மேலும் அறிய

கோயில்களை தனியாரிடம் தூக்கிக் கொடுக்க முடியாது; திமுக ஆட்சியிலும் அதுவே தொடரும்- திமுக எம்.பி., செந்தில்குமார் சிறப்பு பேட்டி

கோயில்களை இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து விடுவித்து தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஜக்கி வாசுதேவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், திமுக ஆட்சி அமைந்ததும் ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன் எனவும் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி அமைந்தபிறகும் கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையிடமே இருக்கும் என்றும், ஜக்கி வாசுதேவ் கேட்பதுபோல தனியார் வசம் ஒப்படைக்க முடியாது எனவும் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோயில்களை தனியாரிடம் தூக்கிக் கொடுக்க முடியாது; திமுக ஆட்சியிலும் அதுவே தொடரும்- திமுக எம்.பி., செந்தில்குமார் சிறப்பு பேட்டி

இது தொடர்பாக ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு செந்தில்குமார் அளித்துள்ள சிறப்பு பேட்டி

  1. கேள்வி : கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை வசமிருந்து மீட்டு இந்துக்களிடமே கொடுக்க வேண்டும் என சத்குரு ஜக்கி வாசுதேவ் பரப்புரை மேற்கொண்டு வருகிறாரே ?

பதில் : கோயில்கள் அரசிடமிருந்து மீட்கப்படவேண்டுமென்றால், மீட்டு அவரிடம் தர வேண்டும் என்கிறாரா  ?, ஈஷா என்ற ஒரு இடத்திலேயே பிரபலங்கள், அரசியல்வாதிகள், ஆளுநர் என அழைத்து கோடி கணக்கில் பணம் பார்த்து ருசி கண்டுவிட்டார். ஒரு இடத்தில் செய்வதை தமிழகம் முழுவதும் செய்தால் எவ்வளவு பணம் பார்க்கலாம் என்ற ஆசையில் ஜக்கி வாசுதேவ் இந்து கோயில்களை மீட்க வேண்டும் என்று குரல் எழுப்புகிறார் அவ்வளவுதான்.இப்போது இந்து சமய அறநிலையத்துறை வசமுள்ள கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு கட்டணமாக மிக குறைந்த தொகையே வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், இது ஜக்கி வாசுதேவ் போன்றோர்கள் வசம் சென்றால் லட்சக்கணக்கான ரூபாய்களை கட்டணமாக நிர்ணயித்து, கோயில்களை பணக்காரர்களுக்கானதாக மட்டுமே மாற்றிவிடுவார்கள். இவ்வளவு நாள் தமிழ்நாட்டில் இருந்த ஜக்கி வாசுதேவ், இப்போது திடீரென கோயில்கள் மீது கரிசனம் கொள்வது ஏன் ? மகா சிவராத்திரி, காவிரி Calling போன்று இவர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் வந்த கோடிக்கணக்கான பணத்தில் சிதலமைடந்து போயிருக்கிற அல்லது பழமையான கோயில்களை சீரமைக்க எவ்வளவு ரூபாய் இதுவரை செலவழித்திருக்கிறார்  ?தமிழ்நாட்டில் உள்ள கோயில்களையெல்லாம் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்து கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றும் வாசுதேவின் முயற்சிதான் இது.

மற்றவர்களை காட்டிலும் கடவுளின் பெயரை சொல்லி மக்களிடம் ஏமாற்றி பணத்தை வசூலித்துக்கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான் பெரிய கடவுள் மறுப்பாளர்கள். கடவுள், சமூக சேவை, நதிகள் இணைப்பு என்ற பெயரில் மக்களின் பாக்கெட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை நூதனமாக திருடும் வேலையைதான் இவர் செய்கிறார். சிவராத்திரி கொண்டாட்டம் என்று சொல்லிவிட்டு கிளப் மாதிரி இரவு 10 மணிக்குமேல் காடு சூழந்த அந்த இடத்தில் ஹை டேசிபல் ஸ்கீப்பர்கள் வைத்து ஆட்டம் போடுகிறார்கள். இதை அரசும் வனத்துறையும் எப்படி அனுமதிக்கிறது என தெரியவில்லை.

கோயில்களை தனியாரிடம் தூக்கிக் கொடுக்க முடியாது; திமுக ஆட்சியிலும் அதுவே தொடரும்- திமுக எம்.பி., செந்தில்குமார் சிறப்பு பேட்டி

  1. கேள்வி : இந்து கோயில்களை மட்டும் அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றீர்களே இதுபோன்று பிற மதத்தினர் கோயில்களை உங்களால் அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியுமா ?

