மேலும் அறிய

சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை - மயிலாடுதுறையில் 3 கடைகளுக்கு சீல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலை மற்றும் பான் மசாலா விற்பனையில் ஈடுபட்ட 3 கடைகளுக்கு சீல் வைப்பு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோதமாக தடைப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு நாள் தோறும் அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதனால் இளைஞர், முதியவர்கள் மட்டுமின்றி கல்லூரி, பள்ளி மாணவர்கள் கூட அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை வஸ்துகளை அதிகளவில் பயன்படுத்துவதாக அண்மையில் செய்திகள் வெளியானது. 


சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை - மயிலாடுதுறையில் 3 கடைகளுக்கு சீல்

மாவட்ட முழுவதும் தீவிர சோதனை 

இதனை அடுத்து, மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு சோதனைகள் நடைபெற்றது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, கஞ்சா விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார்.

9 நாட்கள் வெறும் சுடுதண்ணீர் மட்டும் அருந்தி பர்யுஷன் பர்வா நோம்பிருந்த இளைஞர் - எங்கே தெரியுமா?

காவல்துறையினருக்கு ரகசிய தகவல்

அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர சோதனையில் இடப்பட்டு அவ்வபோது, கைது நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் குத்தாலம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகயிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 


சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை - மயிலாடுதுறையில் 3 கடைகளுக்கு சீல்

மூன்று கடைகளுக்கு சீல் 

அடிப்படையில் குத்தாலம் பகுதியில் அமைந்துள்ள கடைகளை நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் ஆலோசனைப்படி மயிலாடுதுறை நகராட்சி மற்றும் குத்தாலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது தேரழுந்தூர் தேரடி பகுதியைச் சேர்ந்த மஜீத் சம்சுதீன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சட்டவிரோதமாக புகையிலை மற்றும் பான் மசாலா விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது ,அதனைத் தொடர்ந்து அக்கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் வாணாதிராஜபுரம் மெயின் ரோடு முகமது ரிஸ்வான் என்பவருக்கு சொந்தமான கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

Tilak Varma: தீவிர பயிற்சியில் திலக் வர்மா! அடுத்த என்ன நடக்கும்? அவரே சொன்ன பதில்

25 ஆயிரம் அபராதம் 

இதே போல பெரம்பூர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட மேலமங்கநல்லூர் செக்கடி தெரு ராஜேந்திரன் என்பவரது மளிகை கடை என மூன்று கடைகளுக்கு சீல் வைத்தனர். இந்த நடவடிக்கைகளை மயிலாடுதுறை நகராட்சி மற்றும் குத்தாலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் காவல்துறையினர் உதவியுடன் மூன்று கடைகளுக்கும் சீல் வைத்தார். மேலும் மாநில உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்ட கடைகளுக்கு தலா 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகழைப் பொருட்கள் விற்பனை குறித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு 94 4404 23 22 என்ற whatsapp எண்ணில் புகார் மற்றும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய  மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aniket Verma | ”தடைகள் எதையும் மகனே வென்று வா” தாய்க்கு செய்த சத்தியம்! யார் இந்த அனிகேத் வர்மா?ADMK BJP Alliance | ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?செங்கோட்டையனை வைத்து செக்! BACK அடிக்கும் எடப்பாடி | Sengottaiyan | Edappadi Palanisamy | Amishah | Rajiya Sabha SeatSengottaiyan | செங்கோட்டையனுக்கு V. K. Pandian:

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய  மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
Pakistan Earthquake: பாகிஸ்தானில்  திடீர் நிலநடுக்கம்!
Pakistan Earthquake: பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்!
சென்னையில் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வெயில் காலத்தில் ஜில் அப்டேட்! சென்னை மாநகராட்சியின் அசத்தல் ப்ளான்!
சென்னையில் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வெயில் காலத்தில் ஜில் அப்டேட்! சென்னை மாநகராட்சியின் அசத்தல் ப்ளான்!
Nidhi Tewari IFS: பிரதமர் மோடியின் புதிய தனிச்செயலாளர் நிதி திவேரி! யார் இந்த இளம் IFS அதிகாரி?
Nidhi Tewari IFS: பிரதமர் மோடியின் புதிய தனிச்செயலாளர் நிதி திவேரி! யார் இந்த இளம் IFS அதிகாரி?
சினிமா ஆசைகாட்டி வன்கொடுமை...கும்பமேளா வைரல் பெண்ணை வைத்து படம் இயக்கிவந்த இயக்குநர் கைது
சினிமா ஆசைகாட்டி வன்கொடுமை...கும்பமேளா வைரல் பெண்ணை வைத்து படம் இயக்கிவந்த இயக்குநர் கைது
Embed widget