மேலும் அறிய

Vijaykanth: தனது ரத்தத்தால் விஜயகாந்த் படத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய ரசிகர்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு தனது ரத்ததை கொண்டு படம் வரைந்து அஞ்சலி இளைஞர் ஒருவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மறைந்த நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த்க்கு தனது ரத்ததை கொண்டு படம் வரைந்து இளைஞர் ஒருவர் அஞ்சலி செலுத்தியுள்ள சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் (டிசம்பர் 28) காலை 6.10 மணியளவில் காலமானார். அவரது மறைவு மொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எவராலும் வெறுக்க முடியாத நபராக அனைவராலும் அன்போடு ’கேப்டன்’ என அழைக்கப்பட்ட விஜயகாந்த் மறைவுக்கு கட்சி, சினிமாவில் விருப்பு, வெறுப்பின்றி அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அவரின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

RIP Vijayakanth: மீளா துயிலில் கலந்தார் விஜயகாந்த் : சந்தனப் பேழைக்குள் அடங்கியது கருப்பு வைரம்


Vijaykanth: தனது ரத்தத்தால் விஜயகாந்த் படத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய ரசிகர்!

அதேபோன்று தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி வரை விஜயகாந்த் மறைவிற்கு அவரின் புகைப்படங்களை வைத்து பலராலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வணிகர்கள் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 12 மணி வரை கடையடைப்பு செய்வதாக அறிவித்தனர். அதனை அடுத்து இன்று அவர்கள் கடைகளை அடைத்து இரங்கலை வெளிப்படுத்தினர். மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு பகுதியில் காலை 12 மணிவரை இரண்டு மணிநேரம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். சீர்காழியில் இரண்டு மணி நேரம் என அறிவித்து காலை 11 மணி வரை கடையப்பு செய்தனர்.

RIP Vijayakanth : "எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே" கேப்டன் விஜயகாந்திற்கு முதலமைச்சர் புகழஞ்சலி!


Vijaykanth: தனது ரத்தத்தால் விஜயகாந்த் படத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய ரசிகர்!

இதேபோல் மாவட்டத்தில் செம்பனார்கோவில் ஆக்கூர், திருக்கடையூர், தரங்கம்பாடி, பொறையார் பகுதிகளில் மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை கடையடைப்பு செய்யது அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று விஜய்காந்த் மீது உள்ள பற்றால் சீர்காழியில் ஒரு இளைஞர் தனது ரத்தத்தால் விஜயகாந்த் உருவத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டைநாதபுரத்தை சேர்ந்தவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். இவர் சிறு வயது முதலே ஓவியத்தின் மீது அதிக பற்று கொண்டவர். அதன் காரணமாக ஏராளமான ஓவியங்களை வரைந்து உள்ளார். மேலும் சாக்பீஸில் நுண்சிற்பங்களே வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்.

Amul Cartoon Vijayakanth : "குட்பை கேப்டன்" : காற்றில் கலந்த விஜயகாந்துக்கு உருக்கமான கார்ட்டூன் வெளியிட்ட அமுல்


Vijaykanth: தனது ரத்தத்தால் விஜயகாந்த் படத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய ரசிகர்!

மேலும் மறைந்த நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்தின் மீது தீவிர பற்று கொண்டவர் ஆவார். இந்நிலையில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்ததை அடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தனது ரத்தத்தினை சிறிய பாட்டிலில் எடுத்து, அதன் மூலம் விஜயகாந்தின் உருவத்தை மூன்று மணிநேரம் வரைந்து, மறைந்த விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் அவரது நண்பர்களும் கலந்து கொண்டு விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தினர். தனது ரத்தத்தால் விஜயகாந்த் உருவத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய சம்பவம் கேட்பவர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Thalapathy 68: விஜயகாந்த் மறைவால் தள்ளிப்போகும் ‘தளபதி 68’ அப்டேட்... நடிகர் விஜய் எடுத்த முடிவு!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget