மேலும் அறிய

’பயிர் காப்பீடு வழங்குக’ வயலில் கருப்புக் கொடி கட்டிய விவசாயிகள்...!

கடை மடைக்கு தண்ணீரும் வராது, நிலத்தடி நீரும் போதிய அளவு இல்லை. அப்படி இருக்கையில் அரும்பாடுப்பட்டு விவசாயம் செய்தாலும், பெருமழை, புயல் என போட்ட முதலை கூட எடுக்க முடியாத விவசாயிகளுக்கு, காப்பீட்டு தொகையாவது முழுமையாக வந்து சேருமா ?

மயிலாடுதுறை அருகே  2020-2021ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க தமிழக அரசை வலியுறுத்தி தரிசு நிலத்தில் கருப்புக் கொடி நட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


’பயிர் காப்பீடு வழங்குக’ வயலில் கருப்புக் கொடி கட்டிய விவசாயிகள்...!

மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் விளங்கி வருகிறது. இந்நிலையில் போதிய மழையின்மை, சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாத காரணம், அப்படி உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும், வாய்க்கால்கள் சரியான முறையில் தூர்வாராததால் காவிரி கடைமடையான இந்த பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேராதது போன்றவற்றால் விவசாயம் என்பது கடும் சிரமத்திற்கு ஒன்றாக மாறி இருக்கிறது.


’பயிர் காப்பீடு வழங்குக’ வயலில் கருப்புக் கொடி கட்டிய விவசாயிகள்...!

இருந்தும் காலம் காலமாக விவசாய தொழிலை மட்டுமே நம்பி உள்ள இப்பகுதி விவசாயிகள், நிலத்தடி நீரை வைத்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருவதால்,  விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும், சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.


’பயிர் காப்பீடு வழங்குக’ வயலில் கருப்புக் கொடி கட்டிய விவசாயிகள்...!

அவ்வாறு நிலத்தடி நீரை வைத்து விவசாயத்தில் ஈடுபட்டு பயிர்களை காப்பாற்றி வரும் விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி அறுவடை காலம் மார்கழி, மற்றும் தை மாதம் என்பதால், அந்த மாதங்களில் ஏற்படும் புயல், கனமழை உள்ளிட்டவற்றில் சிக்கி கடும் பாடுபட்டு செய்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இது போன்ற பேரிடர் காரணங்களால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைந்த அளவிலாவது ஈடுசெய்யும் விதத்தில் விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்து வருகின்றனர். இருந்தும் விவசாயிகள் செய்யும் பயிர் காப்பீட்டு அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் காலத்தில் உரிய முறையில் கணக்கீடு செய்து காப்பீட்டுத் தொகை வழங்காதது,  தொகையை குறைத்து கொடுப்பது, காலம் தாழ்த்துவது என காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 


’பயிர் காப்பீடு வழங்குக’ வயலில் கருப்புக் கொடி கட்டிய விவசாயிகள்...!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு புரெவி மற்றும் நிவர் புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா சாகுபடி முற்றிலும் சாய்ந்து மழை வெள்ள நீரில் மூழ்கி பாழானது. இந்த சூழலில் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்திருந்த இம்மாவட்ட விவசாயிகள் பலருக்கும் இதுநாள் வரை காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என தெரிவிக்கும் விவசாயிகள், கடந்த ஆண்டு சம்பா சாகுபடிக்காக தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கும் பணம் வாங்குயும் சாகுபடி செய்தனர். ஆனால், தங்களால் இந்த ஆண்டுக்கான குறுவை சாகுபடி செய்ய கையில் பணமின்றி தவித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள். தங்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு உடனடியாக பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வழிவகை செய்யவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கையை முன் வைத்து  தரங்கம்பாடி தாலுக்கா சேத்தூர் கிராமத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி தொடங்காத தங்களின் தரிசு நிலத்தில் கருப்புக் கொடியை நட்டு வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு கவனம் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தலைப்பு செய்திகள்

திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget