மேலும் அறிய

’’இலங்கை தமிழர்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகிறோம்’’- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

திண்டுக்கல்லில் நடந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மஸ்தான் ஆகியோர் பங்கேற்றனர்

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை ஒருங்கிணைத்து, தோட்டனூத்து கிராமத்தில் ரூ.17 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

’’இலங்கை தமிழர்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகிறோம்’’- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
 
இதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கினர். இதையடுத்து தோட்டனூத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர். பின்னர் இலங்கை தமிழர்களுக்கு சேலை, துண்டு, பாத்திரங்கள், கியாஸ் அடுப்பு உள்பட ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
 
விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தமிழகத்துக்கு வந்த தமிழர்களை பாதுகாக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்தில் அமைக்கப்பட உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கான கட்டுமான பணிகளை 120 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்ததும் இலங்கை தமிழர்கள் அந்த முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். இதேபோல் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் தி.மு.க. அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
 

’’இலங்கை தமிழர்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகிறோம்’’- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
 
மேலும் அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக சட்டசபையில் 110 விதியின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேலும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் அனைவருக்கும் இந்திய குடியுரிமை பெற்றுத்தரும் நடவடிக்கையையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்கள், இலங்கை தமிழர்களுக்காக செயல்படுத்திய நலத்திட்டங்கள் போல் கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்கள் யாரும் செயல்படுத்தியதில்லை. இனி செய்யப்போவதும் இல்லை என்றார்.

’’இலங்கை தமிழர்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகிறோம்’’- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
 
அதன்பிறகு அமைச்சர் மஸ்தான் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையை உருவாக்கினார். பின்னர் தமிழகத்தில் உள்ள 106 இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 321 பயனாளிகளுக்காக தற்போது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட உள்ளது. இங்கு கட்டப்படும் ஒவ்வொரு வீடும் ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்தில் கட்டப்படுகிறது என்றார். முன்னதாக தோட்டனூத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைய உள்ள இடம், திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள அரண்மனைகுளம் ஆகியவற்றை அமைச்சர்கள் இ.பெரியசாமி, மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET UG 2025: திட்டமிட்டபடி வெளியாகுமா நீட் தேர்வு முடிவுகள்? எப்போது? காண்பது எப்படி?
NEET UG 2025: திட்டமிட்டபடி வெளியாகுமா நீட் தேர்வு முடிவுகள்? எப்போது? காண்பது எப்படி?
என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG 2025: திட்டமிட்டபடி வெளியாகுமா நீட் தேர்வு முடிவுகள்? எப்போது? காண்பது எப்படி?
NEET UG 2025: திட்டமிட்டபடி வெளியாகுமா நீட் தேர்வு முடிவுகள்? எப்போது? காண்பது எப்படி?
என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
Embed widget