மேலும் அறிய

குழந்தைகள் சபை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு - குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் வீ.ராமராஜ் பேட்டி

’’தமிழகத்தில் பள்ளி இடைநிற்றலை தடுக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கணக்கெடுப்படுகிறது’’

தருமபுரி மாவட்டம் வத்தல்மலை பெரியூர் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வடி, சத்துணவு மையங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் வீ.ராமராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் தடுப்பு முறைக்கான விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடத்தி, கலந்துரையாடல் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து வத்தல்மலை அரசு தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளியில் படிக்கு மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்கினர்.  இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ச.திவ்யதர்சினி தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 

குழந்தைகள் சபை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு - குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் வீ.ராமராஜ் பேட்டி
 
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆணைய உறுப்பினர் ராமராஜ், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களுக்கு விரைவில் உரிய பயிற்சி வழங்கப்படும். அதே போல் கிராம, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களும் நகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மாநகர மண்டல அளவிலான, நகர மற்றும் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களும் உரிய பயிற்சி அளித்து அவை வலுப்படுத்தப்பட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம குழந்தைகள் பாதுகாப்பு குழு செயலாளர்களுக்கு விரைவில்  பயிற்சி வழங்கப்படும். தமிழக அரசு கடந்த மாதம்  பிரகடனம் செய்துள்ள அரசின் குழந்தை பாதுகாப்பு கொள்கை, குழந்தைகள் உரிமைகளின் சரித்திரத்தில் முக்கிய மைல்கல் ஆகும். இக்கொள்கையின்படி கிராம குழந்தைகள் சபை கூட்டங்கள் நடத்தப்படும். இதைப் போலவே நகர குழந்தைகள் சபை, மாநகர குழந்தைகள் சபை போன்றவற்றையும் நடத்தலாம்.
 

குழந்தைகள் சபை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு - குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் வீ.ராமராஜ் பேட்டி
 
இத்தகைய குழந்தைகள் சபைகள் குழந்தைகளின் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் தளமாக அமைவதோடும், பிரச்சனைகளுக்கான தீர்வையும் தரும் மன்றமாக விளங்கும். கொரோனா காலத்தை தொடர்ந்து  தமிழகத்தில் பள்ளி இடைநிற்றலை தடுக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கணக்கெடுப்படுகிறது. இதனை தொடர்ந்து பள்ளி இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தருமபுரி மாவட்டம் வத்தல்மலை அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 10  மாணவர்கள் பள்ளிக்கு வராமல் நின்றுள்ளனர். இந்த மாணவர்களை சந்தித்து பள்ளிக்கு வர அறிவுறுத்தியுள்ளனர். இந்த 10 மாணவர்களைப் அடுத்த வாரம் பள்ளியில் சேர்க்கப்படவுள்ளனர் என  தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணைய உறுபினர் வீ.ராமராஜ் தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
Salem power cut: சேலத்தில் மின்தடை அறிவிப்பு - நாளை எந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? - லிஸ்ட் இதோ
சேலத்தில் மின்தடை அறிவிப்பு - நாளை எந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? - லிஸ்ட் இதோ
"வீக் எண்ட் பிளான் ரெடியா? - ஏற்காட்டில் இன்று முதல் மலர் கண்காட்சி; அரிய வகை மலர்கள் இதோ
Karur power cut: கரூரில் நாளை (22-05-2026) முக்கிய இடங்களில் பவர் கட்! உங்கள் ஏரியா இருக்கா? உடனே செக் பண்ணுங்க!
Karur power cut: கரூரில் நாளை (22-05-2026) முக்கிய இடங்களில் பவர் கட்! உங்கள் ஏரியா இருக்கா? உடனே செக் பண்ணுங்க!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Diesel Price: 2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
TN Weather Update: வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Embed widget