மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்ட மருத்துவமனைகளில் குவிந்த அஞ்சல் அட்டைகள் - திகைத்து போன மருத்துவர்கள்....!

வித்தியாசமான முறையில் மருத்துவர்களுக்கு அஞ்சலக ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தது அனைத்து தரப்பு மக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.

மயிலாடுதுறையில் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அஞ்சலக ஊழியர்கள் அரசு பள்ளி மாணவர்களிடம் அஞ்சல் அட்டையில் வாழ்த்துகளை எழுதி பெற்று அதனை மருத்துவர்களிடம் வழங்கி வித்தியாசமான முறையில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

நாட்டிற்கு நாடு தேதி மாறுபாடு

மருத்துவர்களின் உன்னத சேவையைப் போற்றும் வகையில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. முதல் மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது மார்ச் 28, 1933. அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள விண்டரில் இந்த முதல் அனுசரிப்பில் மருத்துவர்கள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டது. டாக்டர் லாங் உட்பட இறந்த மருத்துவர்களின் கல்லறைகளில் மலர்கள் வைக்கப்பட்டது. தேசிய மருத்துவர்கள் தினம் என்பது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூகங்களுக்கு மருத்துவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நாளாகும். அந்த நாளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் நினைவேந்தல் நிகழ்வைப் பொறுத்து நாட்டிற்கு நாடு தேதி மாறுபடுகிறது.


மயிலாடுதுறை மாவட்ட மருத்துவமனைகளில் குவிந்த அஞ்சல் அட்டைகள் - திகைத்து போன மருத்துவர்கள்....!

ஜுலை 1 -ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம்

அந்த வகையில் இந்திய நாட்டின் தேசிய மருத்துவர்கள் தினம் ஜுலை 1 -ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. புகழ் பெற்ற மருத்துவரும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திரராயின் பிறந்த நாளில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. டாக்டர் பி.சி.ராய் எண்ணற்ற நபர்களுக்கு சேவை செய்வதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது நினைவாக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 


மயிலாடுதுறை மாவட்ட மருத்துவமனைகளில் குவிந்த அஞ்சல் அட்டைகள் - திகைத்து போன மருத்துவர்கள்....!

டாக்டர் பிதான் சந்திரராய்

டாக்டர் பிதான் சந்திரராய் மருத்துவம், கல்வி மற்றும் சமூகத் துறைகளில் சிறந்த பங்களிப்பு செய்து இந்திய மருத்துவ உலகில் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தினார். பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் பெற்றவர். இந்தியாவின் மிகவும் பெருமைக்குரிய மருத்துவராக அங்கீகரிக்கப்பட்டவர். ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கினார். மருத்துவ வசதிகள் குறைந்த பகுதிகளில் மருத்துவமனைகளை ஏற்படுத்தி, மருத்துவக்கல்வி மற்றும் சிகிச்சை வசதிகளை வழங்குவதில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். முதன் முதலில் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தார். இதய நல சிகிச்சையில் புதிய வழிமுறைகளை உருவாக்கினார்.


மயிலாடுதுறை மாவட்ட மருத்துவமனைகளில் குவிந்த அஞ்சல் அட்டைகள் - திகைத்து போன மருத்துவர்கள்....!


1962 -ல், ஜூலை 1 அன்று, தனது பிறந்த நாளிலேயே அவர் மறைந்தார். அவரது வீடு, அவரது மறைவிற்குப் பின் அவர் தாயார் காமினி தேவியின் பெயரில் ஒரு முதியோர் இல்லமாக மாறியது. 1961 பாரத் ரத்னா விருது வழங்கி அவரை நாடு கௌரவித்தது. அவரது நினைவைப் போற்றும் வண்ணம் 1976 -ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பி.சி ராய் தேசிய விருது வழங்கப்படுகிறது. அரசியல், அறிவியல், தத்துவம், இலக்கியம் மற்றும் கலை ஆகிய துறைகளில் சிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.


மயிலாடுதுறை மாவட்ட மருத்துவமனைகளில் குவிந்த அஞ்சல் அட்டைகள் - திகைத்து போன மருத்துவர்கள்....!

