மேலும் அறிய

"திரும்ப வந்துட்டேனு சொல்லு" - ஓய்வுக்கு பிறகு வந்த டிஎஸ்பி - மீண்டும் மயிலாடுதுறையில் அதிரடி...!

வெளிமாநில மதுபானம் மற்றும் சாராயம் விற்பனை குறித்து புகார் மதுவிலக்கு அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுபானக்கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்யப்படுவது குறித்து மதுவிலக்கு அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி 

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் கஞ்சா, சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனையை தடுக்க அவர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனை, அரசு அனுமதி இன்று செயல்பட மதுபான பார்களுக்கு சீல் என பொறுப்பேற்ற முதல் நாள்முதல் அதிரடி காட்டினார்.


நீண்ட விடுப்பில் சென்ற டிஎஸ்பி 

இந்நிலையில் பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் நீண்ட மருத்துவிடுப்பில் சென்றார். அவரின் அதிரடி நடவடிக்கைகளால் அவருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதாக பரவலாக காவல்துறை வட்டாரத்தில் பேசப்பட்டடது. இதனால் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுப்பட்டுவந்தவர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் மீண்டும் விடுப்பு முடிந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர் மீண்டும் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனைக்கு எதிராக தனது அதிரடி நடவடிக்கைகளை துவங்கியுள்ளார். அதன் ஒன்றாக முதல்நாளே கஞ்சா மற்றும் வெளிமாநில மது விற்பனை தொடர்பாக 18 பேரை கைது செய்துள்ளார்.


எஸ்.பி.உத்தரவு

அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறையில் மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பில் டாஸ்மாக் மதுபானக்கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தை மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி சுந்தரரேசன் தலைமையில் நடத்தினார். இக்கூட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பழனிவேலு கலந்து கொண்டார். 

டிஎஸ்பி தலைமையில் கூட்டம் 

தொடரும் அக்கூகூட்டத்தில் டிஎஸ்பி சுந்தரரேசன் பேசுகையில்; டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படவில்லை என்பதை கடை மேற்பார்வையாளர்கள் உறுதி செய்யவேண்டும், அவ்வாறு விற்பனை செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அனுமதித்த நேரத்தில் மட்டும் கடைகளை திறந்திருக்க வேண்டும், பார் உரிமையாளர்கள் உரிய உரிமம் பெற்றே பார்களை நடத்த வேண்டும், அரசு அனுதியில்லாமல் செயல்படும் பார்கள் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். 


புகார் அளிக்க பிரத்யேக எண் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்யப்படுவது குறித்து தெரியவந்தால் பொதுமக்கள் 9498158885 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார். இக்கூட்டத்தில், உதவி மேலாளர் ஜெயபாலன், கோட்ட கலால் அலுவலர் சுகுமாறன், மதுவிலக்கு ஆய்வாளர்கள் அன்னை அபிராமி, ஜெயா மற்றும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

யார் இந்த டிஎஸ்பி சுந்தரேசன்..?

காஞ்சிபுரத்தில் நிலம் விற்கும் விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்துாரி, 63, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, அதே மாவட்டத்தைச் சேர்ந்த, ம.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர் 65 வயதான வளையாபதி, அ.தி.மு.க., பிரமுகர் 52 வயதான பிரபு, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவல்துறையினர், காஞ்சிபுரம் நத்தப்பேட்டையில், பயன்பாட்டில் இல்லாத காவலர் குடியிருப்பில் வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு இருவரும் மருத்துவ சிகிச்சை பெற்று உடல் நலன் தேறினர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

அதேபோல, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின், ரவுடிகள் திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோர் காவல்துறையினரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக, மாநில மனித உரிமை கமிஷன் விசாரணையில் இறங்கியது. அங்கு பணியாற்றிய டி.எஸ்.பி., சுந்தரேசன் விசாரித்து, மாநில மனித உரிமைகள் கமிஷனுக்கு முதற்கட்ட அறிக்கை சமர்ப்பித்துள்ளார். 

