மேலும் அறிய

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் பணியாற்ற இளைஞர்களுக்கு நேர்முகத்தேர்வு

’’டிகிரி படித்து விட்டு தகுதியான வேலை கிடைக்காததால், இப்பணிக்கு வந்துள்ளோம். நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டவர்களில் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் சம்பா, தாளடி நெல் பருவத்தில் 650 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. இந்த கொள்முதல் நிலையங்களில் பணியாற்ற பருவகால அடிப்படையில், பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான அறிவிப்பு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பட்டியல் எழுத்தர் பணிக்கான நேர்முகத் தேர்வு, தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. நேற்று மட்டும் 460 இளைஞர்கள் பங்கேற்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்த  அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, நேர்முகத் தேர்வு நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் பணியாற்ற இளைஞர்களுக்கு நேர்முகத்தேர்வு

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் சம்பா, தாளடி நெல் பருவத்தில் 650 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. தற்போது 309 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுவரை 2,18,784 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களுக்கு பணியாற்ற தேவையான பணியாளர்கள் தேர்வுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இதில் 1,317 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு 24, 25, 27 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது. தேர்வானவர்களுக்கு பின்னர் பணி நியமன ஆணை வழங்கப்படும். நேர்முகத்தேர்வுக்கு வந்திருப்பவர்கள் அனைவரையும் தகுதியின் அடிப்படையில்  பணி வழங்கப்படும் என்றனர்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் பணியாற்ற இளைஞர்களுக்கு நேர்முகத்தேர்வு

இது குறித்து நேர் முகதேர்வில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், டிகிரி படித்து விட்டு தகுதியான வேலை கிடைக்காததால், இப்பணிக்கு வந்துள்ளோம். நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டவர்களில் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது. இதில் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல், தகுதியிலுள்ளவர்களுக்கு பணி வழங்க வேண்டும். இங்கு வந்திருக்கும் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். தங்களது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், படித்த படிப்பிற்கு தகுதியான வேலை வேண்டும் என்பதற்காக வந்துள்ளோம். எங்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, தகுதி உள்ளவர்களுக்கு பணி வழங்க  வேண்டும். கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு இருந்ததால், அவர்களது கட்சியை சேர்ந்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கு வேண்டியவர்களுக்கும் பணி வழங்கப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் பணியாற்ற இளைஞர்களுக்கு நேர்முகத்தேர்வு

இதனால் படித்த, ஏழ்மையில் உள்ளவர்கள், அரசியல் செல்வாக்கு இல்லாதவர்கள் ஏராளமான இளைஞர்கள் வேலை கிடைக்காமல் போய் விட்டது. எனவே, மாவட்ட நிர்வாகம், நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டவர்களில் எந்தவிதமான தலையீடு இல்லாமல் நேர்மையான முறையில் தேர்வு செய்து, தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget