்கள் நம்ம பூமி,  ஆச்சரியங்களும், மர்மங்களும் அடங்கியது என்பது உண்மைதானே!!! 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Musk on World War: “இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
“இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
Embed widget