மேலும் அறிய

புதுச்சேரி மின்சாரப் பேருந்துகள் திடீர் நிறுத்தம்: ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பயணிகள் அவதி!

புதுச்சேரி: பி.எப், இ.எஸ்.ஐ மற்றும் பணி பாதுகாப்பு கோரி மின்சார பேருந்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம் செய்துள்ளனர்

புதுச்சேரி: பி.எப், இ.எஸ்.ஐ மற்றும் பணி பாதுகாப்பு கோரி மின்சார பேருந்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம் செய்துள்ளனர், இதனால் நகரின் முக்கியப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

மின்சார பேருந்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

புதுச்சேரியில் அரசு மின்சாரப் பேருந்து ஊழியர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகரின் முக்கியப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நவீன மின்சாரப் பேருந்துகள்

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் (PRTC) சார்பில், மத்திய அரசின் நிதி உதவியுடன் தனியார் பங்களிப்புடன் சுமார் ரூ.23 கோடி மதிப்பீட்டில் 25 மின்சாரப் பேருந்துகள் கடந்த நவம்பர் மாதம் முதல் இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த குளிரூட்டப்பட்ட பேருந்துகள், குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

போராட்டத்திற்கான முக்கிய காரணங்கள்

இந்த மின்சாரப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து புகார்களை முன்வைத்து வந்தனர். இன்றைய போராட்டத்திற்கான முக்கியக் கோரிக்கைகள் பின்வருமாறு:

பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ பிடித்தம்: ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் மருத்துவக் காப்பீடு (ESI) ஆகியவற்றை நிர்வாகம் முறையாகப் பிடித்தம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

நிர்வாகத்தின் தாமதம்:

இது குறித்து கேட்டபோது, "ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் இந்த நடைமுறைகள் அமல்படுத்தப்படும்" என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்ட பதில் ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணி பாதுகாப்பு: தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையான பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊதியப் பிரச்சினை: ஏற்கனவே ஊதிய வழங்கலில் நிலவும் குளறுபடிகளைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தப் போராட்டம் வெடித்துள்ளது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இன்று அதிகாலை முதல் ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்க மறுத்து பணிமனையிலேயே நிறுத்தி வைத்தனர். இதனால் காலை நேரத்தில் அலுவலகம் செல்வோரும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களும் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. மின்சாரப் பேருந்துகளை மட்டுமே நம்பியிருந்த பயணிகள், மாற்றுப் போக்குவரத்து வசதியின்றி கடும் அவதிக்குள்ளாகினர்.

நிர்வாகத்தின் நிலைப்பாடு

ஏற்கனவே ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தீர்வு எட்டப்படாத நிலையில், இன்றைய போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget