மேலும் அறிய

வெள்ள அபாய எச்சரிக்கை இருந்தாலும் அச்சமடைய தேவையில்லை - மதுரை மாவட்ட ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில் 190 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மதுரை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை இருந்தபோதிலும் அச்சமடையும் வகையில் எந்த நிலையும் இல்லை - மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் பேட்டி.

மதுரை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட  கோசாகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண மையத்தினை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர் கூறுகையில், “மதுரை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பேரிடர் வெள்ளப்பெருக்கு தொடர்பான ஒத்திகை 5 இடங்களில் நடைபெற்றது. மழை பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் 190 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. கோசாகுளத்தில் மாதிரி நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை இருந்தாலும் அச்சமடைய தேவையில்லை - மதுரை மாவட்ட ஆட்சியர்
ஒவ்வொரு மையத்திலும் தலா 200 பேரை தங்கவைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எப்போது பேரிடம் வந்தாலும் அதனை எதிர்கொள்வது குறித்து முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம், தாலுகா அளவில் வட்டாச்சியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முகாம்களுக்கு மக்களை அழைத்துவருவது, மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு என தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்றளவில் 50% நீர்நீலைகள் முழுமையாக எட்டியுள்ளது, 25 %, 75 % எட்டியுள்ளதால் பருவமழை காலங்களில் நீர்நிலைகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைத்துள்ளோம்.

வெள்ள அபாய எச்சரிக்கை இருந்தாலும் அச்சமடைய தேவையில்லை - மதுரை மாவட்ட ஆட்சியர்
 
வைகை அணையில் இருந்து 7ஆயிரம் கனஅடி நீர் தற்போது வெளியேற்றப்படுகிறது. வைகை ஆற்றில் 60 ஆயிரம் கனஅடி வரை நீர் கடந்த காலங்களில் சென்றுள்ளது. 1 லட்சம் கனஅடி வரை நீர் செல்லும் வகையில் வைகை ஆற்றுப்பகுதி பலமாக உள்ளது. நீரானது 60 ஆயிரம் கனஅடி தாண்டும் போது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளோம். வைகையாற்று கரையோரங்களில் தாழ்வான பகுதிகளாக 27 இடங்களை கண்டறிந்து அங்குள்ள மக்களை மாற்று இடங்களுக்கு சென்று தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைக்கால நோய்க்கான முன்னெச்சரிக்கையாக போதிய மருந்து , மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன.
 
 
இதுபோன்று பேரிடர்காலங்களில் கால்நடைகளை பாதுகாக்கவும் சிறப்பு குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். இதுவரை டெங்கு கொசு உற்பத்தி அதிகமாக இருக்கும் இடங்களை கண்டறிந்து கொசு மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் பகுதிகளில் உள்ள சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது, வைகையாற்று கரையோரங்களில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். மதுரை மாவட்டம் வெள்ள அபாய எச்சரிக்கையில் உள்ளது. ஆனால் தற்போது அச்சமடையும் வகையில் எந்த நிலையும் இல்லை.1077 என்ற டோல் ப்ரீ எண் மூலம் மக்கள் பேரிடர் உதவிக்காக தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
 
 
 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Vijay vs Udhayanidhi : கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Embed widget