மேலும் அறிய

வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு - தஞ்சாவூர் மாவட்டத்தில் 20,64,820 வாக்காளர்கள்...!

’’சிறப்பு முகாம்கள் வரும் 13, 14, 27, 28 ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும்’’

இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதின் பேரில், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒருங்கினானந்த வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் அக்டோபர் 2021 வரை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டு உரிய திருத்தங்கள் மற்றும் நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியலை  அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்,  தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலீவர் வெளியிட்டார். தேர்தல் ஆணையத்தால், வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 10,04,103 பேர், பெண் வாக்காண்கள் எண்ணிக்கை 10,60,560 பேர், இதர பாலினத்தவர்கள் 157 பேர் உள்ளார்கள். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 20,64,820 ஆகும்.


வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு - தஞ்சாவூர் மாவட்டத்தில் 20,64,820 வாக்காளர்கள்...!

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,28,832 பேர்,. பெண் வாக்காளர்கள் 1,31,175 மூன்றாம் பாலினத்தவர் 14  என  மொத்த 2,60,021 வாக்காளர்கள் உள்ளனர்.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,33,491 பேர், பெண் வாக்காளர்கள் 1,40,238 பேர், மூன்றாம் பாலினத்தன் 15 பேர் என மொத்தம் 2,73,74 வாக்காளர்கள் உள்ளனர்.

 பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1.27,506 பேர் பெண் வாக்காளர்கள் 1,33,751 பேர், மூன்றாம் பாலினத்தவர் 16 பேர் என மொத்தம் 2,61,273 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவையாறு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,30,744 பேர், பெண் வாக்காளர்கள் 1,37,897 பேர், மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் என மொத்தம் 2,68,659 வாக்காளர்கள் உள்ளனர்

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,39,011 பேர், பெண் வாக்காளர்கள் 1,51,819 பேர். முன்றாம் பாலினத்தவர் 58 பேர் என மொத்தம் 2,90,868 வாக்காளர்கள் உள்ளனர். 

ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,18,407 பேர், பெண் வாக்காளர்கள் 1,25,282 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 243,691 வாக்காளர்கள் உள்ளனர்.

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,18,037 பேர், பெண் வாக்காளர்கள் 1,28,201 பேர், மூன்றாம் பாலிளத்தவர் 24 பேர் ஆக கூடுதல் 2,46,262 வாக்காளர்கள்.

பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,08,075 பேர், பெண் வாக்காளர்கள் 1,12,197 பேர், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் என மொத்தம் 2,20,282 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 19.03.2021 முதல் 28.10.2021 அரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களின் படிவங்கள் ஏற்கப்பட்டு 5030 நபர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இறந்த, இடம்பெயர்ந்த வாக்காளர்கள் 2077 நபர்களின் பெயர்கள் விசாரணை அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் 19.03.2021 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை விட தற்போது 2953 வாக்காளர்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் பொது மக்கனின் பார்வைக்காக வருகிற 30.11.2021 வரை வைக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலீவர்  கேட்டுக் கொண்டுள்ளார்.

1.1.2004 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்த தகுதியுடைய மற்றும் வாக்காளர் பட்டியிலில் இடம் பெறாமல் உள்ளார்கள்,  தங்கள் பெயரை வாக்காளர் பட்டிவயலில் சேர்த்திட படிவத்தை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் வலது மற்றும் இருப்பிடத்திற்கு ஆதார் எண் நகலை இணைந்து தங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தினை படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவரிடம் வழங்கலாம். வாக்காள பட்டியலின் தங்கள் பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் பிழைவிருப்பின் படிவம் எண் 8 பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். வாக்காளர் பட்டியிலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்கரளர்கள் படிவம்  எண் 7 அளிக்கலாம், ஒரே சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடிபெயர்ந்த வாக்காளர்கள் படிவம் பெற்று பூர்த்தி செய்து முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் இணையதளம் மூலம் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளலாம்.

மேலும்,  இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு. சிறப்பு முகாம்கள் 13.11.2021, 14.11.2021, 27.11.2021 மற்றும் 28.11.2021 ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தில் மேற்குறிப்பிட்ட நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் முகவரி மாற்றம் மற்றும் அனைத்து வகை திருத்தம் போன்றவற்றிற்கு விண்ணப்பம் செய்திடலாம்..

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2022 தொடர்பான பணிகள் 1.11.2021 முதல் 30.11.2021 வரை தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் பகுதிகளில் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும்  அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கி, இறுதி வாக்காளர் பட்டியல் 5.1.2022 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் வெளியிட உரிய ஒத்துழைப்பு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget