மேலும் அறிய

24 ஆண்டுகால கோரிக்கை - அடுத்தடுத்து நடவடிக்கை: மகிழ்ச்சியில் கிராம மக்கள்...!

கடந்த 24 ஆண்டுகளாக இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

சீர்காழி அருகே செம்மங்குடியில் கடந்த 24 ஆண்டுகளாக சாலை அமைக்காததை கண்டித்து கிராம மக்கள் சேரும் சகதியுமான மண் சாலையில் நடவு நடும் போராட்டத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சாலை கோரிக்கை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெருவில் சுமார் 50 -க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலை அமைக்கப்பட்டால் இருந்து வந்துள்ளது. மேலும் இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றன.


24 ஆண்டுகால கோரிக்கை - அடுத்தடுத்து நடவடிக்கை: மகிழ்ச்சியில் கிராம மக்கள்...!

வழியின்றி தவிர்ப்பு

கடந்த 2000 வது ஆண்டு இப்பகுதியில் வசித்த 35 குடும்பத்தினருக்கு ஆதிதிராவிட நலத்துறையின் சார்பாக வீட்டு மனை வழங்கப்பட்டு தெரு உள்ளே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் பிரதான சாலையில் இருந்து உள்ளே செல்வதற்கு இணைப்புச்சாலை அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் தனியார் இடத்தின் வழியே சென்று வந்தனர். 

24 ஆண்டுகால கோரிக்கை 

இந்நிலையில் தனியார் இடத்திலும் வீடு கட்டப்பட்டதால் தங்கள் வீடுகளுக்கு செல்ல வழி இல்லாமல் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். சாதாரண மழை பெய்தால் கூட சேரும் சகதியுமாக மாறும் சாலையை கடந்து வீடுகளுக்கு செல்லும் அவல நிலை உள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 


24 ஆண்டுகால கோரிக்கை - அடுத்தடுத்து நடவடிக்கை: மகிழ்ச்சியில் கிராம மக்கள்...!

நடவு நட்டு போராட்டம் 

இந்த சூழலில் இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சேரும் சகதியுமான முகப்புச் சாலையில் திடீரென நடவு நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விரைந்து சாலையை அமைக்க வேண்டும் எனவும், தாமதம் ஏற்படும் பட்சத்தில் மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் அறிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விரைந்து வந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர்

இந்த தகவலை அறிந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர் விஜயேஸ்வரன் உடனடியாக சம்பவம் இடத்திற்கு நேரில் சென்று இடத்தினை ஆய்வு செய்து, முதற்கட்டமாக பொக்லைன் இயந்திரத்தை கொண்டு ஜல்லிகளை கொட்டி தற்காலிக சீரமைப்பு செய்தார். மேலும் விரைவில் நிரந்தரமாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


24 ஆண்டுகால கோரிக்கை - அடுத்தடுத்து நடவடிக்கை: மகிழ்ச்சியில் கிராம மக்கள்...!

நடவடிக்கை எடுத்த ஆட்சியர் 

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் 4 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 77 மீட்டர் தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை தரமானதாக சாலை அமைக்கப்படும் என்றும், மேலும் குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்து அது தொடர்பான பிரச்சினைகளையும் சரி செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இவ்வாய்வின்போது, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், திருமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.  

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
ஒரே நாளில் அனைத்து அரசுச் சான்றிதழ்களும்: மயிலாடுதுறை திருநங்கைகளுக்கு ஆட்சியரின் சூப்பர் சான்ஸ்..!
ஒரே நாளில் அனைத்து அரசுச் சான்றிதழ்களும்: மயிலாடுதுறை திருநங்கைகளுக்கு ஆட்சியரின் சூப்பர் சான்ஸ்..!
"கேக் வேண்டாம்... தங்கச்சி தான் வேணும்!" - 9 வயதுச் சிறுவனின் பிறந்தநாள் கோரிக்கையால் கலங்கிய ஆட்சியர் அலுவலகம்.. 
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget