மேலும் அறிய

தர்மயுத்தம் செய்தவர், சதி வலையில் மீண்டும் விழமாட்டார்: ஆதிராஜாராமின் பரபரப்பு பேட்டி

அதிமுக தொண்டர்களின் இயக்கம். இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

"அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு. அதிமுக தொண்டர்களின் இயக்கம். இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்" 

இது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி. இந்தப் பேட்டிதான் இப்போது தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக். அதிமுகவுக்கு சசிகலா மீண்டும் திரும்ப வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி ஆகியோர் திட்டவட்டமாகக் கூறிவர, ஓபிஎஸ்ஸுக்கு மட்டும் ஏதோ சாஃப்ட் கார்னர் இருக்கிறதோ என்ற சலசலப்புகள் எழுந்துள்ளன. இதனால், அதிமுகவின் சசிகலா மீதான நிலைப்பாடு தனி விவாதப் பொருளாகவே மாறியுள்ளது.

இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதி வேட்பாளராக அதிமுக அமைப்புச் செயலாளரும் அதிமுக தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளருமான ஆதிராஜாராம் பேட்டியளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஓபிஎஸ் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் தலைமைக் கழகம் சொல்லும் என்பதையே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். அதிமுகவில் மீண்டும் இணைந்த பின்னர் ஓபிஎஸ் டிடிவியை சந்தித்தார். அதனைக் கூட அரசியல் நாகரிகம் இல்லாமல் வெளியே சொன்னவர் டிடிவி. அது ஓபிஎஸ் அண்ணனுக்கும் தெரியும். அவரே தான் தர்மயுத்தம் நடத்தினார். சசிகலா மற்றும் கூட்டாளிகளால் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டேன் என்பதையும் சொன்னார். சசிகலா, டிடிவியை ஆதரித்துச் சென்ற 18 எம்எல்ஏக்கள் நிலை இன்று என்னவானது. அவர்களை நம்பிச் சென்றவர்களுக்கே அந்த கதி என்றால். அவர்களை விமர்சித்துக் கொண்டிருக்கும் நமக்கு என்ன நேரும் என்பது ஓபிஎஸ் அண்ணனுக்கு தெரியாமல் இருக்காது.

சசிகலா தன்னைத் தானே பொதுச்செயலாளர் என்று அறிவித்துக் கொண்டதற்கு கட்சியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்தை நம்பி மீண்டும் ஓபிஎஸ் அவரை அதிமுகவுக்குள் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறது. இந்த இயக்கம் தொண்டர்களால் நடத்தப்படும் இயக்கம். சென்னை மட்டுமல்ல எல்லா மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு எதிராகத் தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள்.


தர்மயுத்தம் செய்தவர், சதி வலையில் மீண்டும் விழமாட்டார்: ஆதிராஜாராமின் பரபரப்பு பேட்டி


ஓபிஎஸ் கருத்து போகிற போக்கில் சொல்லப்பட்ட கருத்து. அதிமுகவின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை சசிகலாவை எதிர்ப்பார்கள். ஓபிஎஸ், எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்கவில்லை. அவர் தலைமைக் கழகம் முடிவெடுக்கும் என்றுதான் சொல்லியுள்ளார். சசிகலாவிடம் மீண்டும் சென்றால் அவர்கள் யாராக இருந்தால் ஏமாந்து போவார்கள், பொது வெளியில் அசிங்கப்பட்டுப் போவார்கள்.

ஓபிஎஸ் அன்பானவர், பாசமானவர் என்பதால் அவர் கடுமையான வார்த்தைகளால் சசிகலாவை நிராகரிக்கவில்லை. தர்மயுத்தம் செய்தவர் சதி வலையில் மீண்டும் விழமாட்டார்.

இவ்வாறு, ஆதிராஜாராம் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
"வாடி வாடி கைப்படாத சிடி..." ஆபாசப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட அமைச்சர்..!
TN By-Election: விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget