மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை!

கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கு இறங்க வேண்டாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதை முன்னிட்டு மாவட்ட கண்காணிப்பாளரும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனருமான அமுதவல்லி ஐஏஎஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களை மாவட்ட கண்காணிப்பாளர் அமுதவல்லி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மழைக்காலம் துவங்குவதை முன்னிட்டு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சேராமல் இருக்க வடிகால் வாய்க்கால்களை துரித கதியில் தூர்வாரி வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 


மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை!

அதனைத் தொடர்ந்து பேசிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, ”மயிலாடுதுறை நகரில் நீண்ட கால பிரச்சனையாக உள்ள பாதாள சாக்கடை திட்ட பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி வெள்ள நீர் கடலில் கலக்கும் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறைக்கு இன்னும் இரண்டு தினங்களில் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும், உபரி வெள்ள நீர் 60000 கன அடி வரை கடலில் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கு இறங்க வேண்டாம் என்றும், குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, படிப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை  காற்று புகாத தண்ணீரால் சேதமடையாத வகையில் பாலித்தீன் பைகளில் சுற்றி கவனமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாவட்டத்தில் நான்கு இடங்களில் பொதுமக்கள் தங்குவதற்கு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், கூடுதலாக தேவைப்பட்டால் பள்ளிகளில் பொதுமக்கள் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் 5 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். 


மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை!

மேலும், மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிகள் நான்கு பேர் வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், இந்த சம்பவம் ஒரு துரதிஷ்டவசமானது என்றும், நாய்களை கொல்ல முடியாது என்பதால் அவற்றிற்கு, கருத்தடைப்பு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் தெருக்களில் விடுவதற்கு நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


வடகிழக்கு பருவமழை பேரிடர் காலங்களில் சிக்கிக்கொள்ளும் மக்களை எவ்வாறு காப்பது. தீயணைப்புதுறை வீரர்கள், குளத்து தண்ணீரில் படகில் சென்று தத்ரூப செயல்விளக்கம் செய்தனர்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் பேரிடர் ஏற்பட்டால் எவ்வாறு பொது மக்களை காப்பது என்பது குறித்த பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அக்களுர் நாககுளத்தில் நடைபெற்றது. தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், வெள்ளத்தில் சிக்கி கொள்ளும் மக்களை எப்படி மீட்பது, தண்ணீர் பாட்டில்கள் வாகன டியூப்கள் இவற்றைக் கொண்டு காப்பாற்றுவது அவர்களுக்கு முதலுதவி எவ்வாறு அளிப்பது என்பது குறித்து செயல் விளக்க காட்சிகள் தீயணைப்பு வீரர்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. 


மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை!

படகில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படுவது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து அடைமழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படுவது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. சீற்றங்களினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவது மற்றும் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்தற்கான தீயணைப்பு வீரர்கள் மூலம் எவ்வாறு கையாள்வது, கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் தப்பிப்பது எப்படி என்பது பற்றி செயல்விளக்க பயிற்சியை தீயணைப்புவீரர்கள், பொதுமக்களுக்கு செய்து காண்பித்தனர்.   நிகழ்ச்சியில் மயிலாடுதுறை தீயணைப்புத் துறை அலுவலர் முத்துக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

மீனும் போணியாகலை... இறைச்சி வாங்கவும் ஆளில்லை: புரட்டாசியால் வெறிச்சோடிய தஞ்சை மீன் மார்க்கெட்
மீனும் போணியாகலை... இறைச்சி வாங்கவும் ஆளில்லை: புரட்டாசியால் வெறிச்சோடிய தஞ்சை மீன் மார்க்கெட்
தஞ்சைக்கு வந்தது 1,462 டன் யூரியா உரம்... 25 வேகன்களில் வந்த உர மூட்டைகள்
தஞ்சைக்கு வந்தது 1,462 டன் யூரியா உரம்... 25 வேகன்களில் வந்த உர மூட்டைகள்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சீருடை கட்டாயம்! நவம்பர் 15 முதல் புதிய நடைமுறை அமல்... மக்கள் வரவேற்பு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சீருடை கட்டாயம்! நவம்பர் 15 முதல் புதிய நடைமுறை அமல்... மக்கள் வரவேற்பு
பாபநாசம் அருகே வயலுக்குள் புகுந்து அட்டகாசம்! நடவு செய்யப்பட்ட சம்பா வயல்களை நாசமாக்கும் காட்டுப்பன்றிகள்
பாபநாசம் அருகே வயலுக்குள் புகுந்து அட்டகாசம்! நடவு செய்யப்பட்ட சம்பா வயல்களை நாசமாக்கும் காட்டுப்பன்றிகள்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
Annamalai: "லண்டனிலே பணம் இல்லை.. தமிழ்நாட்டிற்கு கொடுக்க அவங்களுக்கு ஏது காசு?" விஜய்க்கு அண்ணாமலை கேள்வி
TVK Vs DMK: முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? Detention copy? ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த தவெக
முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? Detention copy? ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த தவெக
தவெக நட்சத்திர பேச்சாளர் விதிமீறல்: வைகோ, திருமாவளவன் பிரச்சாரச் செலவு யாரோடது? அதிமுக கேள்வி!
தவெக நட்சத்திர பேச்சாளர் விதிமீறல்: வைகோ, திருமாவளவன் பிரச்சாரச் செலவு யாரோடது? அதிமுக கேள்வி!
ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரித்தேனா? .. அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு திமுக பிரமுகர் விளக்கம்!
ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரித்தேனா? .. அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு திமுக பிரமுகர் விளக்கம்!
Tasmac: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் - யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் - யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
Maruti Baleno Vs Tata Altroz: மாருதி புதிய பலேனோவா.? டாடா அல்ட்ராஸா.? ரூ.6 லட்சம் பட்ஜெட்ல சிறந்த கார் எது.? இதோ முழு ஒப்பீடு
மாருதி புதிய பலேனோவா.? டாடா அல்ட்ராஸா.? ரூ.6 லட்சம் பட்ஜெட்ல சிறந்த கார் எது.? இதோ முழு ஒப்பீடு
Chennai Power Cut: சென்னைல திங்கட்கிழமை (21.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? பாருங்க
சென்னைல திங்கட்கிழமை (21.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? பாருங்க
டாடா அதிர்ச்சி அறிவிப்பு: அக்.1 முதல் வாகனங்கள் விலை உயர்வு- எவ்வளவு? என்ன காரணம்?
டாடா அதிர்ச்சி அறிவிப்பு: அக்.1 முதல் வாகனங்கள் விலை உயர்வு- எவ்வளவு? என்ன காரணம்?
Embed widget