பதில் : இந்து சமயத்தினருக்கு பல்வேறு பெயர்களில், பல்வேறு தெய்வங்கள் இருக்கின்றன. ஒரு தெருவில் கூட நான்கைந்து கோயில்கள் இருக்கும். ஆனால், பிற சமயத்தினர் ஆலயங்கள் தமிழ்நாட்டில் மிகவும் குறைவு. அதனை நிர்வகிக்க அவர்களுக்குள் ஓர் அமைப்பு இருக்கிறது. அங்கு தவறு நடக்கும் பட்சத்தில் அதனையும் அரசு கவனத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கும் ; ஏற்கனவே பல பிரச்னைகளில் எடுத்தும் இருக்கிறார்கள்.  ஆனால் வாசுதேவ் போன்றவர்கள் பல அமைப்புகளாக செயல்படுகிறார்கள். இவர்களில் யாரிடம் இந்து கோயில்களை ஒப்படைக்க முடியும் என நீங்களே சொல்லுங்கள்.

கோயில்களை தனியாரிடம் தூக்கிக் கொடுக்க முடியாது; திமுக ஆட்சியிலும் அதுவே தொடரும்- திமுக எம்.பி., செந்தில்குமார் சிறப்பு பேட்டி

  1. கேள்வி : ஆன்மிகம் இல்லாமல் திராவிட கலாச்சாரமே கிடையாது. தஞ்சை பெரியகோயில் கட்டிய இராஜராஜசோழனைவிடவும் நீங்கள் பெரிய திராவிடர்களா என ஜக்கி வாசுதேவ் உங்களை பார்த்து கேட்கிறாரே ?

பதில் : இங்கு தன்னை திராவிடர்கள் என அடையாளப்படுத்திக்கொள்ளும் 99 சதவீதத்தினர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான்.  இந்த மாதிரி அவர் விமர்சிக்கிறதெல்லாம் கோயில் சொத்துக்களை அபகரிக்கவும், கூடுதலாக சொத்துக்களை சேர்த்துக்கொள்வதற்கும்தான். ஒன்னுமே இல்லாம இருந்த இவருக்கு இவ்வளவு சொத்து எப்படி சேர்ந்தது ? ஈஷா கட்டியுள்ள இடத்திற்கு அனுமதி இருக்கிறதா ? 

கோயில்களை தனியாரிடம் தூக்கிக் கொடுக்க முடியாது; திமுக ஆட்சியிலும் அதுவே தொடரும்- திமுக எம்.பி., செந்தில்குமார் சிறப்பு பேட்டி

  1. கேள்வி : இப்படி அடுக்கடுக்கான புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் ஜக்கி வாசுதேவ் மீது வைக்கும் நீங்கள், திமுக ஆட்சி அமைந்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா ?

 பதில் : சிரிக்கிறார்… நான் தனிப்பட்ட முறையில் ஜக்கி மீது நடவடிக்கை எடுக்க சொல்லி வலியுறுத்துவேன். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

கோயில்களை தனியாரிடம் தூக்கிக் கொடுக்க முடியாது; திமுக ஆட்சியிலும் அதுவே தொடரும்- திமுக எம்.பி., செந்தில்குமார் சிறப்பு பேட்டி

  1. கேள்வி : சரி, புதிதாக ஆட்சி அமைக்கபோகும் அரசு இந்து கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்கவேண்டும் என்று சொல்கிறாரே ? திமுக ஆட்சி அமைந்தால் இந்து சமய அறநிலையத்துறை வசமிருக்கும் கோயில்களை அவர்களிடமே ஒப்படைப்பீர்களா ?

பதில் : அதற்கு வாய்ப்பே இல்லை. ஏன் என்றால் இந்து கோயில்களை பாதுகாத்ததே திராவிட இயக்கங்கள்தான். இவ்வளவு நாள் பாதுகாத்துவிட்டு இவர்கள் கேட்பதனாலேயே தூக்கி கொடுத்துவிட மாட்டார்கள். அப்படி கொடுத்தால் சாமி என்பதே சாமனியனுக்கு எட்டாத கனிபோன்று ஆகிவிடும், அதேபோல், அது தவறான முன்னுதாரணமாகவும் போய்விடும். இவர் கேட்பதெல்லாம் காப்பரேட் சாமியார்கள் வளர்வதற்குதான்.