மருத்துவர்களின் சிறப்பு 

நோயாளிகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மீட்டெடுப்பதில் மருத்துவர்களின் அறிவும் நடைமுறை செயல்திறனும் மிகவும் முக்கியமானது. அவர்களின் நிபுணத்துவம், பச்சாதாபம், இரக்கம் ஆகியவை நோயாளிகளின் வாழ்க்கையில் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. வெள்ளை அங்கி அணிந்து தன்னலம் இன்றி மற்றவர்கள் நலனுக்காக தங்களை அர்ப்பணிக்கும் மாவீரர்களை கௌரவிக்கும் நாளாக ஜூலை 1 இருக்கிறது.


மயிலாடுதுறை மாவட்ட மருத்துவமனைகளில் குவிந்த அஞ்சல் அட்டைகள் - திகைத்து போன மருத்துவர்கள்....!

மருத்துவர்கள் வெள்ளை நிற உடைக்கான காரணம் 

ஆரம்ப காலகட்டங்களில் மருத்துவப் பயிற்சியாளர்கள் கருப்பு நிற உடைகளையே அணிந்திருந்தார்கள். அவை சம்பிரதாயம் மற்றும் அமைதியுடன் தொடர்புடையதாக இருந்தது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆன்டி செப்டிக் அறுவை சிகிச்சைகளின் முன்னோடியான டாக்டர் ஜோசப் லிஸ்டர் மருத்துவர்கள் வெள்ளை அங்கிகளை அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஏனென்றால், வெள்ளை அங்கி தூய்மை, சுகாதாரம் மற்றும் நேர்மறையான பிம்பத்தை வெளிப்படுத்த ஒரு முக்கிய அடையாளமாக இருக்கிறது என அவர் கருதினார். எனவே, 1880 மற்றும் 90களில் இருந்து இது பரவலாக மருத்துவர்களால் கடைபிடிக்கப்பட்டு, வெள்ளை நிற அங்கிகளை அணிய ஆரம்பித்தனர். தற்போது பல நாடுகளில் மருத்துவர்கள் வெள்ளை நிற அங்கிகளை அணிவது வழக்கமாகி விட்டது. தற்போது இந்திய மருத்துவ சங்கம், ஐக்கிய அமெரிக்க மருத்துவ சங்கம், பிரிட்டிஷ் மருத்துவ சபை போன்றவற்றின் விதிமுறைகளின்படி மருத்துவர்கள் வெள்ளை அங்கிகள் அணிய வேண்டும் என்பது கட்டாய விதியாகும்.


மயிலாடுதுறை மாவட்ட மருத்துவமனைகளில் குவிந்த அஞ்சல் அட்டைகள் - திகைத்து போன மருத்துவர்கள்....!

மயிலாடுதுறை தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிப்பு 

முன்னதாக மயிலாடுதுறை தலைமை அஞ்சல் நிலைய கண்காணிப்பாளர் ஆசீப் இக்பால் தலைமையில் அஞ்சலக ஊழியர்கள் அந்தந்த வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களிடம் அஞ்சல் அட்டையை வழங்கி, மருத்துவர்கள் பற்றிய கருத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டனர்.  மேலும் ஒவ்வொரு அஞ்சல் அட்டையிலும் மாணவர்கள் ஆர்வமுடன் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது கருத்துக்களை எழுதி அஞ்சலக ஊழியர்களிடம் வழங்கினர்.


மயிலாடுதுறை மாவட்ட மருத்துவமனைகளில் குவிந்த அஞ்சல் அட்டைகள் - திகைத்து போன மருத்துவர்கள்....!

