மேலும் அறிய

ஊரை விட்டு ஒதுக்கியதால் தந்தை, மகன், மகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி...!

சீர்காழி  ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் மனமுடைந்த மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எலி மருந்தை குடித்து தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன். இவர் அதே கிராமத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார், இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் பெண் ஒருவருடன் தவறான உறவில் இருந்ததாக கூறி  இவரை ஐந்தாண்டுகள் தொடுவாய் கிராம பஞ்சாயத்தார்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.


ஊரை விட்டு ஒதுக்கியதால் தந்தை, மகன், மகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி...!

இந்த சூழலில் தொடுவாய் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆடி மாத ஊர் திருவிழாவில் ராமையன் ஊர் கட்டுப்பாட்டை மீறி ஐந்தாண்டுகள் முடிவதற்குள் முன்னதாகவே கலந்து கொண்டுள்ளார். அப்போது  அருகிலுள்ள மீனவ கிராமத்தினர் ராமையனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதனை அறிந்த கிராம நிர்வாகிகள் ஊர் கட்டுப்பாட்டை மீறி ஐந்தாண்டுகள் முடிவதற்குள் திருவிழாவில் கலந்துகொண்டதாக கூறி  ராமையன் குடும்பம் மற்றும் அவரது சகோதரர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை மேலும் 20 ஆண்டுகள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கூறியுள்ளனர்.


ஊரை விட்டு ஒதுக்கியதால் தந்தை, மகன், மகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி...!

இதனால் மனமுடைந்த ராமையன் அவரது 15 வயது மகள் ரபினா, 11 வயது மகன் ரித்திஷ் ஆகிய மூவரும் எலி மருந்தை குடித்து  தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனை அறிந்த உறவினர்கள் மூன்று பேரையும் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில்  சீர்காழி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஊரை விட்டு ஒதுக்கியதால் தந்தை, மகன், மகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி...!

சக மனிதர்களை சக மனிதர்களே துன்புறுத்துவது நிலையானது இந்த பேரிடர் காலத்திலும் தொடர்ந்து வருகிறது. தவறை சட்டபூர்வமாக அணுகாமல், கிராம பஞ்சாயத்த்தை சேர்ட்ந்த நபர்கள் அவரை தண்டிப்பதாக நினைத்து, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அவருடன் தொடர்புடைய ராமையன் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் சட்டத்திற்கு புறம்பாக தண்டித்துள்ளனர். இதனை ஏற்க முடியாத காரணத்தாலேயே ராமையன் தனது மகள் மற்றும் மகனுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம பஞ்சாயத்துகளால் சட்டத்திற்கு புறம்பாக பலர் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவது அப்பகுதி வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளின் ஒன்றாக மாறிவிட்டதால் இந்த பிரச்னையில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம்- 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்-044-24640050

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகளிடம் தஞ்சாவூரில் நாளை கருத்து கேட்புக் கூட்டம்
வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகளிடம் தஞ்சாவூரில் நாளை கருத்து கேட்புக் கூட்டம்
தஞ்சை அருகே அவலம்: சமூக விரோதிகளின் மதுக்கூடமாக மாறிய சித்திரக்குடி துணை சுகாதார மையம்
தஞ்சை அருகே அவலம்: சமூக விரோதிகளின் மதுக்கூடமாக மாறிய சித்திரக்குடி துணை சுகாதார மையம்
டெல்டா மாவட்டங்களில் வாத்து மேய்க்க ஆந்திராவில் இருந்து சிறுவர்கள்? ஷெட் இந்தியா அமைப்பு அதிர்ச்சி தகவல்
டெல்டா மாவட்டங்களில் வாத்து மேய்க்க ஆந்திராவில் இருந்து சிறுவர்கள்? ஷெட் இந்தியா அமைப்பு அதிர்ச்சி தகவல்
22 ஏக்கர் நீர்ப்பிடிப்பு குளம் ஆக்கிரமிப்பை உடன் மீட்க வேண்டும்: அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தீர்மானம்
22 ஏக்கர் நீர்ப்பிடிப்பு குளம் ஆக்கிரமிப்பை உடன் மீட்க வேண்டும்: அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தீர்மானம்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
Skoda Kodiaq RS Sold Out: தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
Embed widget