காவல்துறையினரின் தவறுகளை சுட்டிக்காட்டிய டிஎஸ்பி 

அத்துடன், காவல்துறையினரின் தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக, அவர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் 10 -ம் தேதி, மாநில மனித உரிமை கமிஷன் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சுந்தரேசன், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அளித்த அறிக்கை எல்லாம், அரசுக்கு பாதகமாக இருப்பதால், இடம் மாற்றப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஜூன் 2-ல் மகா சிவஜோதி ஐக்கிய காட்சி! ஆச்சாள்புரம் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்..
ஜூன் 2-ல் மகா சிவஜோதி ஐக்கிய காட்சி! ஆச்சாள்புரம் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்..
மாதம் ரூ.50,000 மதிப்பூதியம்! மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வேலை... தகுதி என்ன தெரியுமா?
மாதம் ரூ.50,000 மதிப்பூதியம்! மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வேலை... தகுதி என்ன தெரியுமா?
3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பணம் நிறுத்தம்! சரிசெய்ய ஜூன் 15 வரை சிறப்பு வாய்ப்பு!
3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பணம் நிறுத்தம்! சரிசெய்ய ஜூன் 15 வரை சிறப்பு வாய்ப்பு!
நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்குப் பாய் பாய்! ஜூன் 13-க்குப் பின் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல வழக்குகளுக்கு ‘எண்ட் கார்டு’!
நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்குப் பாய் பாய்! ஜூன் 13-க்குப் பின் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல வழக்குகளுக்கு ‘எண்ட் கார்டு’!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?
Cockroach Janta Party|’’சோம்பேறிகளுக்கு முன்னுரிமை’’கரப்பான்பூச்சி மக்கள் கட்சி..விசித்திர பின்னணி!
Vijay CV Shanmugam | ”அமைச்சர் பதவி கிடையாது”CV சண்முகம் TEAM-க்கு செக்..முடிவாக சொன்ன விஜய்?
Savukku Shankar | குண்டாஸ் ரத்து!சவுக்கு சங்கர் ரிலீஸ்?விஜய் அதிரடி உத்தரவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kader Moideen IUML : விஜய் அமைச்சரவையில் ஐயூஎம்எல்.! திமுக கூட்டணி முறிந்ததா.? காதர்மொய்தீன் முக்கிய அறிவிப்பு
விஜய் அமைச்சரவையில் ஐயூஎம்எல்.! திமுக கூட்டணி முறிந்ததா.? காதர்மொய்தீன் முக்கிய அறிவிப்பு
US Iran War: “விரும்பத்தகாத காரியங்களை செய்வோம்“ - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
“விரும்பத்தகாத காரியங்களை செய்வோம்“ - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
TN Cabinet: ”ஆதி திராவிடர், சிறுபான்மை நலன்” விசிக, IUML-க்காக கதவு திறந்து காத்திருக்கும் சிஎம் விஜய் - திருமா?
”ஆதி திராவிடர், சிறுபான்மை நலன்” விசிக, IUML-க்காக கதவு திறந்து காத்திருக்கும் சிஎம் விஜய் - திருமா?
TN Ministers Portfolio : புதிய அமைச்சர்கள் 23 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு.! யாருக்கு எந்த துறை.? இதோ முழு விவரம்
புதிய அமைச்சர்கள் 23 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு.! யாருக்கு எந்த துறை.? இதோ முழு விவரம்
TVK Ministers Age: 40+ வயதில் 22 அமைச்சர்கள்..! 60 வயதை கடந்த 4 பேர் - சிஎம் விஜய் அமைச்சரவையின் வயது விவரம்
40+ வயதில் 22 அமைச்சர்கள்..! 60 வயதை கடந்த 4 பேர் - சிஎம் விஜய் அமைச்சரவையின் வயது விவரம்
Scooter vs Bike Mileage: ஸ்கூட்டர விட பைக்கோட மைலேஜ் அதிகமா இருக்கேன்னு எப்பவாவது யோசிச்சுருக்கீங்களா.? காரணம் இதுதான்
ஸ்கூட்டர விட பைக்கோட மைலேஜ் அதிகமா இருக்கேன்னு எப்பவாவது யோசிச்சுருக்கீங்களா.? காரணம் இதுதான்
Top 5 Safest Cars: ‘ஸ்டைலு, அதே நேரத்துல ஸ்ட்ராங்கு'; இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் எவை தெரியுமா.? டாப் 5 லிஸ்ட் இதோ
‘ஸ்டைலு, அதே நேரத்துல ஸ்ட்ராங்கு'; இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் எவை தெரியுமா.? டாப் 5 லிஸ்ட் இதோ
School Reopen: கொளுத்தும் வெயில்.! பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா.? மாணவர்களுக்கு குட் நியூஸ் வருமா.??
கொளுத்தும் வெயில்.! பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா.? மாணவர்களுக்கு குட் நியூஸ் வருமா.??
Embed widget