மேலும் அறிய

’’இலங்கை தமிழர்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகிறோம்’’- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

திண்டுக்கல்லில் நடந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மஸ்தான் ஆகியோர் பங்கேற்றனர்

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை ஒருங்கிணைத்து, தோட்டனூத்து கிராமத்தில் ரூ.17 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

’’இலங்கை தமிழர்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகிறோம்’’- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
 
இதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கினர். இதையடுத்து தோட்டனூத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர். பின்னர் இலங்கை தமிழர்களுக்கு சேலை, துண்டு, பாத்திரங்கள், கியாஸ் அடுப்பு உள்பட ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
 
விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தமிழகத்துக்கு வந்த தமிழர்களை பாதுகாக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்தில் அமைக்கப்பட உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கான கட்டுமான பணிகளை 120 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்ததும் இலங்கை தமிழர்கள் அந்த முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். இதேபோல் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் தி.மு.க. அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
 

’’இலங்கை தமிழர்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகிறோம்’’- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
 
மேலும் அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக சட்டசபையில் 110 விதியின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேலும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் அனைவருக்கும் இந்திய குடியுரிமை பெற்றுத்தரும் நடவடிக்கையையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்கள், இலங்கை தமிழர்களுக்காக செயல்படுத்திய நலத்திட்டங்கள் போல் கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்கள் யாரும் செயல்படுத்தியதில்லை. இனி செய்யப்போவதும் இல்லை என்றார்.

’’இலங்கை தமிழர்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகிறோம்’’- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
 
அதன்பிறகு அமைச்சர் மஸ்தான் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையை உருவாக்கினார். பின்னர் தமிழகத்தில் உள்ள 106 இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 321 பயனாளிகளுக்காக தற்போது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட உள்ளது. இங்கு கட்டப்படும் ஒவ்வொரு வீடும் ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்தில் கட்டப்படுகிறது என்றார். முன்னதாக தோட்டனூத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைய உள்ள இடம், திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள அரண்மனைகுளம் ஆகியவற்றை அமைச்சர்கள் இ.பெரியசாமி, மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பழனி கோயிலில் அர்ச்சகர், ஓதுவார் ஆக அரிய வாய்ப்பு! இலவச பயிற்சி, மாதம் ரூ 10,000 உதவித்தொகை!
பழனி கோயிலில் அர்ச்சகர், ஓதுவார் ஆக அரிய வாய்ப்பு! இலவச பயிற்சி, மாதம் ரூ 10,000 உதவித்தொகை!
பழனி முருகன் கோயில்: ரூ.100 கோடி வருவாய் ஈட்டி புதிய வரலாறு! முழு விபரம் இதோ!
பழனி முருகன் கோயில்: ரூ.100 கோடி வருவாய் ஈட்டி புதிய வரலாறு! முழு விபரம் இதோ!
வத்திராயிருப்பில் ஆட்சியர் சுகபுத்ரா அதிரடி ஆய்வு: மக்கள் நலன் காக்க முக்கிய அறிவுரைகள்!
வத்திராயிருப்பில் ஆட்சியர் சுகபுத்ரா அதிரடி ஆய்வு: மக்கள் நலன் காக்க முக்கிய அறிவுரைகள்!
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget