மேலும் அறிய

Request to remove Biometric in Ration system | ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை நீக்க பொதுமக்கள் கோரிக்கை..

ரேஷன் கடைகளில் நிவாரண நிதி வழங்கும்போது பயோமெட்ரிக் முறையால் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதால், அபாயம் கருதி பயோமெட்ரிக் முறையை நீக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பொது விநியோக முறை மூலமாக வழங்கப்படவுள்ள கொரோனா நிவாரண நிதியை பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தாமல் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் பல இடங்களில் இருந்தும் இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதலாவது அலையின்போது, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாழ்வாதாராம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கடை மூலம் அரிசி வாங்கும் கார்டுதார்களுக்கு ரூ.1000 நிவாரண நிதியை வழங்கினார். தொடர்ந்து இந்த நிதியை குறிப்பிட்ட சில மாதங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், முதல்வர் அந்த நிதியை வழங்கவில்லை. 

அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஊரடங்கு காலத்துக்கான உணவுப் பொருட்களை இலவசமாக சில மாதங்களுக்கு வழங்கினர். இந்த நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றபோது, தற்போதைய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொரோனா நேரத்தில் எங்களுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கினார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதிமுக அரசு வழங்காமல் விட்ட 4 ஆயிரம் ரூபாயை வழங்குவோம், அதுவும் கருணாநிதி பிறந்த ஜூன் 3-ஆம் தேதி அந்த தொகை வழங்கப்படும் என பிரச்சாரத்தில் எடுத்துரைத்தார் ஸ்டாலின். மேலும் இதுகுறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் பிரதானமாக இடம் பெற்றிருந்தது.

                                                                       Request to remove Biometric in Ration system | ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை நீக்க பொதுமக்கள் கோரிக்கை..                                                                        

இந்நிலையில் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆட்சி பொறுப்பேற்றுள்ளனர். ஆட்சி பொறுப்பேற்ற 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வரும் 10-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உத்தரவிட்டு கையெழுத்திட்டார். இந்நிலையில் உணவு பொருள் வழங்கல் துறை மூலமாக கொரோனா நிவாரண நிதி வழங்குவது குறித்து நடைமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்பட்டு, காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே நிவாரண நிதி 500 ரூபாயாக நான்கு தாள்களும் அல்லது இராண்டாயிரம் ரூபாயாக ஒரு தாளும் வழங்க வேண்டும். குடும்பத் தலைவர் மட்டுமே வந்து ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை வைத்துவிட்டு பணத்தை பெற்றுச் செல்லவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழகம் முழுவதும் பயோமெட்ரிக் முறையில் சர்வர் இணைப்பு கிடைக்காமல் காலதாமதம் ஆவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் ரேஷன் கடைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஒவ்வொருவரும் கைரேகையை பதிவு செய்யும் போது அதன் மூலம் கொரோனா தொற்று பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ரேஷன் பொருட்களும், நிவாரண நிதியும் ஒரே நேரத்தில் வழங்கப்படுவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் கடைகளில் வெயில் காலத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக பயோமெட்ரிக் முறை இல்லாமல், ரேஷன் கார்டு வைத்திருக்கும் கார்டுதார்களுக்கு நிவாரண நிதியை வழங்கும்போது காலதாமதம் தவிர்க்கப்படும். நிவாரண நிதிக்கான டோக்கன் வீடுகளுக்கு சென்று வழங்கும்போதே, அந்த தொகையையும் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget