மேலும் அறிய

TN Corona LIVE Updates: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேலும் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. டீ கடைகள் திறக்க அனுமதியில்லை. மளிகை, காய்கறி, பலசரக்கு, இறைச்சி, மீன் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதித்து தமிழக அரசு உத்தரவு

LIVE

Key Events
TN Corona LIVE Updates: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது

Background

கொரோனா பரவல் கட்டுப்பாடு தொடர்பான அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்றுமுன் தினம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிகழ்ந்தது. கூட்டத்தின் முடிவில் எட்டப்பட்ட தீர்மானங்களை அடுத்து ஊரடங்கை மிகக் கடுமையானதாக்க வேண்டும் என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. இதனடிப்படையில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 4 மணிமுதல் அமலுக்கு வந்தது.

1. புதிய கட்டுப்பாடுகள்

 

• தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கடைகள் அனைத்தும் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். Dunzo போன்ற மின் வணிக நிறுவனங்கள் (e-commerce) மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள். இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

 

• ATM, பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும்.

 

• ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.

 

• பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.

 

• காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

 

• தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை.

 

* மின் வணிக நிறுவனங்கள்(e-commerce) மதியம் 02.00 செயல்பட மணி முதல் மாலை 06.00 மணி முடிய
செயல்பட அனுமதிக்கப்படும். 

 

இ-பதிவு முறை (e-Registration)

 

• வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவுமுறை (e-Registration) கட்டாயமாக்கப்படும்.

 

• அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை (Elderly care) போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ பதிவுமுறை (e-Registration) (https://eregister, tnega. org). கட்டாயமாக்கப்படும்.

 

• இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்.

20:33 PM (IST)  •  15 May 2021

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 303 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று 31 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 658 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 65 ஆயிரத்து 35 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் மாநிலம் முழுவதும் 303 நபர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்து 17 ஆயிரத்து 359 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 905 ஆகும். இதனால், மொத்தம் குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 39 ஆயிரத்து 887 ஆக உயர்ந்துள்ளது.

18:36 PM (IST)  •  15 May 2021

கொரோனா நிவாரணத் தொகையை நாளையும் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணமாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்க அரசு சார்பில் டோக்கன் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முழு ஊரடங்கு நாளானா நாளையும் நியாய விலைக்கடைகளில் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

16:46 PM (IST)  •  15 May 2021

தமிழகத்தில் 3 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

விருதுநகர் மாவட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும். ஸ்டெர்லைட் ஆலையில் 40 டன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அவை 3 நாட்களில் சரி செய்யப்பட்டு தொடங்கப்படும். தமிழகத்தில் சுகாதாரத்துறையுடன் தொழில்துறையும் இணைந்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நெதர்லாந்து நாட்டில் இருந்து 4 டன் வெப்பநிலை கொதிகலன்கள், சீனாவில் இருந்து 12 கண்டெய்னர் மூலமாக ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

16:04 PM (IST)  •  15 May 2021

ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டத்தில் கைது - தமிழக முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 30 ஆயிரத்திற்கும் அதிகம் என்றளவில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் சில பகுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து மற்றும் படுக்கைகள் வசதி தட்டுப்பாடு என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

16:03 PM (IST)  •  15 May 2021

பெருநகரங்களிலும் வார் ரூம் அமைக்க தமிழக அரசு முடிவு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா வார் ரூம்கள் அமைக்கப்படும் - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். கோவையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்த தகவலை தெரிவித்தார். 

15:29 PM (IST)  •  15 May 2021

கொரோனா தடுப்பூசி ஒப்பந்த புள்ளி கோரியது தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களுக்கு செலுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி கொள்முதலில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை போக்குவதற்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளி கோரப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன்படி, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் இன்று கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. இந்த ஒப்பந்த விதிப்படி, 90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் மட்டும் ஜூன் 5-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

14:25 PM (IST)  •  15 May 2021

ரெம்டெசிவருக்காக கூடும் ஏராளமான மக்கள்

நேரு ஸ்டேடியத்திற்கு வெளியே ரெம்டெசிவர் மருந்தை வாங்க  ஏராளமான மக்கள் கூடுகிறார்கள்.

“எனது குடும்பமும் மருத்துவமனையில் உள்ளது. நான் கடந்த 10 நாட்களாக முயற்சி செய்கிறேன். ஆனால் இன்னும் மருந்து கிடைக்கவில்லை. அரசாங்கம் படுக்கைகளை ஒழுங்கமைக்க முயற்சிக்கிறது, ஆனால் ரெம்டெசிவிர் மருந்து தொடர்பாக எந்த முன்னேற்றமும் செய்யவில்லை” என்று மருந்து வாங்க வந்த பெண் ஒருவர் கூறினார்.

 

14:08 PM (IST)  •  15 May 2021

மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் சகோதரர் கொரோனாவுக்கு பலி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

14:00 PM (IST)  •  15 May 2021

மேலும் 6 லட்சம் கோவிஷீல்டு தமிழகத்திற்கு வந்தன

புனேவில் இருந்து மேலும் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அந்த மருந்துகள், தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்து கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட உள்ளது. 

13:57 PM (IST)  •  15 May 2021

தமிழ்நாட்டில் 2 நாள்களில் ஆக்சிஜன் விநியோகம் சீரடையும்

தமிழ்நாட்டில் 2 நாள்களில் ஆக்சிஜன் விநியோகம் சீரடையும். ஆக்சிஜனை எடுத்துச் செல்ல சீனாவில் இருந்து 12 கன்டெய்னர்கள் கொண்ட வரப்பட உள்ளன - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanimozhi MP:
Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை
PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
Gouri Kishan : என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
Lok Sabha Elections 2024: பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்  -  மதுரையில் எடப்பாடி பழனிசாமி
பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Nomination Issue : வேட்புமனு சர்ச்சை” இது ஒரு விஷயமே இல்ல” அ.மலையின் புது TWIST | BJPSingai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi MP:
Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை
PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
Gouri Kishan : என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
Lok Sabha Elections 2024: பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்  -  மதுரையில் எடப்பாடி பழனிசாமி
பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி
Prithviraj Sukumaran : 98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
ICC Elite Panel: ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!
ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!
Class 10th Exam: 10-ஆம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வு: 16,550 மாணவர்கள் ஆப்சென்ட்; 4 பேர் முறைகேடு- விவரம்
Class 10th Exam: 10-ஆம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வு: 16,550 மாணவர்கள் ஆப்சென்ட்; 4 பேர் முறைகேடு- விவரம்
Mumbai Indians: பாண்ட்யாவால் இரண்டாக உடைந்த மும்பை அணி? ரோகித் பக்கம் யார்? உடைக்கும் வீடியோ ஆதாரங்கள்..!
Mumbai Indians: பாண்ட்யாவால் இரண்டாக உடைந்த மும்பை அணி? ரோகித் பக்கம் யார்? உடைக்கும் வீடியோ ஆதாரங்கள்..!
Embed widget