மேலும் அறிய

இந்த அளக்குடி பகுதிக்கு இதுவரை எந்த அரசியல்வாதியும் வந்தது கிடையாது - அன்புமணி ராமதாஸ்

மீண்டும் திமுக வெற்றி பெற்றால் மக்கள் வாழ முடியாது மக்கள் அகதிகளாக வேறு இடங்களுக்கு தான் குடிபெயர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் தடுப்பணையை பார்வையிட்டு அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அதனை தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ் கூறுகையில்;

கடலில் கலக்கும் 50 டிஎஸ்பி தண்ணீர் 

ஒரு ஆண்டுக்கு குறைந்தது 50 டிஎம்சி நீர் கொள்ளிடம் ஆறு வழியாக சென்று கடலில் கலக்கிறது. ஆனால், இந்த பகுதியில் உள்ள விவசாயிகளும் மக்களும் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் பல இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், தமிழக அரசு செவி சாய்க்க மறுக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இதுகுறித்து நான் தலைமைச் செயலகம் சென்று நேரில் வலியுறுத்தினேன். உடனே அதிகாரிகளை அழைத்து அன்புமணியின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என உத்தரவிட்டார். ஐஐடி அதிகாரிகளும் வந்தார்கள், அளவெடுத்தார்கள், ரூ.750 கோடி ஆகும் என்று சொன்னார்கள். ஆனால், தற்போது வரை அந்த தடுப்பணை திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் அப்படியே உள்ளது.


இந்த அளக்குடி பகுதிக்கு இதுவரை எந்த அரசியல்வாதியும் வந்தது கிடையாது - அன்புமணி ராமதாஸ்

அணைக்கட்டினால் இவ்வளவு நன்மைகள் நடக்கும் 

நான் கோரிக்கை வைத்தது போல இந்த பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டால் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் பகுதியில் உள்ள கிராம விவசாயிகள் அதிக அளவில் விவசாயம் செய்யலாம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயிகள் பயன்பெறுவார்கள். கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையும் இருக்காது. கொள்ளிடம் ஆற்றின் கறைகள் பலவீனம் ஆகியுள்ளன அவற்றை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. ஆனால், இது குறித்து எல்லாம் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை. ஆற்றின் கறைகள் வெள்ளப்பெருக்கு காலத்தில் உடைந்தால் பல கிராமங்கள் அழிந்து போகும் நிலை ஏற்படும். அது குறித்து எல்லாம் தமிழக அரசு கவலைப்படாமல் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் வாக்குகள் மட்டும் வேண்டும் ஆனால் பொதுமக்கள் என் பாதுகாப்பிற்காக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 


இந்த அளக்குடி பகுதிக்கு இதுவரை எந்த அரசியல்வாதியும் வந்தது கிடையாது - அன்புமணி ராமதாஸ்

போராட்ட எச்சரிக்கை 

இதற்கு மேலும் அந்த கறைகளை பலப்படுத்த, பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை அடிக்க முடியாது என்பதனால் தான் அங்கு தடுப்பணைகளை கட்ட தமிழக அரசு தயங்குகிறது. திமுக ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் இதுவரை 26 மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் தான் அதிகமான மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். கொள்ளிடம் ஆற்றில் ஒவ்வொரு நான்கு கிலோமீட்டர் ஒரு மணல் குவாரி உள்ளது. மணல் குவாரிகளை கட்டி தண்ணீர் தேங்கி நின்றால் அதன் பிறகு மணலை கொள்ளை அடிக்க முடியாது என்பதனால் திமுக அரசு செய்ய மறுக்கிறது. மக்களைப் பற்றியோ விவசாயம் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ திமுக அரசுக்கு எந்த கவலையும் இல்லை மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். 


இந்த அளக்குடி பகுதிக்கு இதுவரை எந்த அரசியல்வாதியும் வந்தது கிடையாது - அன்புமணி ராமதாஸ்

மக்கள் வாழ முடியாது

மீண்டும் திமுக வெற்றி பெற்றால் மக்கள் வாழ முடியாது மக்கள் அகதிகளாக வேறு இடங்களுக்கு தான் குடிபெயர வேண்டும். தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்கு பணம் கொடுத்து உங்களின் வாக்குகளை பெறுவதற்காக திமுகவினர் பணமூட்டைகளோடு வருவார்கள், வாக்குக்கு ஆயிரம் இரண்டாயிரம் என அள்ளிக் கொடுப்பார்கள் ஏமார்ந்து விடாதீர்கள். இந்த அளக்குடி பகுதிக்கு இதுவரை எந்த அரசியல்வாதியும் வந்தது கிடையாது, நான் மூன்றாவது முறையாக வந்திருக்கிறேன். முதலமைச்சரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்து இருக்கிறேன், முதலமைச்சர் கடிதம் எல்லாம் எழுதி இருக்கிறேன், இந்த பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பிரம்மா பூஜித்த பழமை வாய்ந்த ஆலயம்.. சீர்காழி அருகே கோலாகலமாக நடந்த பிர்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
பிரம்மா பூஜித்த பழமை வாய்ந்த ஆலயம்.. சீர்காழி அருகே கோலாகலமாக நடந்த பிர்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
5 நிமிட வீடியோவை இந்த மெயிலுக்கு அனுப்புங்க.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
5 நிமிட வீடியோவை இந்த மெயிலுக்கு அனுப்புங்க.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
தாத்தா வயதில் இப்படியொரு கொடூர புத்தியா? 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - தட்டிக்கேட்ட வர்களுக்கு கத்திக்குத்து..
தாத்தா வயதில் இப்படியொரு கொடூர புத்தியா? 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - தட்டிக்கேட்ட வர்களுக்கு கத்திக்குத்து..
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: ஜூலை 17 முதல் ஆன்லைனில் சுயமாக பதிவு செய்வது எப்படி? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: ஜூலை 17 முதல் ஆன்லைனில் சுயமாக பதிவு செய்வது எப்படி? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ஷாக் அடிக்குமா மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை? டார்கெட் செந்தில் பாலாஜி? TVK அரசிடம் சிக்குவது யார்?
ஷாக் அடிக்குமா மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை? டார்கெட் செந்தில் பாலாஜி? TVK அரசிடம் சிக்குவது யார்?
MK Stalin: உசுப்பேற்றிய விஜய்.. கொதித்த திமுகவினர்.. மீண்டும் சட்டமன்றம் வரும் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: உசுப்பேற்றிய விஜய்.. கொதித்த திமுகவினர்.. மீண்டும் சட்டமன்றம் வரும் மு.க.ஸ்டாலின்!
TVK IT Wing: வாயைத் திறந்தாலே பால்டாயில் வாடை.. உதயநிதியை மீண்டும் வம்பிழுத்த தவெக!
TVK IT Wing: வாயைத் திறந்தாலே பால்டாயில் வாடை.. உதயநிதியை மீண்டும் வம்பிழுத்த தவெக!
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
CM Vijay Thiruma.: ‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
Embed widget