மேலும் அறிய

சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் - உயர்நீதிமன்றம் உத்தரவு 

சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஸ்போர்ட் ஒப்படைக்கவும் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் நிபந்தனை வழங்கி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழகத்தை விட்டு வெளியேறக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

சென்னை கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அடுத்தடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சிவசங்கர் பாபா மீது இதுவரை 6 போக்சோ வழக்குகள், 2 பெண் வன்கொடுமை வழக்குகள் என மொத்தமாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் மீது  ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை செங்கல்பட்டு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை ஆரம்பத்தில் தள்ளுபடி செய்தன. இந்த வழக்குகளில் 4 போக்சோ வழக்குகளுக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றமும், 2 வழக்குகளுக்கு கூடுதல் மகிளா அமர்வு நீதிமன்றமும் ஜாமீன் வழங்கி இருந்தது. முதல் போக்சோ வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் அந்த வழக்கில் அவருக்கு செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஜாமீன் மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. இதனையடுத்து தனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஜாமீன் வழங்க வேண்டுமென சிவசங்கர் பாபா தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் அரசு சார்பில் மனு

ஜாமீன் மனு மீது நடைபெற்ற விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டால், சாட்சிகளை அச்சுறுத்தி ஆதாரங்களை கலைத்துவிடுவார். வழக்கு விசாரணையில் இருந்து தப்பித்துக்கொள்ள அவர் வெளிநாடு செல்ல அனைத்து வாய்ப்புகளும் உள்ளன எனவும், எனவே சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் கடுமையாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிபந்தனை ஜாமீன்

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில் தமிழக அரசின் வாதங்களையும் கவனத்தில் கொண்ட நீதிபதிகள், சாட்சியங்களை கலைக்க முற்படக்கூடாது, கேளம்பாக்கம் பள்ளி மற்றும், மடத்திற்கு செல்லக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்குவதாகவும், நிபந்தனைகள் மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்திருந்தது. இதனால், சிவசங்கர் பாபா தன் மீதுள்ள 8 வழக்குகளில் 7 வழக்குகளுக்கு ஜாமீன் வாங்கியிருந்தார். கடைசி வழக்கிலும் இன்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.

என்னென்ன நிபந்தனைகள் 

அதன்படி, பாஸ்போர்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், விசாரணை அதிகாரிக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு எங்கும் செல்லக்கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு 8 வழக்குகளிலும் ஜாமீன் பெற்று வெளியே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மம்தாவே மன்னிப்பு கேள்.. திரௌபதி முர்மு விவகாரத்தில் கொந்தளிக்கும் தே.ஜ.கூ. தலைவர்கள்!
மம்தாவே மன்னிப்பு கேள்.. திரௌபதி முர்மு விவகாரத்தில் கொந்தளிக்கும் தே.ஜ.கூ. தலைவர்கள்!
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
" வழக்கு குறித்து பேசனும் " தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! காவலருக்கு அதிரடி உத்தரவு
மானை வேட்டையாட சென்றவர் மரணம்: உடலை ரகசியமாக எரித்த சம்பவம்! போலீஸ் விசாரணை
மானை வேட்டையாட சென்றவர் மரணம்: உடலை ரகசியமாக எரித்த சம்பவம்! போலீஸ் விசாரணை
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
Embed widget