மேலும் அறிய

18 - 45 வயதினருக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி மாநிலத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் திட்டத்தை தொடங்கிவைத்தார் ஆளுநர்.

புதுச்சேரி மாநிலத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் திட்டத்தை தொடங்கி வைத்தார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். நடிகர் விவேக் மரம் நடுவதை மட்டும் பிரபலப்படுத்தவில்லை, தடுப்பூசி போட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் என்று அவர் கூறினார்

18 - 45 வயதினருக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், 45வயதுக்கு மேற்பட்டோர் என படிப்படியாக தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. இந்நிலையில் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் புதுவையில் தடுப்பூசி செலுத்த இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

18 - 45 வயதினருக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்வோர் தடுப்பூசி போட எங்குவர வேண்டும் எப்போது வரவேண்டும் என தகவல் அனுப்பப்படும். அதே நேரத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதனையும் பயன்படுத்தி பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் வந்து தடுப்பூசி போட தயக்கம் இருந்தால் வீட்டுக்கு அருகில் பள்ளிகளில் நடக்கும் தடுப்பூசி முகாமுக்கு சென்று தடுப்பூசி போடலாம்.

தடுப்பூசிபோடுவதுதான் கொரோனா வராமல் தடுப்பதற்கான நிரந்தர தீர்வாக இருக்கும். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்திராகாந்தி மருத்துவமனை, மகாத்மா காந்தி பல்மருத்துவமனை, இ.எஸ்.ஐ.மருத்துவனை, மாகே, ஏனாம் அரசு மருத்துவமனை, காரைக்கால் காமராஜர் மருத்துவனை ஆகிய 6 மையங்களில் தடுப்பூசி போடப்படும். முன்பதிவு செய்யாதவர்கள் ஆதார் கார்டுடன் முகாம் நடைபெறும் இடங்களுக்கு நேரில் வந்து அங்கு பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 6 லட்சம் ஊசி கேட்டுள்ளோம்.

18 - 45 வயதினருக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

முதல் கட்டமாக 30 ஆயிரம் தடுப்பூசி வந்துள்ளது. பயன்பாட்டுக்கு ஏற்ப தடுப்பூசிகள் தரப்படுகிறது. இல்லாவிட்டால் தடுப்பூசி வீணாகிவிடும். அரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் தங்கள் பகுதியில் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டும், பிரபலப்படுத்த வேண்டும். நடிகர் விவேக் இறந்த நாளில் 18 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டனர். ஆனால்அவர் இறந்த பின்பு இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. நடிகர் விவேக் மரம் நடுவதை மட்டும் பிரபலப்படுத்தவில்லை. தடுப்பூசிபோட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சுகாதாரத்துறையினர் அதிகளவில் பரிசோதனை நடத்துகின்றனர். இதனால் கொரோனா தொற்று உள்ளவர்களை கூடுதலாக கண்டறிகின்றனர். வீட்டு தனிமையில் 15 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களையும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்கின்றனர். உலகளவில் 94 சதவீத ஆக்சிஜன் அளவு உள்ளவர்கள் வீடுகளில் சிகிச்சை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய், குழந்தைகளை கொரோனா நோய் தாக்குவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என கூறினார்.

18 - 45 வயதினருக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி மாநிலத்தில் இளைஞர்கள் தைரியமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வது புதுச்சேரியை வலுப்படுத்தும் எனவும். மேலும் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரோஜாப்பூ வழங்கி ஊக்கப்படுத்தினார் தமிழிசை சவுந்தரராஜன், இன்று ஒரே நாளில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாகவும் அவர்களுக்கு அவர்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது

18 - 45 வயதினருக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6133
Active
6237
Recovered
65
Deaths
Last Updated: Sun 8 June, 2025 at 03:09 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Embed widget