மேலும் அறிய

தமிழக அரசை விமர்சிப்பதற்கு பதில் அவர்கள் தலைவர்களை பாஜகவினர் விமர்சித்திருக்கலாம்; கனிமொழி எம்.பி.,

தமிழக அரசை விமர்சனம் செய்யும் பாஜகவினர் அவர்கள் தலைவர்களை நோக்கி விமர்சனங்கள் செய்திருந்தால் நாடு காப்பாற்றப்பட்டிருக்கும் என கனிமொழி எம்.பி., குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகசிகாமணி நகர் மற்றும் இனாம்மணியாச்சி பகுதியில் உள்ள நியாயவிலைக்கடைகளில் தமிழக அரசின் கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணையாக ரூ 2000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியின் போது கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த சிறுமி ரிதானா தன் தந்தையின் மருத்துவ செலவிற்காக தான் சேமித்து வைத்திருந்த ரூ1970ஐ முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக கனிமொழி எம்பியிடம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு இன்னும் கவனத்தோடு அக்கறையோடு செயல்பட்டு, இப்பிரச்சனையை கையாண்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து. இந்த அளவுக்கு இழப்புகளை சந்தித்திருக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டை தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம் . தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் எல்லாத் துறைகளையும் முடுக்கிவிட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் அளவிற்கு, பாதிப்புக்களை எந்த அளவிற்கு குறைக்க முடியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகையில் உதவிகள் செய்ய முடியும் என்பதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.


தமிழக அரசை விமர்சிப்பதற்கு பதில் அவர்கள் தலைவர்களை பாஜகவினர் விமர்சித்திருக்கலாம்; கனிமொழி எம்.பி.,

தொடர்ந்து அரசு முழு மூச்சாக கொரோனா பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உழைத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று ஒருநாளில் பரவுவதில்லை. இதுவரை மாதக்கணக்கில் கொரோனா பரவலை தடுக்க எந்த நடவடிக்கை சரியாக எடுக்கப்படாமல், முன்னெச்சரிக்கையாக தொற்று பரவல் சூழ்நிலை வந்துவிட்டால் மருத்துவமனைகளை தயாராக வைக்காத சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே கொரோனா தொற்று பிரச்சினையை எப்படி கையாளுவது என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி இன்றைக்கு அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து செய்து கொண்டிருக்கிறார்.

ஒரே நாளில் நோய்த்தொற்று பரவலை நிறுத்திவிட முடியாது. ஆகையால் தான் தற்போது ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இத்தனை நாள் இலகுவாக இருந்த விதிமுறைகள் எல்லாம் தற்போது இன்னும் அதிகமாக கடுமையாக்கி உள்ளனர். மக்கள் வெளியே சென்றால் முக கவசம் அணிய வேண்டும், முடிந்தவரை வெளியே செல்லாமல் இருப்பது  நம்முடைய பாதுகாப்புக்கு நல்லது. அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட வேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறது. முதல்வர் உள்பட முக்கியமானவர்கள் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

40 வயதுக்கு மேற்பட்ட நிச்சியமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு மக்களுக்கு ஒரு தயக்கம் இருக்கிறது.  தடுப்பூசி போடுவதற்கு மக்கள் பயப்பட வேண்டியது இல்லை. நமக்கு பாதுகாப்பு என்பது தடுப்பூசி போட்டுக்கொள்வது, அதை செய்ய மக்கள் முன்வர வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் செல்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் 1745 கிராமங்களுக்கு நேரடியாக குழுக்கள் சென்று முகாமிட்டு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 36 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி போட வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 400 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் ஆக்சிசன் இணைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது விமர்சனங்களுக்கு பதில் சொல்லக்கூடிய நேரம் இது கிடையாது. மக்களை காப்பாற்ற வேண்டிய நேரமிது. தமிழக அரசை விமர்சனம் செய்யும் பாஜகவினர் அவர்கள் தலைவர்களை நோக்கி விமர்சனங்கள் செய்திருந்தால் நாடு காப்பாற்றப்பட்டிருக்கும்,’’ என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
Embed widget