மேலும் அறிய

Request to remove Biometric in Ration system | ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை நீக்க பொதுமக்கள் கோரிக்கை..

ரேஷன் கடைகளில் நிவாரண நிதி வழங்கும்போது பயோமெட்ரிக் முறையால் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதால், அபாயம் கருதி பயோமெட்ரிக் முறையை நீக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பொது விநியோக முறை மூலமாக வழங்கப்படவுள்ள கொரோனா நிவாரண நிதியை பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தாமல் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் பல இடங்களில் இருந்தும் இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதலாவது அலையின்போது, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாழ்வாதாராம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கடை மூலம் அரிசி வாங்கும் கார்டுதார்களுக்கு ரூ.1000 நிவாரண நிதியை வழங்கினார். தொடர்ந்து இந்த நிதியை குறிப்பிட்ட சில மாதங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், முதல்வர் அந்த நிதியை வழங்கவில்லை. 

அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஊரடங்கு காலத்துக்கான உணவுப் பொருட்களை இலவசமாக சில மாதங்களுக்கு வழங்கினர். இந்த நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றபோது, தற்போதைய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொரோனா நேரத்தில் எங்களுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கினார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதிமுக அரசு வழங்காமல் விட்ட 4 ஆயிரம் ரூபாயை வழங்குவோம், அதுவும் கருணாநிதி பிறந்த ஜூன் 3-ஆம் தேதி அந்த தொகை வழங்கப்படும் என பிரச்சாரத்தில் எடுத்துரைத்தார் ஸ்டாலின். மேலும் இதுகுறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் பிரதானமாக இடம் பெற்றிருந்தது.

                                                                       Request to remove Biometric in Ration system | ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை நீக்க பொதுமக்கள் கோரிக்கை..                                                                        

இந்நிலையில் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆட்சி பொறுப்பேற்றுள்ளனர். ஆட்சி பொறுப்பேற்ற 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வரும் 10-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உத்தரவிட்டு கையெழுத்திட்டார். இந்நிலையில் உணவு பொருள் வழங்கல் துறை மூலமாக கொரோனா நிவாரண நிதி வழங்குவது குறித்து நடைமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்பட்டு, காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே நிவாரண நிதி 500 ரூபாயாக நான்கு தாள்களும் அல்லது இராண்டாயிரம் ரூபாயாக ஒரு தாளும் வழங்க வேண்டும். குடும்பத் தலைவர் மட்டுமே வந்து ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை வைத்துவிட்டு பணத்தை பெற்றுச் செல்லவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழகம் முழுவதும் பயோமெட்ரிக் முறையில் சர்வர் இணைப்பு கிடைக்காமல் காலதாமதம் ஆவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் ரேஷன் கடைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஒவ்வொருவரும் கைரேகையை பதிவு செய்யும் போது அதன் மூலம் கொரோனா தொற்று பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ரேஷன் பொருட்களும், நிவாரண நிதியும் ஒரே நேரத்தில் வழங்கப்படுவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் கடைகளில் வெயில் காலத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக பயோமெட்ரிக் முறை இல்லாமல், ரேஷன் கார்டு வைத்திருக்கும் கார்டுதார்களுக்கு நிவாரண நிதியை வழங்கும்போது காலதாமதம் தவிர்க்கப்படும். நிவாரண நிதிக்கான டோக்கன் வீடுகளுக்கு சென்று வழங்கும்போதே, அந்த தொகையையும் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget