மேலும் அறிய

சட்டமன்ற தேர்தல் 2026

(Source:  Poll of Polls)

காலம் கடந்து கடை ஆணைக்கு வந்த காவிரி நீர்- விவசாயிகளாக அவதாரம் எடுத்த லஸ்கர்கள்....!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைமடைக்கு வந்த காவிரி நீரை அதிகாரிகள் பாசனத்திற்காக திறந்து விட்டுள்ளனர்.

கர்நாடகாவில் கனமழை

காவிரியில் கர்நாடகம் தண்ணீர் தர மறுத்த நிலையில் வருண பகவானின் கருணையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீரானது திறக்கப்பட்டது. அதன் பலனாக மேட்டூர் அணையில் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து கடந்த மாதம் 28 -ஆம் தேதி காவிரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. திருச்சி முக்கொம்பிற்கு வந்த காவிரி நீரை அங்கிருந்து காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனை அடுத்து சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையார் கடலில் வீணாக கலந்தது.

கடைமடைக்கு வந்த காவிரி 

இந்நிலையில் பாசன வாய்க்கால்கள் ஆறுகளில் தாமதமாக வந்த தண்ணீர் இன்று அதிகாலை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேலையூர் கடையனையை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து தலைமையில் பாரம்பரிய முறைப்படி காவிரிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனை அடுத்து கடையனையின் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர்பாசனம் மற்றும் கடலுக்கு திறந்து விடப்பட்டது. அப்போது நீர்வளத்துறை அதிகாரிகள்மலர்கள் மற்றும் நெல் விதைகளை தூவி விவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்தனர்.


காலம் கடந்து கடை ஆணைக்கு வந்த காவிரி நீர்- விவசாயிகளாக அவதாரம் எடுத்த லஸ்கர்கள்....!

அழைப்பு விடுக்கப்படாத விவசாயிகள் 

கடையனையில் தண்ணீர் திறப்பில் சிறப்பிற்கும் விவசாயிகள் யாரும் அழைக்கப்படாத நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மயிலாடுதுறை உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் விவசாயிகள் இல்லாமல் தண்ணீர் திறந்து, விவசாயிகளுக்கு மாற்றாக பொதுப்பணித்துறையின் கடைமடை ஊழியர்களான லஸ்கர் எனப்படும் பாசன உதவியாளர்களுக்கு பச்சை துண்டுகளை அணிவித்து லஸ்கர்களை விவசாயிகளாக உருமாற்றி நிகழ்ச்சியை நடத்தி முடித்தார். 


காலம் கடந்து கடை ஆணைக்கு வந்த காவிரி நீர்- விவசாயிகளாக அவதாரம் எடுத்த லஸ்கர்கள்....!

விவசாயிகள் அதிருப்தி 

பொதுவாக காலம் காலமாக தண்ணீர் திறக்கும் நிகழ்வில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் பூஜைகள் செய்து, நெல் மணிகளை தூவி தண்ணீர் திறந்துவிடும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளே லஸ்கர்களுக்கு பச்சை துண்டு அணிவித்து தண்ணீர் திறந்த சம்பவம் விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காலம் கடந்து கடை ஆணைக்கு வந்த காவிரி நீர்- விவசாயிகளாக அவதாரம் எடுத்த லஸ்கர்கள்....!

இந்த கதவணையில் தண்ணீர் தேக்கி வைத்து ஓவ்வொரு பாசன ஆறுகள், கிளை வாய்க்கால்களுக்கும், மற்றும் பெருந்தோட்டம் ஏரிக்கும் முறைவைத்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் 3057 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு பெருந்தோட்டம் ஏரி பாசனத்தின் மூலம் 2020 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. தண்ணீர் காலதாமதமாக வந்தடைந்துள்ள அதே நேரம், முறைவைக்காமல் தண்ணீரை தொடர்ந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


காலம் கடந்து கடை ஆணைக்கு வந்த காவிரி நீர்- விவசாயிகளாக அவதாரம் எடுத்த லஸ்கர்கள்....!

லஸ்கர் என்றால் இதுதான் 

பொதுப்பணித்துறையின் கடைமட்ட ஊழியர்களே லஸ்கர்கள். கரைக்காவலர் என அர்த்தம். தபேதார், தாசில்தார் போல ஆங்கிலேயர்கள் வைத்த வடமொழி பெயரே லஸ்கர் ஆகும். வாய்க்கால் பராமரிப்பில் இருந்து, வயக்கட்டுகளுக்கு முறை வைத்து தண்ணீர் விடுவது, மணல் திருடர்களை மடக்கிப் பிடிப்பது வரை பல பணிகளுக்கு இவர்கள் தான் பொறுப்புகள். இந்தக் களப்பணியாளர்களுக்கு நீர்க்கட்டி, மணியக்காரர், கொரம்பு மாணிக்கர் என ஊருக்கு ஒரு வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.


காலம் கடந்து கடை ஆணைக்கு வந்த காவிரி நீர்- விவசாயிகளாக அவதாரம் எடுத்த லஸ்கர்கள்....!

“லஸ்கர் வேலை இன்னைக்கு நேத்து உருவானதில்லை. ராஜாக்கள் காலத்துல இருந்தே இருக்கு. கரிகால் சோழன் கல்லணை கட்டுன காலத்துலயே ஆறுகளை பராமரிச்சு, வயக்காடுகளுக்கு சரியா தண்ணி கட்டிவிடுறதுக்காக ஆட்களை நியமித்து. அரசரே கருவூலத்துல இருந்து நெல் அளந்து கூலி கொடுத்துள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. ஆங்கிலேயர்கள் காலத்துலதான் 'லஸ்கர்'னு இதை மாற்றியுள்ளனர். சுதந்திரத்துக்குப் பிறகு 1951-ல் பொதுப்பணித்துறை செயலாளரா இருந்த மார்ட்டியூ, 3500 பேரை லஸ்கரா நியமித்தது எல்லாரையும் பணி நிரந்தரம் செய்துள்ளார். அப்புறம் 'லஸ்கர்'ங்கிற பேரை நீக்கிட்டு 'பாசன உதவியாளர்' எங்கிற பேரை வைத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விளையாட்டு விடுதி சேர்க்கை 2026: கடைசி நாள் மே 3 - முழு விவரங்கள் இதோ...
விளையாட்டு விடுதி சேர்க்கை 2026: கடைசி நாள் மே 3 - முழு விவரங்கள் இதோ...
ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
ஒரு 'சாஸ்' பாக்கெட்டுக்காக இப்படியா? மயிலாடுதுறையை அதிரவைத்த உணவகத் தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சி..!
"வெயில் தாங்கல... வாழைப்பழம் வேண்டாம்... நுங்கு தான் வேணும்!" - வியாபாரியிடம் அடம் பிடித்த குரங்கு...நெகிழ வைத்த காட்சி...
சீர்காழியில் பரபரப்பு: நகராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து அதிமுகவினர் தர்ணா! பின்னணி என்ன?
சீர்காழியில் பரபரப்பு: நகராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து அதிமுகவினர் தர்ணா! பின்னணி என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவுக்கு 98-120 இடங்கள்.. கருத்துக்கணிப்பு முடிவுகளில் சர்ப்ரைஸ் - சிக்கலில் விஜய்!
தவெகவுக்கு 98-120 இடங்கள்.. கருத்துக்கணிப்பு முடிவுகளில் சர்ப்ரைஸ் - சிக்கலில் விஜய்!
TVK Vijay : ’விஜய்க்கு 120 வரை தொகுதிகள்’ இதையெல்லாம் நம்பலாமா?
’விஜய்க்கு 120 வரை தொகுதிகள்’ இதையெல்லாம் நம்பலாமா?
TVK Vijay: இரட்டை இலக்கத்தில் தவெக! ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியா விஜய்? எக்ஸிட் போல் முடிவுகள்
TVK Vijay: இரட்டை இலக்கத்தில் தவெக! ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியா விஜய்? எக்ஸிட் போல் முடிவுகள்
'தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி’ Times Now, Vote Vibe கருத்துக் கணிப்பில் தகவல்..! - உற்சாகத்தில் தொண்டர்கள்!!
'தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி’ Times Now கணிப்பில் அதிரடி..!
TN Exit Poll Results :
TN Exit Poll Results : "ஆட்சியை தக்க வைக்கும் திமுக” சாணக்கியா Strategies கணிப்பு..!
Honda City Facelift: அடி சக்க.! சூப்பரான கார் இன்னும் சூப்பரா மாறப்போகுது.! ஃபேஸ்லிஃப்ட்டில் ப்ரீமியமாகும் ஹோண்டா சிட்டி
அடி சக்க.! சூப்பரான கார் இன்னும் சூப்பரா மாறப்போகுது.! ஃபேஸ்லிஃப்ட்டில் ப்ரீமியமாகும் ஹோண்டா சிட்டி
"வெற்றியை நோக்கி நாம் தமிழர் கட்சி” கருத்துக் கணிப்பில் மகிழ்ச்சி தகவல்..!
West Bengal Exit Poll: மேற்கு வங்கத்தை ஆளப் போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் மம்தா.?
மேற்கு வங்கத்தை ஆளப் போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் மம்தா.?
Embed widget