மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Tamil news | இரட்டை தலையுடன் பிறந்த அதிசய கன்று...! போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள்...! மதுரைக்கு வரும் கிசான் ரயில் - தென்மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
இரட்டை தலையுடன் பிறந்த அதிசய கன்று...! போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள்...! மதுரைக்கு வரும் கிசான் ரயில் - தென்மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ
![Tamil news | இரட்டை தலையுடன் பிறந்த அதிசய கன்று...! போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள்...! மதுரைக்கு வரும் கிசான் ரயில் - தென்மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் Tamil news | Amazing calf born with a double head Fishermen withdraw their protest Kisan Train to Madurai - Major Events in the Southern District Tamil news | இரட்டை தலையுடன் பிறந்த அதிசய கன்று...! போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள்...! மதுரைக்கு வரும் கிசான் ரயில் - தென்மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/31/22947db9349685e2de0d501d7a0905a0_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இரண்டு தலையுடன் பிறந்துள்ள கன்று
1. நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் வீட்டில் பசு மாடு ஈன்றுள்ள கன்று இரண்டு தலை ஒட்டி காணப்படுகிறது. நான்கு கண்கள் இரண்டு மூக்குகள் இரண்டு நாக்குகளை கொண்ட இந்த கன்று பிறந்துள்ளது, ஆரோக்கியமாக உள்ள கன்றை அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
2. திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரத்தை சேர்ந்த ஆதிலெட்சுமி, என்பவருக்கு 6 லட்சம் மதிப்புள்ள 3.75 சென்ட் இடம் உள்ளது. இவரது குடும்ப சூழ்நிலை காரணமாக இவரது கணவர் இடத்தின் பத்திரத்தை அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரிடம் அடமானம் வைத்துள்ளார். இதனை பயன்படுத்தி சந்திரசேகர் அந்த இடத்தை வேறொரு நபருக்கு கிரையம் செய்து உள்ளார். இந்த நிலம் காவல்துறையினர் மூலம் மீட்கப்பட்டது.
![Tamil news | இரட்டை தலையுடன் பிறந்த அதிசய கன்று...! போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள்...! மதுரைக்கு வரும் கிசான் ரயில் - தென்மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/31/5a9713e082097fedd9582cd5002ca223_original.jpg)
3. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை குண்டு வீசி தகர்த்து விடுவதாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
4. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி அறிவித்த ரயில் மறியல் போராட்டத்தையும் நடந்து கொண்டிருக்கும் வேலை நிறுத்த போராட்டத்தையும் கைவிடுவதாக ராமநாதபுரம் ஆட்சியர் தலைமையில் நடந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு மீனவர்கள் கூறியுள்ளனர்.
![Tamil news | இரட்டை தலையுடன் பிறந்த அதிசய கன்று...! போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள்...! மதுரைக்கு வரும் கிசான் ரயில் - தென்மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/30/1e93cdac238a079e1a2ef62dbe313e08_original.jpg)
5. விவசாயிகளின் விளை பொருட்களை 50% கட்டணத்துடன் ரயிலில் ஏற்றுமதி செய்யும் கிசான் ரயில் திட்டம் குறித்த பரப்புரை மதுரையில் தொடக்கம் - தென்மாவட்ட விவசாயிகள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்
6. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த 40 வயது பெண் சமீபத்தில் கோவா சென்று வந்த நிலையில் ஒமிக்ரான் அறிகுறிகளுடன் தற்போது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
7. சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் குப்பை அள்ளும்பேட்டரி வாகனங்களை வாங்கியதில் நடந்துள்ள முறைகேடு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் அதற்கான கோப்புகளையும் எடுத்து சென்றுள்ளனர்.
8. கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மகனுக்கு துணையாக இருந்த அம்மாவை எலி கடித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு தமிழக சுகாதாரத் துறை 25 ஆயிரம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
![Tamil news | இரட்டை தலையுடன் பிறந்த அதிசய கன்று...! போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள்...! மதுரைக்கு வரும் கிசான் ரயில் - தென்மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/13/1c99ce6cd9500c81461ab014df245d60_original.jpg)
9. இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 2.60 லட்சம் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம்
10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 6 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75687-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 5 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion