மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 640 பேர் கைது

144 ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 640 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 640 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி காணொளி மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடரின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி கொரோனா விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொதுமக்களுக்காக காவல்துறையினர் இரவு பகல் பாராமல் ஒருவரையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பணியாற்றி வரும் சூழலில், பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி ஊரடங்கு கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்து விடவும் முகக் கவசம் கிருமிநாசினிகள் போன்றவற்றை கட்டாயம் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் ஒத்துழைத்தால் திருவாரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக நிச்சயமாக மாறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 640 பேர் கைது

மேலும் 144 ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 640 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு 144-தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஊடங்கு உத்தரவானது திருவாரூர் மாவட்டம் முழுவதும் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 59-இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தொடர் வாகன தணிக்கைகள் நடைபெற்று வருகிறது. 40 -இருசக்கர வாகன ரோந்துகள், 04-நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் இரவு பகலாக இயக்கப்பட்டு வருகின்றன. 22-இடங்களில் பிக்கெட்டிங் எனப்படும் நிலையான ரோந்து அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு பணிகளில் காவல் அதிகாரிகள், காவலர்கள்மற்றும் ஊர்காவல்படை காவலர்கள் என 1000 பேர் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.  பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் பாதுகாப்பு பணிகள் அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழியின் நேரடிப்பார்வையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கவும், பொதுமக்களின் தேவையில்லாத நடமாட்டத்தை குறைக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் கடந்த மூன்று தினங்களாக வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 640 பேர் கைது

இதில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த 640 பேர் கைது செய்யப்பட்டு 640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது 8765-வழக்குகளும் சமூக  இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்கள் மீது 545 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு ரூ.20,25,500 அபராதம் வசூலிக்கப்பட்டு அரசுக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த  ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் -  கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் - கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு-  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் -  கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் - கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு-  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
WhatsApp Meta AI 3D: வாட்சப்பில் ஒரே டெக்ஸட்தான்! உடனே உருவாகும் 3D இமேஜ்! எப்படி தெரியுமா?
WhatsApp Meta AI 3D: வாட்சப்பில் ஒரே டெக்ஸட்தான்! உடனே உருவாகும் 3D இமேஜ்! எப்படி தெரியுமா?
கோவில்பட்டியில் ‌ஹாக்கி கோல் கீப்பர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் - பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
கோவில்பட்டியில் ‌ஹாக்கி கோல் கீப்பர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் - பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
Watch Video: சொந்த ஊருக்கு சென்ற பும் பும் பும்ரா! உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ
Watch Video: சொந்த ஊருக்கு சென்ற பும் பும் பும்ரா! உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ
சாலையில் கிடந்த ரூ.500 நோட்டுக்கட்டுகள்;  அள்ளிச் சென்ற பொதுமக்கள்! நடந்தது என்ன?
சாலையில் கிடந்த ரூ.500 நோட்டுக்கட்டுகள்; அள்ளிச் சென்ற பொதுமக்கள்! நடந்தது என்ன?
Embed widget