மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 640 பேர் கைது

144 ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 640 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 640 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி காணொளி மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடரின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி கொரோனா விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொதுமக்களுக்காக காவல்துறையினர் இரவு பகல் பாராமல் ஒருவரையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பணியாற்றி வரும் சூழலில், பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி ஊரடங்கு கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்து விடவும் முகக் கவசம் கிருமிநாசினிகள் போன்றவற்றை கட்டாயம் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் ஒத்துழைத்தால் திருவாரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக நிச்சயமாக மாறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 640 பேர் கைது

மேலும் 144 ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 640 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு 144-தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஊடங்கு உத்தரவானது திருவாரூர் மாவட்டம் முழுவதும் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 59-இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தொடர் வாகன தணிக்கைகள் நடைபெற்று வருகிறது. 40 -இருசக்கர வாகன ரோந்துகள், 04-நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் இரவு பகலாக இயக்கப்பட்டு வருகின்றன. 22-இடங்களில் பிக்கெட்டிங் எனப்படும் நிலையான ரோந்து அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு பணிகளில் காவல் அதிகாரிகள், காவலர்கள்மற்றும் ஊர்காவல்படை காவலர்கள் என 1000 பேர் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.  பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் பாதுகாப்பு பணிகள் அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழியின் நேரடிப்பார்வையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கவும், பொதுமக்களின் தேவையில்லாத நடமாட்டத்தை குறைக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் கடந்த மூன்று தினங்களாக வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 640 பேர் கைது

இதில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த 640 பேர் கைது செய்யப்பட்டு 640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது 8765-வழக்குகளும் சமூக  இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்கள் மீது 545 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு ரூ.20,25,500 அபராதம் வசூலிக்கப்பட்டு அரசுக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த  ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
TVK Vijay alliance: விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Embed widget