மேலும் அறிய

காலம் கடந்து கடை ஆணைக்கு வந்த காவிரி நீர்- விவசாயிகளாக அவதாரம் எடுத்த லஸ்கர்கள்....!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைமடைக்கு வந்த காவிரி நீரை அதிகாரிகள் பாசனத்திற்காக திறந்து விட்டுள்ளனர்.

கர்நாடகாவில் கனமழை

காவிரியில் கர்நாடகம் தண்ணீர் தர மறுத்த நிலையில் வருண பகவானின் கருணையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீரானது திறக்கப்பட்டது. அதன் பலனாக மேட்டூர் அணையில் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து கடந்த மாதம் 28 -ஆம் தேதி காவிரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. திருச்சி முக்கொம்பிற்கு வந்த காவிரி நீரை அங்கிருந்து காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனை அடுத்து சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையார் கடலில் வீணாக கலந்தது.

கடைமடைக்கு வந்த காவிரி 

இந்நிலையில் பாசன வாய்க்கால்கள் ஆறுகளில் தாமதமாக வந்த தண்ணீர் இன்று அதிகாலை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேலையூர் கடையனையை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து தலைமையில் பாரம்பரிய முறைப்படி காவிரிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனை அடுத்து கடையனையின் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர்பாசனம் மற்றும் கடலுக்கு திறந்து விடப்பட்டது. அப்போது நீர்வளத்துறை அதிகாரிகள்மலர்கள் மற்றும் நெல் விதைகளை தூவி விவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்தனர்.


காலம் கடந்து கடை ஆணைக்கு வந்த காவிரி நீர்- விவசாயிகளாக அவதாரம் எடுத்த லஸ்கர்கள்....!

அழைப்பு விடுக்கப்படாத விவசாயிகள் 

கடையனையில் தண்ணீர் திறப்பில் சிறப்பிற்கும் விவசாயிகள் யாரும் அழைக்கப்படாத நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மயிலாடுதுறை உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் விவசாயிகள் இல்லாமல் தண்ணீர் திறந்து, விவசாயிகளுக்கு மாற்றாக பொதுப்பணித்துறையின் கடைமடை ஊழியர்களான லஸ்கர் எனப்படும் பாசன உதவியாளர்களுக்கு பச்சை துண்டுகளை அணிவித்து லஸ்கர்களை விவசாயிகளாக உருமாற்றி நிகழ்ச்சியை நடத்தி முடித்தார். 


காலம் கடந்து கடை ஆணைக்கு வந்த காவிரி நீர்- விவசாயிகளாக அவதாரம் எடுத்த லஸ்கர்கள்....!

விவசாயிகள் அதிருப்தி 

பொதுவாக காலம் காலமாக தண்ணீர் திறக்கும் நிகழ்வில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் பூஜைகள் செய்து, நெல் மணிகளை தூவி தண்ணீர் திறந்துவிடும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளே லஸ்கர்களுக்கு பச்சை துண்டு அணிவித்து தண்ணீர் திறந்த சம்பவம் விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காலம் கடந்து கடை ஆணைக்கு வந்த காவிரி நீர்- விவசாயிகளாக அவதாரம் எடுத்த லஸ்கர்கள்....!

இந்த கதவணையில் தண்ணீர் தேக்கி வைத்து ஓவ்வொரு பாசன ஆறுகள், கிளை வாய்க்கால்களுக்கும், மற்றும் பெருந்தோட்டம் ஏரிக்கும் முறைவைத்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் 3057 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு பெருந்தோட்டம் ஏரி பாசனத்தின் மூலம் 2020 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. தண்ணீர் காலதாமதமாக வந்தடைந்துள்ள அதே நேரம், முறைவைக்காமல் தண்ணீரை தொடர்ந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


காலம் கடந்து கடை ஆணைக்கு வந்த காவிரி நீர்- விவசாயிகளாக அவதாரம் எடுத்த லஸ்கர்கள்....!

லஸ்கர் என்றால் இதுதான் 

பொதுப்பணித்துறையின் கடைமட்ட ஊழியர்களே லஸ்கர்கள். கரைக்காவலர் என அர்த்தம். தபேதார், தாசில்தார் போல ஆங்கிலேயர்கள் வைத்த வடமொழி பெயரே லஸ்கர் ஆகும். வாய்க்கால் பராமரிப்பில் இருந்து, வயக்கட்டுகளுக்கு முறை வைத்து தண்ணீர் விடுவது, மணல் திருடர்களை மடக்கிப் பிடிப்பது வரை பல பணிகளுக்கு இவர்கள் தான் பொறுப்புகள். இந்தக் களப்பணியாளர்களுக்கு நீர்க்கட்டி, மணியக்காரர், கொரம்பு மாணிக்கர் என ஊருக்கு ஒரு வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.


காலம் கடந்து கடை ஆணைக்கு வந்த காவிரி நீர்- விவசாயிகளாக அவதாரம் எடுத்த லஸ்கர்கள்....!

“லஸ்கர் வேலை இன்னைக்கு நேத்து உருவானதில்லை. ராஜாக்கள் காலத்துல இருந்தே இருக்கு. கரிகால் சோழன் கல்லணை கட்டுன காலத்துலயே ஆறுகளை பராமரிச்சு, வயக்காடுகளுக்கு சரியா தண்ணி கட்டிவிடுறதுக்காக ஆட்களை நியமித்து. அரசரே கருவூலத்துல இருந்து நெல் அளந்து கூலி கொடுத்துள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. ஆங்கிலேயர்கள் காலத்துலதான் 'லஸ்கர்'னு இதை மாற்றியுள்ளனர். சுதந்திரத்துக்குப் பிறகு 1951-ல் பொதுப்பணித்துறை செயலாளரா இருந்த மார்ட்டியூ, 3500 பேரை லஸ்கரா நியமித்தது எல்லாரையும் பணி நிரந்தரம் செய்துள்ளார். அப்புறம் 'லஸ்கர்'ங்கிற பேரை நீக்கிட்டு 'பாசன உதவியாளர்' எங்கிற பேரை வைத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!
ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. உங்க வீட்டுக்கே வரும் அரிசியும் சர்க்கரையும்! எப்போ தெரியுமா?
ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. உங்க வீட்டுக்கே வரும் அரிசியும் சர்க்கரையும்! எப்போ தெரியுமா?
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மயிலாடுதுறை ஆட்சியரின் புதிய முயற்சி..!
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்வு பேரணி: மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேரணி!
நற்செய்தி..! இருசக்கர வாகனம் வாங்க மானியம்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...
மிஸ் பண்ணிடாதீங்க!  ரூ.50,000 டூவிலர் மானியம்: அப்ளை பண்ண கூடுதல் டைம்!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
Skoda Kodiaq RS Sold Out: தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
Embed widget