மேலும் அறிய

பாசக்கயிறும், கொரோனாவும் - மயிலாடுதுறை கலைஞர்களின் வீதி நாடகம் உணர்த்தியது என்ன?

மக்களை காப்பாற்றுவதற்காக அரசு அதிகாரிகள் காவல்துறையினர், சுகாதாரத் துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் மதிக்கவேண்டும் என்று நாட்டுப்புற கலைஞர்கள் மயிலாடுதுறை பெரியகடை வீதியில் நாடகம் நடத்தியுள்ளனர்

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வலியுறுத்தி சிவன், எமன், கொரோனா வைரஸ் வேடமணிந்து மயிலாடுதுறையில், நாட்டுப்புற கலைஞர்கள் நடத்திய கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை வீதி நாடகம், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தியது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு மே 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இருந்தும் ஊரடங்கு பலதரப்பட்ட மக்கள் மீறி வீதிகளில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு காவல்துறை அபராதம் விதிப்பு, வாகனங்களை பறிமுதல் செய்தல், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பாசக்கயிறும், கொரோனாவும் -  மயிலாடுதுறை கலைஞர்களின் வீதி நாடகம் உணர்த்தியது என்ன?

குறிப்பாக ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 21 ஆயிரத்து 817 ஆக அதிகரித்து உள்ளது.  மேலும் 17470 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், நாகப்பட்டினம் மருத்துவமனைகளில் தற்போது 4095 பேர் தொடர்ந்து தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 252 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசால் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில், நாட்டுப்புறக் கலைஞர்கள் நடத்திய வீதி நாடகம் நடைபெற்றது. அப்போது அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங்பைசல் என்பவர் தலைமையில், நாட்டுப்புறக் கலைஞர்கள் சிவன், எமன் மற்றும் கொரோனா வைரஸ் வேடமணிந்து வீதி நாடகம், மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்றது.   

பாசக்கயிறும், கொரோனாவும் -  மயிலாடுதுறை கலைஞர்களின் வீதி நாடகம் உணர்த்தியது என்ன?

பொதுமக்கள் ஊரடங்கை மதித்து நடக்கவேண்டிய அவசியம் குறித்தும், தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது. சோப்பு போட்டு கை கழுவுதல் முககவசம் அணிந்திருக்க வேண்டும், கொரோனா வைரஸ் பாதிப்புகள்  குறித்து விளக்கினர். சாலையில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது, எமன் பாசக்கயிறை வீசுவது போலவும், சிவபெருமான் அவர்களை காப்பாற்றி, முகக் கவசம் அணிவதன் அவசியத்தை விளக்குவது போலவும் நடித்துக் காண்பித்தனர். மக்களை காப்பாற்றுவதற்காக அரசு அதிகாரிகள் காவல்துறையினர், சுகாதாரத் துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் மதிக்கவேண்டும் என்று நாட்டுப்புற கலைஞர்கள் மயிலாடுதுறை பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில், நடத்திய நாடகம் கொரோனா வைரஸ் தாக்கத்தை மக்களுக்கு எளிதில் உணர்த்துவதாக அமைந்திருந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election: நாடாளுமன்ற தேர்தல் - 2ம் கட்டமாக இன்று 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு - எந்த மாநிலங்களில் யார் போட்டி?
நாடாளுமன்ற தேர்தல் - 2ம் கட்டமாக இன்று 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு - ஸ்டார் வேட்பாளர்கள் யார்?
SRH vs RCB Match Innings: SRH-ஐ ஆல் அவுட் ஆக்கிய RCB;  35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி!
SRH vs RCB Match Innings: SRH-ஐ ஆல் அவுட் ஆக்கிய RCB; 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி!
Fahadh Faasil:
Fahadh Faasil: "மதத்தை மட்டும் தொடவே மாட்டேன்" பகத் ஃபாசிலின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
Today Rasipalan: கடகத்துக்கு சுபகாரியம் கைக்கூடும்; சிம்மத்துக்கு வரவு- உங்கள் ராசிக்கான இன்றைய  பலன்கள்!
கடகத்துக்கு சுபகாரியம் கைக்கூடும்; சிம்மத்துக்கு வரவு- உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Tamilisai vs Reporter : ”நீ மட்டுமே கேள்வி கேட்பியா?Manish Kashyap joins bjp : தமிழ்நாட்டுக்கு எதிராக அவதூறு பரப்பியவர்! பாஜகவில் ஐக்கியம்Mansoor Ali Khan Angry  : ”ஊரையே அலறவிடுறவன் நான்! என்னையவே சிதைச்சிட்டீங்களே” மன்சூர் பரிதாபம்Tamilisai Pressmeet : ”சாதியை வைத்து அரசியலா? இனி சும்மா இருக்க மாட்டோம்” ஆவேசமான தமிழிசை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election: நாடாளுமன்ற தேர்தல் - 2ம் கட்டமாக இன்று 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு - எந்த மாநிலங்களில் யார் போட்டி?
நாடாளுமன்ற தேர்தல் - 2ம் கட்டமாக இன்று 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு - ஸ்டார் வேட்பாளர்கள் யார்?
SRH vs RCB Match Innings: SRH-ஐ ஆல் அவுட் ஆக்கிய RCB;  35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி!
SRH vs RCB Match Innings: SRH-ஐ ஆல் அவுட் ஆக்கிய RCB; 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி!
Fahadh Faasil:
Fahadh Faasil: "மதத்தை மட்டும் தொடவே மாட்டேன்" பகத் ஃபாசிலின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
Today Rasipalan: கடகத்துக்கு சுபகாரியம் கைக்கூடும்; சிம்மத்துக்கு வரவு- உங்கள் ராசிக்கான இன்றைய  பலன்கள்!
கடகத்துக்கு சுபகாரியம் கைக்கூடும்; சிம்மத்துக்கு வரவு- உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
Liquid Nitrogen: ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்
TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்
CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
கேரளாவிலிருந்து மீன்கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வந்த லாரி; மடக்கி பிடித்த நாம் தமிழர் கட்சி
கேரளாவிலிருந்து மீன்கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வந்த லாரி; மடக்கி பிடித்த நாம் தமிழர் கட்சி
Embed widget