மேலும் அறிய

ஊரை விட்டு ஒதுக்கியதால் தந்தை, மகன், மகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி...!

சீர்காழி  ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் மனமுடைந்த மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எலி மருந்தை குடித்து தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன். இவர் அதே கிராமத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார், இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் பெண் ஒருவருடன் தவறான உறவில் இருந்ததாக கூறி  இவரை ஐந்தாண்டுகள் தொடுவாய் கிராம பஞ்சாயத்தார்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.


ஊரை விட்டு ஒதுக்கியதால் தந்தை, மகன், மகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி...!

இந்த சூழலில் தொடுவாய் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆடி மாத ஊர் திருவிழாவில் ராமையன் ஊர் கட்டுப்பாட்டை மீறி ஐந்தாண்டுகள் முடிவதற்குள் முன்னதாகவே கலந்து கொண்டுள்ளார். அப்போது  அருகிலுள்ள மீனவ கிராமத்தினர் ராமையனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதனை அறிந்த கிராம நிர்வாகிகள் ஊர் கட்டுப்பாட்டை மீறி ஐந்தாண்டுகள் முடிவதற்குள் திருவிழாவில் கலந்துகொண்டதாக கூறி  ராமையன் குடும்பம் மற்றும் அவரது சகோதரர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை மேலும் 20 ஆண்டுகள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கூறியுள்ளனர்.


ஊரை விட்டு ஒதுக்கியதால் தந்தை, மகன், மகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி...!

இதனால் மனமுடைந்த ராமையன் அவரது 15 வயது மகள் ரபினா, 11 வயது மகன் ரித்திஷ் ஆகிய மூவரும் எலி மருந்தை குடித்து  தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனை அறிந்த உறவினர்கள் மூன்று பேரையும் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில்  சீர்காழி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஊரை விட்டு ஒதுக்கியதால் தந்தை, மகன், மகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி...!

சக மனிதர்களை சக மனிதர்களே துன்புறுத்துவது நிலையானது இந்த பேரிடர் காலத்திலும் தொடர்ந்து வருகிறது. தவறை சட்டபூர்வமாக அணுகாமல், கிராம பஞ்சாயத்த்தை சேர்ட்ந்த நபர்கள் அவரை தண்டிப்பதாக நினைத்து, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அவருடன் தொடர்புடைய ராமையன் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் சட்டத்திற்கு புறம்பாக தண்டித்துள்ளனர். இதனை ஏற்க முடியாத காரணத்தாலேயே ராமையன் தனது மகள் மற்றும் மகனுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம பஞ்சாயத்துகளால் சட்டத்திற்கு புறம்பாக பலர் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவது அப்பகுதி வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளின் ஒன்றாக மாறிவிட்டதால் இந்த பிரச்னையில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம்- 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்-044-24640050

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget