TN Corona LIVE Updates: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேலும் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. டீ கடைகள் திறக்க அனுமதியில்லை. மளிகை, காய்கறி, பலசரக்கு, இறைச்சி, மீன் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதித்து தமிழக அரசு உத்தரவு

Background
கொரோனா பரவல் கட்டுப்பாடு தொடர்பான அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்றுமுன் தினம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிகழ்ந்தது. கூட்டத்தின் முடிவில் எட்டப்பட்ட தீர்மானங்களை அடுத்து ஊரடங்கை மிகக் கடுமையானதாக்க வேண்டும் என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. இதனடிப்படையில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 4 மணிமுதல் அமலுக்கு வந்தது.
1. புதிய கட்டுப்பாடுகள்
• தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கடைகள் அனைத்தும் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். Dunzo போன்ற மின் வணிக நிறுவனங்கள் (e-commerce) மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள். இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.
• ATM, பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும்.
• ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.
• பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.
• காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.
• தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை.
* மின் வணிக நிறுவனங்கள்(e-commerce) மதியம் 02.00 செயல்பட மணி முதல் மாலை 06.00 மணி முடிய
செயல்பட அனுமதிக்கப்படும்.
இ-பதிவு முறை (e-Registration)
• வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவுமுறை (e-Registration) கட்டாயமாக்கப்படும்.
• அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை (Elderly care) போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ பதிவுமுறை (e-Registration) (https://eregister, tnega. org). கட்டாயமாக்கப்படும்.
• இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்.
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 303 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் நேற்று 31 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 658 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 65 ஆயிரத்து 35 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் மாநிலம் முழுவதும் 303 நபர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்து 17 ஆயிரத்து 359 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 905 ஆகும். இதனால், மொத்தம் குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 39 ஆயிரத்து 887 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா நிவாரணத் தொகையை நாளையும் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணமாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்க அரசு சார்பில் டோக்கன் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முழு ஊரடங்கு நாளானா நாளையும் நியாய விலைக்கடைகளில் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.





















