மேலும் அறிய

24 ஆண்டுகால கோரிக்கை - அடுத்தடுத்து நடவடிக்கை: மகிழ்ச்சியில் கிராம மக்கள்...!

கடந்த 24 ஆண்டுகளாக இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

சீர்காழி அருகே செம்மங்குடியில் கடந்த 24 ஆண்டுகளாக சாலை அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் சேரும் சகதியுமான மண் சாலையில் நடவு நடும் போராட்டத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சாலை கோரிக்கை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெருவில் சுமார் 50 -க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலை அமைக்கப்பட்டால் இருந்து வந்துள்ளது. மேலும் இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றன.


24 ஆண்டுகால கோரிக்கை - அடுத்தடுத்து நடவடிக்கை: மகிழ்ச்சியில் கிராம மக்கள்...!

வழியின்றி தவிர்ப்பு

கடந்த 2000 வது ஆண்டு இப்பகுதியில் வசித்த 35 குடும்பத்தினருக்கு ஆதிதிராவிட நலத்துறையின் சார்பாக வீட்டு மனை வழங்கப்பட்டு தெரு உள்ளே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் பிரதான சாலையில் இருந்து உள்ளே செல்வதற்கு இணைப்புச்சாலை அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் தனியார் இடத்தின் வழியே சென்று வந்தனர். 

24 ஆண்டுகால கோரிக்கை 

இந்நிலையில் தனியார் இடத்திலும் வீடு கட்டப்பட்டதால் தங்கள் வீடுகளுக்கு செல்ல வழி இல்லாமல் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். சாதாரண மழை பெய்தால் கூட சேரும் சகதியுமாக மாறும் சாலையை கடந்து வீடுகளுக்கு செல்லும் அவல நிலை உள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 


24 ஆண்டுகால கோரிக்கை - அடுத்தடுத்து நடவடிக்கை: மகிழ்ச்சியில் கிராம மக்கள்...!

நடவு நட்டு போராட்டம் 

இந்த சூழலில் இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சேரும் சகதியுமான முகப்புச் சாலையில் திடீரென நடவு நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விரைந்து சாலையை அமைக்க வேண்டும் எனவும், தாமதம் ஏற்படும் பட்சத்தில் மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் அறிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விரைந்து வந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர்

இந்த தகவலை அறிந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர் விஜயேஸ்வரன் உடனடியாக சம்பவம் இடத்திற்கு நேரில் சென்று இடத்தினை ஆய்வு செய்து, முதற்கட்டமாக பொக்லைன் இயந்திரத்தை கொண்டு ஜல்லிகளை கொட்டி தற்காலிக சீரமைப்பு செய்தார். மேலும் விரைவில் நிரந்தரமாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


24 ஆண்டுகால கோரிக்கை - அடுத்தடுத்து நடவடிக்கை: மகிழ்ச்சியில் கிராம மக்கள்...!

நடவடிக்கை எடுத்த ஆட்சியர் 

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் 4 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 77 மீட்டர் தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை தரமானதாக சாலை அமைக்கப்படும் என்றும், மேலும் குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்து அது தொடர்பான பிரச்சினைகளையும் சரி செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இவ்வாய்வின்போது, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், திருமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.  

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
போலீஸ் சோதனையில் நுழைந்த 'ஆட்சியரின்' கார்... மயிலாடுதுறை கொத்தத்தெருவில் நடந்தது என்ன?
போலீஸ் சோதனையில் நுழைந்த 'ஆட்சியரின்' கார்... மயிலாடுதுறை கொத்தத்தெருவில் நடந்தது என்ன?
திடீரென நுழைந்த 'அருள் பிரியா' டீம்.. கதிகலங்கி நின்ற அதிகாரிகள்: மயிலாடுதுறை நகராட்சியில் நடந்த 'பகீர்' ஆபரேஷன்!
திடீரென நுழைந்த 'அருள் பிரியா' டீம்.. கதிகலங்கி நின்ற அதிகாரிகள்: மயிலாடுதுறை நகராட்சியில் நடந்த 'பகீர்' ஆபரேஷன்!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
ADMK functionaries JOIN TVK : தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Embed widget