மேலும் அறிய

மீன்வளத் துறையில் காத்திருக்கும் பிரம்மாண்ட வாய்ப்புகள்! - பட்டம் பெற்ற மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்பத்திய ஜாய் கிருஷ்ணா ஜெனா

டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் மீன்வளத் துறையில் காத்திருக்கும் பிரம்மாண்ட வாய்ப்புகள் குறித்து ஜாய் கிருஷ்ணா ஜெனா மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

நாகப்பட்டினம்: தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர். என். ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், 435 மாணவ மாணவிகளுக்குப் பட்டங்கள் நேரடியாக வழங்கப்பட்டன. மீன்வளத் துறையின் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியம் என விழாப் பேருரையாற்றிய விருந்தினர் வலியுறுத்தி பேசினார்.

பட்டமளிப்பு விழா மற்றும் பதக்கங்கள்

பத்தாவது பட்டமளிப்பு விழாவில், மொத்தம் 435 மாணவ மாணவிகளுக்குப் பட்டங்கள் நேரடியாக வழங்கப்பட்டன. மேலும், 77 மாணவ-மாணவிகள் தங்களது பட்டங்களைத் தபால் மூலம் பெற உள்ளனர்.

பட்டங்களின் விவரங்கள்

 * இளநிலை மீன்வள அறிவியல்: 283

 * பி.டெக் (மீன்வளப் பொறியியல்): 27

 * பி.டெக் (உயிர் தொழில்நுட்பவியல்): 26

 * முதுநிலை மீன்வள அறிவியல்: 46

 * முனைவர் பட்டங்கள்: 21

 * மற்ற பட்டப் படிப்புகள்: 32 (பி.டெக் (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்), பி.டெக் (மீன்வள மாலுமிக்கலைத் தொழில்நுட்பவியல்), பி.டெக் (உணவு தொழில்நுட்பவியல்), பி.பி.ஏ (மீன்வள வணிக மேலாண்மை) மற்றும் முதுநிலைப் படிப்புகள்) மேலும் 

ஆளுநர், வெவ்வேறு கல்விச் சாதனைகளுக்காக மொத்தம் 86 பதக்கங்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.

பதக்கம் வென்றோர் பட்டியல் 

  • 2020-2021 இளநிலை மீன்வள பட்டப்படிப்பு எஸ். பவதாரணி - 10 பதக்கங்கள் 
  •  2021-2022 இளநிலை மீன்வள பட்டப்படிப்பு எஸ். கவி ரேவந்த் - 11 பதக்கங்கள் 
  • 2022-2023 முதுநிலை மீன்வள அறிவியல் பி.என்.ஐஸ்வர்யா - 7 பதக்கங்கள்
  • 2020-2021 பி.டெக் மீன்வளப் பொறியியல் எம். பிருந்தா - 3 பதக்கங்கள் |
  • 2020-2021 பி.பி.ஏ மீன்வள வணிக மேலாண்மை ஆர்.பி.ஹேமலட்சுமி - 3 பதக்கங்கள் 
  • 2021-2022 எம்.பி.ஏ மீன்வள வணிக மேலாண்மை ஹிமான்சு பாக்டே - 2 பதக்கங்கள் 
  • 2022-2023 முனைவர் பட்டப்படிப்பு | செல்வி. எம்.ஜோஷ்னா - 4 பதக்கங்கள் 

முதன்மை விருந்தினர் உரை 

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (புதுதில்லி) துணை இயக்குநர் தலைவர் (மீன்வள அறிவியல்) முனைவர் ஜாய் கிருஷ்ணா ஜெனா இந்த விழாவின் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டமளிப்பு உரையை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில், இப்பல்கலைக்கழகம் தொடங்கி 13 ஆண்டுகளில் மீன்வளத்தில் பல புதிய பன்முகத்துறைப் பட்டப் படிப்புகளை உருவாக்கியதற்காகப் பாராட்டினார். வரும் 2050 -ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 9 பில்லியனுக்கும் அதிகமாகவும், இந்தியாவின் மக்கள்தொகை 1.67 பில்லியனாகவும் இருக்கும் என்று எடுத்துரைத்தார். இந்தக் காலங்களில் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மீன்வளத்துறை முக்கியப் பங்காற்றும் என்றும், தனிநபர் வருமானத்தை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மீன்வள உற்பத்தியை இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும் என்றார். மேலும் முக்கிய இலக்குகள் மற்றும் சாதனைகள் குறித்து பட்டியல் இட்டார்.

*மீன்வளத்துறையின் வருடாந்திர வளர்ச்சியை 6 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

*பட்டதாரிகள் அரசு, தனியார் மற்றும் சுய தொழில் தொடங்குவதன் மூலம் இந்த இலக்கை அடையலாம்.

 * உலகிலேயே தரமான மீன்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு மீன்வளக் கல்வி மற்றும் நிபுணர்களின் பங்கு மிக முக்கியம்.

 * மீன்வளக் கல்வி, ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளான SDG 2 (பசியின்மை) மற்றும் SDG 14 (நீருக்கடியில் வாழ்க்கை) ஆகியவற்றை ஆதரிக்கிறது.

 * 2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மீன்வளத் துறைக்கு இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.2704 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. இது கடல் உணவு ஏற்றுமதியில் இந்தியாவின் சாதனைக்குச் சான்று.

 * மேலும், மாணவர்கள் இந்த நாட்டிற்குச் சேவை செய்ய, தங்கள் முன் உள்ள வாய்ப்புகளைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவுரை வழங்கினார்.

ஆளுநர் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள்

பட்டமளிப்பு விழாவுக்கு முன்பாக, தமிழ்நாடு ஆளுநர், பல்கலைக்கழக வளாகத்தில் அவிசினியா அலையாத்தி தாவரத்தை நடவுசெய்து, சதுப்பு நிலக் காடுகளை உருவாக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மேலும், மாணவர்களுக்கான உயர்தொழில்நுட்ப முறையான பயோஃப்ளாக் (Biofloc Technology) அனுபவக் கற்றல் மற்றும் ஆராய்ச்சிக் கூடத்தையும் பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நா. பெலிக்ஸ் அனைவரையும் வரவேற்றுப் பல்கலைக்கழகத்தின் அறிக்கையை வாசித்தார். அதில் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும் மாநிலம் முழுவதும் பரவியுள்ள 40 உறுப்பு அலகுகளின் மூலம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கச் செயல்பாடுகளில் நிகழ்த்திய சாதனைகளை எடுத்துரைத்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
WPL 2026 Auction: உலகக் கோப்பை நாயகிக்கு குவிந்த கோடிகள் - ஷிகா ஷாக், மகளிர் ப்ரீமியர் லீக் ஏலம் - வீராங்கனைகள் லிஸ்ட்
WPL 2026 Auction: உலகக் கோப்பை நாயகிக்கு குவிந்த கோடிகள் - ஷிகா ஷாக், மகளிர் ப்ரீமியர் லீக் ஏலம் - வீராங்கனைகள் லிஸ்ட்
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
WPL 2026 Auction: உலகக் கோப்பை நாயகிக்கு குவிந்த கோடிகள் - ஷிகா ஷாக், மகளிர் ப்ரீமியர் லீக் ஏலம் - வீராங்கனைகள் லிஸ்ட்
WPL 2026 Auction: உலகக் கோப்பை நாயகிக்கு குவிந்த கோடிகள் - ஷிகா ஷாக், மகளிர் ப்ரீமியர் லீக் ஏலம் - வீராங்கனைகள் லிஸ்ட்
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Siddaramaiah Vs DKS: கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
Embed widget