இதனை சேகரித்த ஊழியர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் அந்தந்த தபால் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவர்களுக்கு மாணவர்கள் கைப்பட எழுதிய அஞ்சலக வாழ்த்து அட்டையினை வழங்கி மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதனிடையே வித்தியாசமான முறையில் மருத்துவர்களுக்கு அஞ்சலக ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தது அனைத்து தரப்பு மக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கோடை வெயிலில் பயிர்களைக் காப்பது எப்படி? - சொட்டுநீர் பாசனம் முதல் மூடாக்கு வரை ஆட்சியர் அசத்தல் ஐடியாக்கள்..!
கோடை வெயிலில் பயிர்களைக் காப்பது எப்படி? - சொட்டுநீர் பாசனம் முதல் மூடாக்கு வரை ஆட்சியர் அசத்தல் ஐடியாக்கள்..!
சீர்காழியில் அஜித் பிறந்த நாளும் அசைவ விருந்தும்...!
சீர்காழியில் அஜித் பிறந்த நாளும் அசைவ விருந்தும்...!
சீர்காழி அருகே பயங்கரம்: நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறில் உறவினரை வெட்டிக்கொன்ற இளைஞர்..!
சீர்காழி அருகே பயங்கரம்: நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறில் உறவினரை வெட்டிக்கொன்ற இளைஞர்..!
"சிவனின் இளைய மகன் பெயர்கொண்டவரே மீண்டும் முதல்வர்" - ஓலைச்சுவடி ஆருடத்தால் பரபரப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD SILVER RATE May 2nd: நகை வாங்குவோருக்கு ஷாக்.! ஏறுமுகத்திற்கு திரும்பிய தங்கம், வெள்ளி விலை; தற்போதைய விலை என்ன.?
நகை வாங்குவோருக்கு ஷாக்.! ஏறுமுகத்திற்கு திரும்பிய தங்கம், வெள்ளி விலை; தற்போதைய விலை என்ன.?
TVK Vijay: வேளாங்கண்ணி டூர் கேன்சல்.. விஜய் சம்பவம்.. விடிய விடிய காத்திருந்த மக்கள் ஏமாற்றம்!
TVK Vijay: வேளாங்கண்ணி டூர் கேன்சல்.. விஜய் சம்பவம்.. விடிய விடிய காத்திருந்த மக்கள் ஏமாற்றம்!
Nainar Nagendran: விஜய் ஜெயித்தால் ஆதரவு கேட்கும் முடிவில் பாஜக? - நயினார் நாகேந்திரன் பதில்!
Nainar Nagendran: விஜய் ஜெயித்தால் ஆதரவு கேட்கும் முடிவில் பாஜக? - நயினார் நாகேந்திரன் பதில்!
Trump US Iran War: “நான் ஏன் அத உங்க கிட்ட சொல்லணும்.?“; செய்தியாளர்களிடம் கோபமடைந்த ட்ரம்ப்; அப்படி என்ன கேட்டாங்க.?
“நான் ஏன் அத உங்க கிட்ட சொல்லணும்.?“; செய்தியாளர்களிடம் கோபமடைந்த ட்ரம்ப்; அப்படி என்ன கேட்டாங்க.?
Velmurugan: லட்சக்கணக்கில் பேரம்.. வேல்முருகனுடன் டீல் பேசிய விஜய் தரப்பு.. நடந்தது என்ன?
Velmurugan: லட்சக்கணக்கில் பேரம்.. வேல்முருகனுடன் டீல் பேசிய விஜய் தரப்பு.. நடந்தது என்ன?
AC Vs Cooler Vs Fan: வெயில் தாங்க முடியலையா.? ஏசி, கூலர், ஃபேன்; இவற்றிலிருந்து அதிகபட்ச கூலிங்கை எப்படி பெறுவது.? இதோ டிப்ஸ்
வெயில் தாங்க முடியலையா.? ஏசி, கூலர், ஃபேன்; இவற்றிலிருந்து அதிகபட்ச கூலிங்கை எப்படி பெறுவது.? இதோ டிப்ஸ்
TN Power Cut: கொளுத்தும் கோடை வெயில்... தமிழ்நாட்டில் மீண்டும் அமலுக்கு வரும் மின்வெட்டு!
TN Power Cut: கொளுத்தும் கோடை வெயில்... தமிழ்நாட்டில் மீண்டும் அமலுக்கு வரும் மின்வெட்டு!
TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!
TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!
Embed widget