மேலும் அறிய

மயிலாடுதுறை மின்துறையில் தொடரும் அவலம் - முற்றுப்புள்ளி வைக்குமா அரசு? 

மயிலாடுதுறை அருகே மின்வாரிய அலுவலகத்தில் பணி நேரத்தில் மதுபோதையில் ஊழியர்கள் படுத்துறங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குத்தாலம் அருகே இரவு மின் தடை ஏற்பட்ட நிலையில், குத்தாலம் துணைமின் நிலையத்தில் மின் இணைப்பை சரி செய்யாமல் ஊழியர்கள் மதுபோதையில் உறங்கியதாக குற்றம்சாட்டி எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குத்தாலம் துணை மின்நிலையம் 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து குத்தாலம் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குத்தாலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென மின்சாரம் தடைபட்டுள்ளது. நீண்ட நேரம் ஆகியும் மின்சாரம் வராமல் இருந்துள்ளது.


மயிலாடுதுறை மின்துறையில் தொடரும் அவலம் - முற்றுப்புள்ளி வைக்குமா அரசு? 

 அலுவலகத்தில் உறக்கம் 

அதனை அடுத்து குத்தாலம் பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் பலமுறை கால் செய்தும் அவர்கள் பொதுமக்களின் அழைப்பை ஏற்கவில்லை. இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் குத்தாலம் துணை மின் நிலையத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது இரண்டு ஊழியர்கள் ஆடை நழுவியது கூட தெரியாமல் அலுவலகத்தில் உள்ளே படுத்து உறங்கியுள்ளனர். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஊழியர்களை தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி, குத்தாலம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்நிறுத்தம் குறித்து தெரிவித்து, அதனை சரி செய்ய கூறியுள்ளனர். 


மயிலாடுதுறை மின்துறையில் தொடரும் அவலம் - முற்றுப்புள்ளி வைக்குமா அரசு? 

சமூக வலைதளங்களில் பரவும் வைரல் வீடியோ 

மேலும் மின்வாரிய ஊழியர்களை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளனர் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி ‌ ஊழியர்கள் மது போதையில் இருந்ததாக வீடியோ எடுத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து மின்வாரிய வட்டாரத்தில் கேட்டபோது, இதுகுறித்து கேட்டபோது மின் பாதை ஆய்வாளர் கண்ணன், கேங்மேன் கங்காதரன் ஆகியோருக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Thalapathy 69 : எக்ஸ் போலீஸ் ஆபிஸராக விஜய்...தீரன் ஸ்டைலில் உருவாகிறது படம்..தளபதி 69 லேட்டஸ்ட் அப்டேட்ஸ்


மயிலாடுதுறை மின்துறையில் தொடரும் அவலம் - முற்றுப்புள்ளி வைக்குமா அரசு? 

சமூக ஆர்வலர்கள் கண்டனம் 

மேலும் கவனமாக கையாளக்கூடிய மின்சாரத்தை குடிபோதையில் ஊழியர்கள் கையாள்வதால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் மின்வாரியத்துறை அதிகாரிகள் இது போன்ற நிகழ்வுகளை சரியான முறையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்வாரியத்தில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருவதாகவும், அதிகாரிகளின் அலட்சிய போக்கால் ஊழியர்கள் தொடர்ந்து பீங்கானுக்கு பதில் மின் கம்பத்தில் மது பாட்டில்களை வைத்து மின்கம்பியினை கட்டுவதும்,

LIK First Single :வாவ்! மூச்சே விடாமல் பாடி அசத்திய அனிருத்... எல்.ஐ.கே படத்தின் தீமா பாடல் ப்ரோமோ

மூங்கில் குச்சிகளை வைத்து மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று இணையாமல் கட்டுவதும், தெரு நடுவில் மின்கம்பம் நட்டு வைத்தது என மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் இதுபோன்று நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அரசு இதனை கண்டும் காணாமல் இருக்காமல், மக்களின் மிகவும் அத்தியாவசியமான ஒன்றான, அனைத்து துறைகளும் பயன்படும் மின்சார பயன்பாட்டில் இனி வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget