மேலும் அறிய

சட்டநாதர் கோயிலில் அமைச்சர்களிடம் பக்தர்கள் கொட்டித்தீர்த்த குறைகள்! உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் நேரு!

சீர்காழி சட்டநாதர் கோயில் சாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சர் கே.என்.நேருவிடம் பக்தர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அவற்றை உடனடியாக நிறைவேற்ற அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள பிரசித்தி பெற்ற சட்டநாதர் சுவாமி திருக்கோயிலில் நேற்று இரவு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். ஆலயத்திற்கு வந்த அமைச்சர்களிடம், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை சுகாதாரத் தேவைகளை உடனே செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் நேரடியாகக் கோரிக்கை வைத்தனர்.

அமைச்சர்கள் சாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற சட்டநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு வருகை புரிந்தனர்.

அமைச்சர்கள் இருவரும், ஆலயத்தின் பிரதான சன்னதிகளான பிரம்மபுரீஸ்வரர் சுவாமி, தையல்நாயகி அம்பாள், சட்டநாதர் சுவாமி, மற்றும் தோணியப்பர் ஆகிய சுவாமிகளை மனமுருகி வழிபட்டனர். அவர்களுக்குக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிவாச்சாரியார்கள் சுவாமி பிரசாதங்களையும், சுவாமி திருவுருவப் படங்களையும் வழங்கி ஆசி வழங்கினர்.

பக்தர்கள் முன்வைத்த கோரிக்கைகள்

அமைச்சர்கள் சாமி தரிசனம் முடித்து வெளியே வந்தபோது, கோயிலில் இருந்த பக்தர்கள் குழுவாகச் சென்று அமைச்சர் கே.என். நேருவிடம் தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர். 

பக்தர்களின் கோரிக்கைகளில் முக்கியமானது

 * கழிப்பிட வசதி கோரிக்கை: சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் நலன் கருதி, உடனடியாகப் போதுமான மற்றும் சுகாதாரமான கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கழிப்பிட வசதி இல்லாததால் பெரும் சிரமத்திற்கும், சங்கடத்திற்கும் உள்ளாகி வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

* சுகாதார சீர்கேடு புகார்: மேலும், நகரில் பல இடங்களில் குப்பைகள் வாரக்கணக்கில் அகற்றப்படாமல் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும், இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் அமைச்சரிடம் குற்றம் சாட்டினர்.

அமைச்சரின் உடனடி நடவடிக்கை

பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளைக் கவனத்துடன் கேட்டுக்கொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, தாமதிக்காமல் உடனடி நடவடிக்கை எடுத்தார்.

அவர் உடனடியாக நகராட்சி நிர்வாக அதிகாரிகளையும், நகராட்சி ஆணையர் மஞ்சுளா உள்ளிட்டோரை அழைத்து, பக்தர்களுக்குத் தேவையான கழிப்பிட வசதியை விரைந்து ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அத்துடன், நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் குறித்துப் புகார் வந்திருப்பதால், குப்பைகளை நாள்தோறும் முறையாகவும், விரைவாகவும் அகற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்குக் கண்டிப்பாக உத்தரவிட்டார்.

அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு

அமைச்சர்களின் வருகையின்போது, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் அன்பழகன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல நிர்வாகி ஸ்ரீதர், நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் மஞ்சுளா, நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