 

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் மே 7 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்: தவறான தகவல் அளித்தால் அபராதம் - ஆட்சியர் எச்சரிக்கை!
புதுச்சேரியில் மே 7 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்: தவறான தகவல் அளித்தால் அபராதம் - ஆட்சியர் எச்சரிக்கை!
"வெயில் தாங்கல... வாழைப்பழம் வேண்டாம்... நுங்கு தான் வேணும்!" - வியாபாரியிடம் அடம் பிடித்த குரங்கு...நெகிழ வைத்த காட்சி...
தாலி, விதவைக் கோலம்: கூவாகத்தில் திருநங்கைகளின் உணர்ச்சிப்பூர்வமான கூத்தாண்டவர் சித்திரை பெருவிழா!
தாலி, விதவைக் கோலம்: கூவாகத்தில் திருநங்கைகளின் உணர்ச்சிப்பூர்வமான கூத்தாண்டவர் சித்திரை பெருவிழா!
ரூ.397 கோடி மின்மாற்றி ஊழல் ! மின்வாரிய முறைகேட்டில் சிக்கிய முக்கிய புள்ளிகள்; அன்புமணி ராமதாஸ் விளாசல்
ரூ.397 கோடி மின்மாற்றி ஊழல் ! மின்வாரிய முறைகேட்டில் சிக்கிய முக்கிய புள்ளிகள்; அன்புமணி ராமதாஸ் விளாசல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNEB: டிரான்ஸ்பார்மர் கொள்முதல் சர்ச்சை... சிபிஐ-க்கு மாற்றப்பட்ட விசாரணை! தமிழக அரசுக்கு சிக்கலா?
TNEB: டிரான்ஸ்பார்மர் கொள்முதல் சர்ச்சை... சிபிஐ-க்கு மாற்றப்பட்ட விசாரணை! தமிழக அரசுக்கு சிக்கலா?
ரூ.397 கோடி ட்ரான்ஸ்ஃபார்மர் ஊழலில் சிபிஐ விசாரணை: திமுக ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி- அன்புமணி
ரூ.397 கோடி ட்ரான்ஸ்ஃபார்மர் ஊழலில் சிபிஐ விசாரணை: திமுக ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி- அன்புமணி
சுட்டெரிக்கும் சூரியன்; தற்காத்துக்கொள்வது எப்படி? மாணவர்களுக்கு கல்வித்துறை டிப்ஸ்!
சுட்டெரிக்கும் சூரியன்; தற்காத்துக்கொள்வது எப்படி? மாணவர்களுக்கு கல்வித்துறை டிப்ஸ்!
TN Election 2026: எல்லாம் சரி..! ரஜினி, அஜித் ரசிகர்களின் ஓட்டு யாருக்கு போச்சு? ஊரை சுற்றி வம்பிழுத்த TVK பாய்ஸ்
TN Election 2026: எல்லாம் சரி..! ரஜினி, அஜித் ரசிகர்களின் ஓட்டு யாருக்கு போச்சு? ஊரை சுற்றி வம்பிழுத்த TVK பாய்ஸ்
கேன்சர் ஆபத்து..!
கேன்சர் ஆபத்து..! "கெமிக்கல், கல்லு வெச்சா.. " மாம்பழ வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை வார்னிங்
ஒரு பள்ளிக்கு 3.11 மாணவர்களை சேர்ப்பதா சாதனை? கொண்டாட எதுவும்  இல்லை- அன்புமணி வேதனை
ஒரு பள்ளிக்கு 3.11 மாணவர்களை சேர்ப்பதா சாதனை? கொண்டாட எதுவும்  இல்லை- அன்புமணி வேதனை
Bajaj Chetak EV: கூகுள் மேப்ஸ், ரைட் மோட்கள், 80KM ஸ்பீட் - பஜாஜ் சேடக்கில் டக்கரான அப்டேட்கள், விலையில் சர்ப்ரைஸ்
Bajaj Chetak EV: கூகுள் மேப்ஸ், ரைட் மோட்கள், 80KM ஸ்பீட் - பஜாஜ் சேடக்கில் டக்கரான அப்டேட்கள், விலையில் சர்ப்ரைஸ்
TN Election 2026 Exit Poll: தமிழகம் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு - எங்கு? எப்போது? வரும், எப்படி பார்க்கலாம்?
TN Election 2026 Exit Poll: தமிழகம் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு - எங்கு? எப்போது? வரும், எப்படி பார்க்கலாம்?
Embed widget