மேலும் அறிய

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் பணியாற்ற இளைஞர்களுக்கு நேர்முகத்தேர்வு

’’டிகிரி படித்து விட்டு தகுதியான வேலை கிடைக்காததால், இப்பணிக்கு வந்துள்ளோம். நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டவர்களில் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் சம்பா, தாளடி நெல் பருவத்தில் 650 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. இந்த கொள்முதல் நிலையங்களில் பணியாற்ற பருவகால அடிப்படையில், பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான அறிவிப்பு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பட்டியல் எழுத்தர் பணிக்கான நேர்முகத் தேர்வு, தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. நேற்று மட்டும் 460 இளைஞர்கள் பங்கேற்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்த  அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, நேர்முகத் தேர்வு நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் பணியாற்ற இளைஞர்களுக்கு நேர்முகத்தேர்வு

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் சம்பா, தாளடி நெல் பருவத்தில் 650 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. தற்போது 309 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுவரை 2,18,784 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களுக்கு பணியாற்ற தேவையான பணியாளர்கள் தேர்வுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இதில் 1,317 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு 24, 25, 27 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது. தேர்வானவர்களுக்கு பின்னர் பணி நியமன ஆணை வழங்கப்படும். நேர்முகத்தேர்வுக்கு வந்திருப்பவர்கள் அனைவரையும் தகுதியின் அடிப்படையில்  பணி வழங்கப்படும் என்றனர்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் பணியாற்ற இளைஞர்களுக்கு நேர்முகத்தேர்வு

இது குறித்து நேர் முகதேர்வில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், டிகிரி படித்து விட்டு தகுதியான வேலை கிடைக்காததால், இப்பணிக்கு வந்துள்ளோம். நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டவர்களில் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது. இதில் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல், தகுதியிலுள்ளவர்களுக்கு பணி வழங்க வேண்டும். இங்கு வந்திருக்கும் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். தங்களது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், படித்த படிப்பிற்கு தகுதியான வேலை வேண்டும் என்பதற்காக வந்துள்ளோம். எங்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, தகுதி உள்ளவர்களுக்கு பணி வழங்க  வேண்டும். கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு இருந்ததால், அவர்களது கட்சியை சேர்ந்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கு வேண்டியவர்களுக்கும் பணி வழங்கப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் பணியாற்ற இளைஞர்களுக்கு நேர்முகத்தேர்வு

இதனால் படித்த, ஏழ்மையில் உள்ளவர்கள், அரசியல் செல்வாக்கு இல்லாதவர்கள் ஏராளமான இளைஞர்கள் வேலை கிடைக்காமல் போய் விட்டது. எனவே, மாவட்ட நிர்வாகம், நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டவர்களில் எந்தவிதமான தலையீடு இல்லாமல் நேர்மையான முறையில் தேர்வு செய்து, தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றனர்.

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Embed widget