மேலும் அறிய

Nirmala Devi Case: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு; ஆஜராகாத நிர்மலா தேவி - தீர்ப்பு என்னாச்சு?

மொத்தம் 1,360 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அனைத்துச் சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று  தீர்ப்பு அளிக்கப்பட இருந்தது.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் முதல் குற்றவாளியாக கருதப்படும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி உடல் நலக்குறைவு காரணமாக ஆஜர் ஆகாததால் வரும் 29ஆம் தேதி திங்கட்கிழமைக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் செல்வாக்குடன் இருந்தவர். இவர், தேவாங்கர் கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி உயர்கல்வித்துறைப் புள்ளிகளுக்குப் பாலியல்ரீதியாக அவர்களைப் பயன்படுத்த முயன்றிருக்கிறார். இவரால் குறிவைக்கப்பட்ட மாணவிகள், நிர்மலாதேவி பேசியதை பதிவு செய்து பெற்றோர்கள் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் புகார்செய்ய, அதை அலட்சியம் செய்தது நிர்வாகம். அந்த நேரம், அவர் மாணவிகளிடம் பேசிய போன் உரையாடல், சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடக்கத்தில்  மறைக்கப்படவிருந்த இந்தச் சம்பவம், அருப்புக்கோட்டை தன்னார்வ அமைப்பு, எஸ்.எஃப்.ஐ., ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் போராட்டம், நீதிமன்ற வழக்குக்குப் பிறகு போலீஸ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளிக் கிளம்பி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே ஆளுநர் மாளிகையும் இந்த வழக்கில் இணைத்துப் பேசப்பட்டதால், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் தனியாக ஒரு விசாரணைக்குழுவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்.


Nirmala Devi Case: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு; ஆஜராகாத நிர்மலா தேவி - தீர்ப்பு  என்னாச்சு?

2018 ஏப்ரலில் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டார்கள்.

இந்த வழக்கில் இன்னும் பலர்மீது குற்றச்சாட்டுகளும், பல்வேறு சந்தேகங்களும் எழுந்த நிலையில், கடைசியில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும்தான் குற்றவாளிகள் என இறுதிசெய்து குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

நீண்ட நாள்கள் சிறையில் இருந்த நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தாங்கள் அப்பாவிகள், பலிகடாவாக்கப்பட்டிருக்கிறோம்’ என்று முருகனும் கருப்பசாமியும் ஊடகங்களில் தெரிவித்துவந்தார்கள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் விசாரணை தாமாதமானது.

இவர்களுக்கு எதிராக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபசார தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்திய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.


Nirmala Devi Case: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு; ஆஜராகாத நிர்மலா தேவி - தீர்ப்பு  என்னாச்சு?

மொத்தம் 1,360 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அனைத்துச் சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று  தீர்ப்பு அளிக்கப்பட இருந்தது.

இந்த நிலையில் முருகன் மற்றும் கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த நிலையில் முதல் குற்றவாளி என கருதப்படும் நிர்மலா தேவி உடல் நலக்குறைவு காரணமாக இன்று ஆஜர் ஆகாததால் வரும் 29ஆம் தேதி திங்கட்கிழமைக்கு தீர்ப்பை ஒத்திவைத்து மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Elections 2024: தைரியம் இருந்தா காங்கிரஸிடம் இதை செய்யுங்கள்..! ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால்
Lok Sabha Elections 2024: தைரியம் இருந்தா காங்கிரஸிடம் இதை செய்யுங்கள்..! ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால்
Sai Pallavi Birthday: மலர் மீது பிரேமம்: பேரிளம் பெண் சாய் பல்லவிக்கு பிறந்தநாள்!
Sai Pallavi Birthday: மலர் மீது பிரேமம்: பேரிளம் பெண் சாய் பல்லவிக்கு பிறந்தநாள்!
Rasipalan: கன்னிக்கு உடன்பிறப்புகள் ஆதரவு கிடைக்கும்; சிம்மத்துக்கு போட்டி: இன்றைய ராசிபலன்கள் இதோ..!
Rasipalan: கன்னிக்கு உடன்பிறப்புகள் ஆதரவு கிடைக்கும்; சிம்மத்துக்கு போட்டி: இன்றைய ராசிபலன்கள் இதோ..!
Today Movies in TV, May 09: உங்களை மகிழ்விக்கும் சூப்பர்ஹிட் படங்கள்.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் என்ன?
உங்களை மகிழ்விக்கும் சூப்பர்ஹிட் படங்கள்.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar at court  : கையில் கட்டுடன் சவுக்கு! சுத்துப் போட்ட திமுகவினர்! கோர்ட்டில் பரபரப்புPriyanka Gandhi slams Modi | ”முடிஞ்சா சொல்லுங்க பார்ப்போம்” மோடிக்கு பிரியங்கா சவால்Sam Pitroda | Pa Ranjith wish Nanguneri Chinnadurai | சின்னதுரைக்கு பரிசு வழங்கிய பா.ரஞ்சித்!நேரில் அழைத்து பாராட்டு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Elections 2024: தைரியம் இருந்தா காங்கிரஸிடம் இதை செய்யுங்கள்..! ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால்
Lok Sabha Elections 2024: தைரியம் இருந்தா காங்கிரஸிடம் இதை செய்யுங்கள்..! ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால்
Sai Pallavi Birthday: மலர் மீது பிரேமம்: பேரிளம் பெண் சாய் பல்லவிக்கு பிறந்தநாள்!
Sai Pallavi Birthday: மலர் மீது பிரேமம்: பேரிளம் பெண் சாய் பல்லவிக்கு பிறந்தநாள்!
Rasipalan: கன்னிக்கு உடன்பிறப்புகள் ஆதரவு கிடைக்கும்; சிம்மத்துக்கு போட்டி: இன்றைய ராசிபலன்கள் இதோ..!
Rasipalan: கன்னிக்கு உடன்பிறப்புகள் ஆதரவு கிடைக்கும்; சிம்மத்துக்கு போட்டி: இன்றைய ராசிபலன்கள் இதோ..!
Today Movies in TV, May 09: உங்களை மகிழ்விக்கும் சூப்பர்ஹிட் படங்கள்.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் என்ன?
உங்களை மகிழ்விக்கும் சூப்பர்ஹிட் படங்கள்.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் என்ன?
SRH vs LSG Match Highlights: ”காட்டுப்பயலுங்க சார்” லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய SRH!
SRH vs LSG Match Highlights: ”காட்டுப்பயலுங்க சார்” லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய SRH!
Thug Life: தக் லைஃப் ரிலீஸ் அப்டேட்.. இந்த வருஷம் மட்டும் 3 படங்கள்.. கமல் ரசிகர்ளுக்கு காத்திருக்கும் ட்ரீட்!
Thug Life: தக் லைஃப் ரிலீஸ் அப்டேட்.. இந்த வருஷம் மட்டும் 3 படங்கள்.. கமல் ரசிகர்ளுக்கு காத்திருக்கும் ட்ரீட்!
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் காவல் - நீதிமன்றம் உத்தரவு
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் காவல் - நீதிமன்றம் உத்தரவு
Google Wallet: இந்தியாவில் அறிமுகமானது ‘கூகுள் வாலட்’! பயன்படுத்துவது எப்படி? முழு விவரம்
Google Wallet: இந்தியாவில் அறிமுகமானது ‘கூகுள் வாலட்’! பயன்படுத்துவது எப்படி? முழு விவரம்
Embed widget