பின்னர், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த மாவட்ட, நகர நிர்வாகிகள் அமைச்சர் கே. என். நேருவை நேரில் சந்தித்துச் சால்வை அணிவித்துப் பொன்னாடை வழங்கி வாழ்த்து பெற்றனர். சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து அமைச்சரிடம் நேரடியாகக் கோரிக்கை வைக்கப்பட்டதும், அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN SIR ECI: வாக்காளர் பட்டியல் திருத்தம் - வாக்குரிமை, யாருக்கு பிரச்னை? செய்ய வேண்டியது என்ன? உரிய ஆவணங்கள்
TN SIR ECI: வாக்காளர் பட்டியல் திருத்தம் - வாக்குரிமை, யாருக்கு பிரச்னை? செய்ய வேண்டியது என்ன? உரிய ஆவணங்கள்
Tamilnadu Roundup: பாலியல் குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு, இன்று தொடங்கும் SIR, இன்று பொதுத்தேர்வு அட்டவணை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
பாலியல் குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு, இன்று தொடங்கும் SIR, இன்று பொதுத்தேர்வு அட்டவணை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
Covai: கோவை என்கவுன்டர் - 3 பேரும் அடையாளம் காணப்பட்டது எப்படி? உதவிய மொபெட், தட்டி தூக்கிய போலீசார்
Covai: கோவை என்கவுன்டர் - 3 பேரும் அடையாளம் காணப்பட்டது எப்படி? உதவிய மொபெட், தட்டி தூக்கிய போலீசார்
Covai: கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்- நடந்தது என்ன?
Covai: கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்- நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thanjavur Boy German Girl Marriage | தமிழ் பையன் ஜெர்மன் பொண்ணு தஞ்சாவூரில் டும்..டும்..COUPLE GOALS
Kovai Student Sexual Assault |கூட்டு பாலியல் வன்கொடுமைமாணவிக்கு நேர்ந்த கொடூரம் கோவையில் பயங்கரம்
TVK Karur Stampede Case | பனையூர் வந்த CBI அதிகாரிகள்பரபரக்கும் தவெக அலுவலகம்
அட்டாக் செய்த சீமான் பெருந்தன்மையாக நடந்த EPS வைரலாகும் வீடியோ | Edappadi Palanisamy vs Seeman

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR ECI: வாக்காளர் பட்டியல் திருத்தம் - வாக்குரிமை, யாருக்கு பிரச்னை? செய்ய வேண்டியது என்ன? உரிய ஆவணங்கள்
TN SIR ECI: வாக்காளர் பட்டியல் திருத்தம் - வாக்குரிமை, யாருக்கு பிரச்னை? செய்ய வேண்டியது என்ன? உரிய ஆவணங்கள்
Tamilnadu Roundup: பாலியல் குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு, இன்று தொடங்கும் SIR, இன்று பொதுத்தேர்வு அட்டவணை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
பாலியல் குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு, இன்று தொடங்கும் SIR, இன்று பொதுத்தேர்வு அட்டவணை, தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
Covai: கோவை என்கவுன்டர் - 3 பேரும் அடையாளம் காணப்பட்டது எப்படி? உதவிய மொபெட், தட்டி தூக்கிய போலீசார்
Covai: கோவை என்கவுன்டர் - 3 பேரும் அடையாளம் காணப்பட்டது எப்படி? உதவிய மொபெட், தட்டி தூக்கிய போலீசார்
Covai: கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்- நடந்தது என்ன?
Covai: கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்- நடந்தது என்ன?
TN Rain: தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழை; எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.? வானிலை மையம் கூறியுள்ளது என்ன.?
தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழை; எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.? வானிலை மையம் கூறியுள்ளது என்ன.?
Mahindra XEV 9S EV: மஹிந்த்ராவின் அடுத்த பீஸ்ட் - XEV 9S மின்சார கார் - நச்சுன்னு நாலு பாயிண்ட், ஹைப்ரிட் டிசைன், ரேஞ்ச்
Mahindra XEV 9S EV: மஹிந்த்ராவின் அடுத்த பீஸ்ட் - XEV 9S மின்சார கார் - நச்சுன்னு நாலு பாயிண்ட், ஹைப்ரிட் டிசைன், ரேஞ்ச்
November School Holidays: லீவுடன் தொடங்கிய நவம்பர்; இந்த மாதம் எத்தனை நாள் தெரியுமா? இதோ பட்டியல்!
November School Holidays: லீவுடன் தொடங்கிய நவம்பர்; இந்த மாதம் எத்தனை நாள் தெரியுமா? இதோ பட்டியல்!
All Party Meet on 6th: பொதுக்கூட்ட கட்டுப்பாடுகள்; நவம்பர் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்; தமிழ்நாடு அரசு அழைப்பு
பொதுக்கூட்ட கட்டுப்பாடுகள்; நவம்பர் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்; தமிழ்நாடு அரசு அழைப்பு
Embed widget