மேலும் அறிய

’’இலங்கை தமிழர்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகிறோம்’’- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

திண்டுக்கல்லில் நடந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மஸ்தான் ஆகியோர் பங்கேற்றனர்

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை ஒருங்கிணைத்து, தோட்டனூத்து கிராமத்தில் ரூ.17 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

’’இலங்கை தமிழர்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகிறோம்’’- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
 
இதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கினர். இதையடுத்து தோட்டனூத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர். பின்னர் இலங்கை தமிழர்களுக்கு சேலை, துண்டு, பாத்திரங்கள், கியாஸ் அடுப்பு உள்பட ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
 
விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தமிழகத்துக்கு வந்த தமிழர்களை பாதுகாக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்தில் அமைக்கப்பட உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கான கட்டுமான பணிகளை 120 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்ததும் இலங்கை தமிழர்கள் அந்த முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். இதேபோல் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் தி.மு.க. அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
 

’’இலங்கை தமிழர்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகிறோம்’’- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
 
மேலும் அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக சட்டசபையில் 110 விதியின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேலும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் அனைவருக்கும் இந்திய குடியுரிமை பெற்றுத்தரும் நடவடிக்கையையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்கள், இலங்கை தமிழர்களுக்காக செயல்படுத்திய நலத்திட்டங்கள் போல் கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்கள் யாரும் செயல்படுத்தியதில்லை. இனி செய்யப்போவதும் இல்லை என்றார்.

’’இலங்கை தமிழர்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகிறோம்’’- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
 
அதன்பிறகு அமைச்சர் மஸ்தான் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையை உருவாக்கினார். பின்னர் தமிழகத்தில் உள்ள 106 இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 321 பயனாளிகளுக்காக தற்போது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட உள்ளது. இங்கு கட்டப்படும் ஒவ்வொரு வீடும் ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்தில் கட்டப்படுகிறது என்றார். முன்னதாக தோட்டனூத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைய உள்ள இடம், திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள அரண்மனைகுளம் ஆகியவற்றை அமைச்சர்கள் இ.பெரியசாமி, மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK vs PMK : அடித்து விரட்டிய திமுக! பழி வாங்கிய பாமக! அழுது புலம்பும் ஜெகத்ரட்சகன்! நடந்தது என்ன?DK Shivakumar vs Siddaramaiah : துணை முதல்வர் பதவிக்கு ஆப்பு?வேட்டு வைக்கும் சித்தராமையா!MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Embed widget