மேலும் அறிய

சட்டநாதர் கோயிலில் அமைச்சர்களிடம் பக்தர்கள் கொட்டித்தீர்த்த குறைகள்! உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் நேரு!

சீர்காழி சட்டநாதர் கோயில் சாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சர் கே.என்.நேருவிடம் பக்தர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அவற்றை உடனடியாக நிறைவேற்ற அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள பிரசித்தி பெற்ற சட்டநாதர் சுவாமி திருக்கோயிலில் நேற்று இரவு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். ஆலயத்திற்கு வந்த அமைச்சர்களிடம், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை சுகாதாரத் தேவைகளை உடனே செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் நேரடியாகக் கோரிக்கை வைத்தனர்.

அமைச்சர்கள் சாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற சட்டநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு வருகை புரிந்தனர்.

அமைச்சர்கள் இருவரும், ஆலயத்தின் பிரதான சன்னதிகளான பிரம்மபுரீஸ்வரர் சுவாமி, தையல்நாயகி அம்பாள், சட்டநாதர் சுவாமி, மற்றும் தோணியப்பர் ஆகிய சுவாமிகளை மனமுருகி வழிபட்டனர். அவர்களுக்குக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிவாச்சாரியார்கள் சுவாமி பிரசாதங்களையும், சுவாமி திருவுருவப் படங்களையும் வழங்கி ஆசி வழங்கினர்.

பக்தர்கள் முன்வைத்த கோரிக்கைகள்

அமைச்சர்கள் சாமி தரிசனம் முடித்து வெளியே வந்தபோது, கோயிலில் இருந்த பக்தர்கள் குழுவாகச் சென்று அமைச்சர் கே.என். நேருவிடம் தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர். 

பக்தர்களின் கோரிக்கைகளில் முக்கியமானது

 * கழிப்பிட வசதி கோரிக்கை: சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் நலன் கருதி, உடனடியாகப் போதுமான மற்றும் சுகாதாரமான கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கழிப்பிட வசதி இல்லாததால் பெரும் சிரமத்திற்கும், சங்கடத்திற்கும் உள்ளாகி வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

* சுகாதார சீர்கேடு புகார்: மேலும், நகரில் பல இடங்களில் குப்பைகள் வாரக்கணக்கில் அகற்றப்படாமல் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும், இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் அமைச்சரிடம் குற்றம் சாட்டினர்.

அமைச்சரின் உடனடி நடவடிக்கை

பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளைக் கவனத்துடன் கேட்டுக்கொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, தாமதிக்காமல் உடனடி நடவடிக்கை எடுத்தார்.

அவர் உடனடியாக நகராட்சி நிர்வாக அதிகாரிகளையும், நகராட்சி ஆணையர் மஞ்சுளா உள்ளிட்டோரை அழைத்து, பக்தர்களுக்குத் தேவையான கழிப்பிட வசதியை விரைந்து ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அத்துடன், நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் குறித்துப் புகார் வந்திருப்பதால், குப்பைகளை நாள்தோறும் முறையாகவும், விரைவாகவும் அகற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்குக் கண்டிப்பாக உத்தரவிட்டார்.

அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு

அமைச்சர்களின் வருகையின்போது, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் அன்பழகன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல நிர்வாகி ஸ்ரீதர், நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் மஞ்சுளா, நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

பின்னர், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த மாவட்ட, நகர நிர்வாகிகள் அமைச்சர் கே. என். நேருவை நேரில் சந்தித்துச் சால்வை அணிவித்துப் பொன்னாடை வழங்கி வாழ்த்து பெற்றனர். சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து அமைச்சரிடம் நேரடியாகக் கோரிக்கை வைக்கப்பட்டதும், அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விலைவாசிக்கு ஏற்ப ஊதியம் வழங்குக!
விலைவாசிக்கு ஏற்ப ஊதியம் வழங்குக!" - மயிலாடுதுறையில் திரண்ட ஏசி மெக்கானிக்குகள்: தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கை..
இந்திரப் பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ தேரை வடம் பிடித்து இழுத்த துர்கா ஸ்டாலின்!
இந்திரப் பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ தேரை வடம் பிடித்து இழுத்த துர்கா ஸ்டாலின்!
"விவசாயி அழிந்து வருகிறான்” - டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இதுதான்..
மயிலாடுதுறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா..?
மயிலாடுதுறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா..?
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
BYD Blade Battery: என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
Embed widget