மேலும் அறிய

‛தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவியுங்க’ முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

முதல் அலையின் போது தளர்வுகள் இல்லாத ஊரடங்கு  அறிவித்து, அதற்கு மக்கள் ஒத்துழைப்பை பெற்று முந்தைய அரசு வென்று காட்டியதாகவும், வருகின்ற மே 24 ஆம் தேதி தற்போதைய ஊரடங்கு முடிகிறது. தளர்வு இல்லாத ஊரடங்கை முதல்வர் செயல்படுத்தினால் தான் சங்கிலித் தொடர் போல்  வரும் இந்த பாதிப்பை தடுக்கலாம் என உதயக்குமார் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 6வது நாளாக கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது... 


‛‛தமிழகத்தின் முதல் அலை வீசிய போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி  நோய் பரவலைத் தடுக்க முழு  ஊரங்கை  கடைபிடித்து அதனை மக்களையும் கடைபிடிக்க செய்தார் முதல் அலை ஊரடங்கின் போது அனைத்து தொழிலாளர்களுக்கும் விலையில்லா உணவுப் பொருள்கள் மற்றும் நிவாரண உதவிகளை  அதிமுக அரசு வழங்கியது. தற்போது பதிவு செய்த மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் 2000 ரூபாய் நிவாரண நிதி வழங்கிட வேண்டும். மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளது. மதுரையில் மார்ச் மாதம் இறுதியில் 30 பேர்தான் சிகிச்சை பெற்றனர். தற்போது மதுரையில் 11 ஆயிரத்து 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் 153 பேர் பலியானார்கள் என்று அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இடுகாட்டில் எண்ணிக்கை அதிகமாக இருப்பது வேதனையாக உள்ளது.


‛தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவியுங்க’ முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

குறிப்பாக ஆக்சிஜன் இல்லாமல் தென் மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் பேர் பலியாகி உள்ளனர். ஆகவே அரசு ஆக்சிஜன் தேவை அறிந்து மக்களின் உயிரைக் காக்க வேண்டும். மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். ஆய்வுக்கூட்டம் சம்பிரதாயமான ஆய்வுக் கூட்டமாக இல்லாமல், மதுரை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மக்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்கும் வகையில் இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மதுரையில் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி வெளிப்படைத்தன்மையாக அறிவிக்க வேண்டும். சோர்வடைந்துள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கிட வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா  பாதிப்பு அதிகம் உள்ளது. 


‛தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவியுங்க’ முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

முதல் அலையில் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு 6,996 ஆக இருந்தது. தற்போது ஒருநாள் பாதிப்பு 34,875 ஆக உள்ளது தற்போது சில  தளர்வுடன்  கூடிய ஊரடங்கு இருந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முதல் அலையின் போது தளர்வு இல்லாத ஊரடங்கு  அறிவித்து, அதற்கு மக்கள் ஒத்துழைப்பை பெற்று  வென்று காட்டினோம். வருகின்ற மே 24 ஆம் தேதி ஊரடங்கு முடிகிறது. தளர்வு இல்லாத ஊரடங்கை முதல்வர் செயல்படுத்தினால் தான் சங்கிலித் தொடர் போல்  வரும் இந்த பாதிப்பை தடுக்கலாம். வாழ்வாதாரத்தை  இழந்து வரும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதை கூறுகிறேன். அரசியல் உள் நோக்கம் கிடையாது, என்று கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

TN Police vs TNSTC : காவல்துறை vs போக்குவரத்து துறைவலுக்கும் மோதல்? ’’பழிக்குப்பழியா?’’Prashant Kishor Angry : ’’வீடியோ ஆதாரம் இருக்கா?’’பிரசாந்த் கிஷோர் ஆவேசம்!வாக்குவாதமான நேர்காணல்Arvind Kejriwal : ’’முதல்வர் பதவி ராஜினாமா?’’கெஜ்ரிவால் சொன்ன SECRET!பாஜகவுக்கு செக்!TN Cabinet Shuffle :முதல்வரின் மேஜையில் ரிப்போர்ட்..கலக்கத்தில் 3 அமைச்சர்கள்! பரபரக்கும் அறிவாலயம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
TN CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
Thiruvalluvar: காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
Embed widget