மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 640 பேர் கைது

144 ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 640 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 640 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி காணொளி மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடரின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி கொரோனா விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொதுமக்களுக்காக காவல்துறையினர் இரவு பகல் பாராமல் ஒருவரையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பணியாற்றி வரும் சூழலில், பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி ஊரடங்கு கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்து விடவும் முகக் கவசம் கிருமிநாசினிகள் போன்றவற்றை கட்டாயம் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் ஒத்துழைத்தால் திருவாரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக நிச்சயமாக மாறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 640 பேர் கைது

மேலும் 144 ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 640 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு 144-தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஊடங்கு உத்தரவானது திருவாரூர் மாவட்டம் முழுவதும் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 59-இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தொடர் வாகன தணிக்கைகள் நடைபெற்று வருகிறது. 40 -இருசக்கர வாகன ரோந்துகள், 04-நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் இரவு பகலாக இயக்கப்பட்டு வருகின்றன. 22-இடங்களில் பிக்கெட்டிங் எனப்படும் நிலையான ரோந்து அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு பணிகளில் காவல் அதிகாரிகள், காவலர்கள்மற்றும் ஊர்காவல்படை காவலர்கள் என 1000 பேர் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.  பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் பாதுகாப்பு பணிகள் அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழியின் நேரடிப்பார்வையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கவும், பொதுமக்களின் தேவையில்லாத நடமாட்டத்தை குறைக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் கடந்த மூன்று தினங்களாக வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 640 பேர் கைது

இதில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த 640 பேர் கைது செய்யப்பட்டு 640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது 8765-வழக்குகளும் சமூக  இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்கள் மீது 545 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு ரூ.20,25,500 அபராதம் வசூலிக்கப்பட்டு அரசுக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த  ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!
ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் கவனஈர்ப்பு போராட்டம்
ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் கவனஈர்ப்பு போராட்டம்
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
IND vs IRE: கெத்து காட்ட நினைத்த இந்தியா! வெத்தாக்கி வீசிய அயர்லாந்து! டி20யில் புதிய வரலாறு
IND vs IRE: கெத்து காட்ட நினைத்த இந்தியா! வெத்தாக்கி வீசிய அயர்லாந்து! டி20யில் புதிய வரலாறு
TVK Govt. Vs Nainar Nagendran: “காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
“காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
Annamalai: சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Minister Sarathkumar: ‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
EV Vs CNG Value: EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
Embed widget